சனி, 15 பிப்ரவரி, 2014

தலித் அல்லாத சமூகங்களின் பேரவைக் கூட்டத்தில் ந.இறைவன் பேச்சு

தலித் அல்லாத சமூகங்களின் பேரவைக் கூட்டம் சேலம் வாசவி அரங்கில் 16.10.2013 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ந.இறைவன் பேசியது.

இந்த கூட்டத்தின் தலைவர் நகைமுகன் அவர்களே, ஒருங்கிணைப்பாளர் பொங்கலூர் மணிகண்டன் அவர்களே, பெரியவர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் அவர்களே பல்வேறு சாதி சங்கத்தலைவர்களே நிர்வாகிகளே அனைவருக்கும் வணக்கம் .

நாற்பதுக்கும் மேற்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் இங்கே கூடி இருக்கிறோம். இது சாதிவெறியால் கூடிய கூட்டமல்ல. திருமாவளவன் கும்பலின் எல்லை மீறிய அராஜகங்களையும் தீண்டாமை வன்கொடுமைச் சட்ட பொய் வழக்குகளையும் சகிக்க முடியாமல் கூடியக் கூட்டம் இது.

இந்தக் கும்பலின் அராஜகங்களுக்கும் இந்தச் சட்டத்தின் கொடுமைக்கும் பலியாகாத சமுகம் எதுவும் இல்லை. அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நம் பெண் பிள்ளைகளைக் கடத்தி சீரழித்துப் பின்பு கட்ட பஞ்சாயத்து மூலம் லட்சங்களையும் கோடிகளையும் பேரம் பேசி கொள்ளையடித்து கொழுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலால் பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடக்கின்றன.

வெளியில் தெரிபவை சில. தெரியாதவை பல. தீண்டாமை வன்கொடுமைச் சட்ட பொய் வழக்குகளால் ஒவ்வொரு கிராமமும் கொதித்துக் கிடக்கின்றன. இப்படி நம் மானம் மரியாதைகளை அழித்துக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலிடமிருந்து தற்காத்துக் கொள்ள அமைக்கப்பட்டது தான் தலித் அல்லாத சமூகங்களின் பேரவை.இத்தனை சமூகத் தலைவர்கள் இங்கே கூடியிருப்பது. அனைத்து சமூகங்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாராமாகும்

வெவ்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருந்த வெவ்வேறு சமுகங்களைச் சேர்ந்த நானும் நகைமுகனும் மணிகண்டனும் ஒருங்கி ணைந்தது எதனால்?இந்த சமுக விரோதிகளின் எல்லை மிறிய அராஜகங்களால் தானே?

தருமபுரி நாகராஜ் மரணத்தால் பாதிப்படைந்த அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு எங்களுக்கு முன்னதாகவே சென்றவர் நகைமுகன். அந்த வகையில் அவர் மீது எங்களுக்கு மரியாதை ஏற்பட்டது. அதனால் நாகராஜ் குடும்பத்திற்கு எங்கள் வேலி அறக்கட்டளை மூலம் நிதி அளிப்பதென நாங்கள் முடிவெடுத்தபோது நகைமுகனையும் கலந்து கொள்ளுமாறு அழைத்தோம். இந்த அராஜகக் கும்பலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் பொங்கலூர் மணிகண்டனையும் அழையுங்கள் என்றார் நகைமுகன்.

அவரை அழைத்தபோது, எங்கள் சமூகத்திற்கும் மணிகண்டன் சமூகத்திற்கும் இடையிலான ஒரு பிரச்சினை குறித்து அச்சமில்லை இதழில் வெளியான கடுமையான எங்கள் விமர்சனக் கட்டுரையை அனுப்பி, எங்கள் சமுக உரிமைக்காகப் போராடும்போது நமக்கிடையிலான விமர்சங்கள் என்பது வேறு,


நம் இரு சமூகங்களின் மானம் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் நம் பொது எதிரியை எதிர்க்க நாம் இணைந்து செயல்படுவது வேறு என்ற புரிதலோடு எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு வரமுடியுமானால் வாருங்கள் என்று தான் கடிதம் எழுதினேன்.

அந்த புரிதலோடுதான் தலித் அல்லாத சமூகங்களின் பேரவை அமைப்பின் தலைவராக நீங்கள் இருங்கள் என அவர் என்னைக் கேட்டு கொண்டதும் அதனை நான் ஏற்றுக்கொண்டதும் .

ஆனால் இப்போது அரசியலில் சேர்ந்து செயல்படுவோம் என்றும் மோடியை ஆதரிப்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் கூறுகிறார் மணிகண்டன்.
அரசியலில் ஒவ்வொரு சமூகத்திற்கும் வெவ்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. ஒரு சமுகத்தின் கோரிக்கை இன்னொரு சமுகத்திற்கு எதிரானதாகவும் இருக்கும். அதனால் அந்த சமுகத்தால் ஏற்க முடியாததாகவும் இருக்கும்.

உதாராணமாக கொங்குவேளாளர் சமுகத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் வன்னியர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் காங்கிரசு, திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றில் வேட்பாளார்களாக நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏ., எம்பிக்கள் ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.

இதே போன்று முக்குலத்தோர், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் எங்கள் பகுதிகளில் நிறுத்தி எம்எல்ஏ, எம்பிக்களாக்கி இருக்கின்றன அரசியல் கட்சிகள். ஆனால் ஒரே ஒரு வன்னியரைக் கூட எந்த அரசியல் கட்சியும் கொங்கு வேளாளர் பகுதியான ஈரோட்டிலோ, நாடார் பகுதியான கன்னியாகுமரியிலோ முக்குலத்தோர் பகுதிகளான ராமநாதபுரத்திலோ நிறுத்தி எம்எல்ஏ, எம்பி ஆக்கிய தில்லை.

இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் எங்கள் உரிமை. இந்த நியாயத்தை கொங்கு வேளாளர் சமுகம், முக்குலத்தோர் சமூகமும், நாடார் சமூகமும் ஏற்குமா?

இந்த நிலையில் அரசியலில் நாம் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?


தமிழக அமைச்சரவையில் சேலம் தருமபுரி மாவட்டங்களுக்கு கொங்கு வேளாளர்களை அமைச்சர்களாக்கி இருக்கிறார் ஜெயலலிதா? இந்த அநீதிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நாங்கள் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாததாகும்.


பலன் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொங்கு வேளாளர் சமுகம் எங்கள் உரிமைக்குரலின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளுமா?

தற்போதைய சட்டமன்றத்திலும் ஆளும் கட்சியான அதிமுகவிலும் மற்ற சாதிகளை விட அதிகமான எம்எல்ஏக்களை பெற்றிருப்பது வன்னியர் சமுகம் தான். இந்த அமைச்சரவையில் அதிகமான அமைச்சர்களை பெற்றிருப்பது கொங்கு வேளாளர் சமுகம். அதற்கு அடுத்த நிலையில் தான் முக்குலத்தோர் சமூகம். அதற்கும் கீழே தான் வன்னியர் சமூகம். இது அநீதி என குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் குரலில் உள்ள இந்த நியாயத்தை கொங்கு வேளாளர் சமூகமும் முக்குலத்தோர் சமூகமும் ஏற்குமா ?

எங்கள் தொகுதிகளில் கொங்கு வேளாளர் களுக்கும் முக்குலத்தோருக்கும் நாடாருக்கும் அரசியல் கட்சிகள் விருந்து வைத்தபிறகும்; யானைப் படுத்தாலும் குதிரை மட்டம் என்பார்களே அதுபோல 1952 முதல் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் வேறு எந்த சாதிகளைவிடவும் வன்னியர் சமுகம் தான் அதிகம் பெற்றது.

அப்படி இருந்தும் இதற்கான பிரதிநிதித்துவம் எங்களுக்கு யாரும் வழங்கியதில்லை. இது அநீதி இல்லையா? இது ஒடுக்குமுறை இல்லையா? இதை செய்தவர்கள் அயல் நாட்டவர்களா? தமிழ்நாட்டு சாதிகளைச் சேர்ந்த காமராசரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், ஜெயலலிதாவும் தானே.

இந்த வஞ்சகத்துக்கு எதிராக நாங்கள் போராடுவதில் உள்ள நியாயத்தை மேற்கண்ட முதல்வர்களின் சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
அடுத்ததாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சினை.

* 300, 400 அடிகள் உயர மேடாக இருக்கும் நிலப்பகுதிகளுக்கு ராட்சச நீரேற்று இயந்திரங்கள் மூலம் நீரேற்றி 13 லட்சம் ஏக்கர் மேட்டு நிலங்களுக்கு பாசன வசதி செய்து தந்திருக்கும் மோடியின் சாதனை மகத்தானது.

* மின்சாரத்தைக் கனவில் மட்டுமே கண்டு கொண்டிருந்த குஜராத் மாநில விவசாயிகளுக்கும்; லட்சக்கணக்கான கிராமங்களுக்கும் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றி தடையில்லா மின்சாரத்தை வழங்குவதோடு உபரி மின்சாரத்தை தமிழ் நாட்டுக்கும் தர முன் வந்த மோடியின் இந்த சாதனையும் மகத்தானது தான்.

* டிவி தருகிறேன் என்று சொல்லி ஒருவரும், ,கிரைண்டர் மிக்சி மின்விசிறி தருகிறேன் என்று சொல்லி ஒருவரும் தமிழ்நாட்டில் முதல்வராகும் நிலையில், இலவசங்கள் எதையும் தரமாட்டேன். ஆனால் தடையில்லா மின்சாரம் தருவேன். வேலை வாய்பைப் பெருக்குவேன் என அறிவித்து மூன்று முறை மோதல்வரான மோடியின் தைரியமும் தன்னம்பிக்கையும் மகத்தானது தான்.

இவ்வளவு திறமை மிக்க மோடியின் நிர்வாகத் திறமை குஜராத் மாநில அளவில் முடங்கிவிடாமல் இந்தியா முழுமையும் பயனடையும் வகையில், மோடியை இந்தியப் பிரதமராக பார்க்கும் எண்ணமும் விருப்பமும் எனக்கும் உண்டுதான்.

அமெரிக்க தேர்தல் முறையைப் போல பிரதமரை நேரிடையாகத் தேர்ந்தெடுக்கும் முறை இங்கே இருக்குமானால் அவருக்குத்தான் என் ஓட்டு.
பிஜேபி வென்றால் தான் அவர் பிரதமர்.

தமிழக பிஜேபி தலைமைக்கு மோடி பிரதமர் ஆவதைவிட தங்கள் சாதியினரை எப்படியாவது எம் பியாக்கிவிட வேண்டும் என்ற கவலைதானே அதிகம்.

உதாரணமாக காஞ்சிபுரம் பிஜேபி மாவட்டத் தலைவராக ஒரு நாடாரை நியமிக்கிற அந்த கட்சித் தலைமையின் சாதிப்பாசம் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் தருமபுரியிலோ சேலத்திலோ மற்ற தொகுதிகளிலோ பிஜேபி சார்பில் வன்னியரல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் மோடிக்காக எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து அந்த பிஜேபி வேட்பாளரை எங்களால் எப்படி ஆதரிக்க முடியும்?

தங்களுக்கு உரியதை விட கூடுதல் பலன்களை பெறமுடியும் என்ற நம்பிக்கை உடைய சமூகங்களும் கூடுதல் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற சமூகங்களும் வேண்டுமானால் மோடியை ஆதரிக்கும் முடிவை எடுக்கலாம்.

தங்களுக்கு உரியதைத் தொடர்ந்து பறிகொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியர் சமுகத்தை சார்ந்த என்னால் ஜெயலலிதாவை ஆதரிப்போம் மோடியை ஆதரிப்போம் என்ற நிபந்தனை அற்ற அரசியல் முடிவுகளோடு ஒத்துப்போக முடியாது.

நம் மாணவிகளைக் கடத்தி சீரழித்து கட்டப்பஞ்சாயத்து மூலமும் தீண்டாமை வன்கொடுமை சட்ட பொய் வழக்குகள் மூலமூம் நம் மானம் மரியாதையைக் கேள்விக்குறியாக்கும் - நம் சமூகங்களின் பொது எதிரிகளுக்கு எதிரான போராட்டங்களுக்காகவே இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றினேன்.


தற்போது இந்த அமைப்பின் மூலம் எடுக்க நினைக்கும் அரசியல் முடிவுகளை என்னால் ஏற்க முடியாது என்பதைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி!

தமிழ்த் தேசிய வாதிகள் அறிந்ததும் அறியாததும்

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சையை அடுத்த விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் பேசிய க.ப.அறவாணன் - தமிழன் ஒன்றுக்கும் உதவாதவன். 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் தமிழர்களே காரணமென பேசினாராம்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் 40 விழுக்காடு என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பேசினாராம்.

இந்த இரண்டு பேச்சுக்களும் அருகோவுக்கு சினத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலேயே 84 விழுக்காடு மாநிலமொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இருக்கும் ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான் எனக்கூறி பாரதிராஜாவை மறுக்கிறார் கண்டிக்கிறார் அருகோ.

இது சரிதான்; ஆனால் 84 சதவிகிதம் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்தும் அவனால் தமிழ்நாட்டிடை ஆள முடியவில்லை என்றால் - தமிழன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்வதில் என்ன தப்பு?

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இழப்புகளுக்கும்; இன்னல்களுக்கும் தமிழர்களே காரணம் என்று சொன்னதில் என்ன தப்பு?

மராட்டியத்தில் மராட்டியர் அல்லாத எவரும் முதலமைச்சராக வர முடிந்திருக்கிறதா? மராட்டியத்தின் ஆளுமை மராட்டியரிடம் தானே உள்ளது என்கிறார் அருகோ.

இது எல்லா தமிழ்த்தேசிய வாதிகளும் அறிந்தது.


ஆனால் மராட்டியத்தில் முதல்வர்களாக வந்தவர்களில் 95 சதவீதம் மராட்டா சாதியைச் சேர்ந்த மராட்டியன் என்ற உண்மை தமிழ்த்தேசியவாதிகள் அறியாதது.

தமிழ்நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர முடியாமல் போனதற்கு - இங்கே கீழை ஆரிய சனாதனமும்; மேலை ஆரிய அழிப்புகளும்; திராவிட ஜமீன்தாரியமுமே காரணம் என்கிறார் அருகோ.

இது பெரியார் பித்தத்தின் பாதிப்பு.

இந்த கீழை மேலை ஆரிய சனாதனமும் அழிப்பும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா? ஆந்திராவில்; கேரளாவில்; மகாராஷ்டிரத்தில்; மற்ற மற்ற மாநிலங்களில் இல்லையா? அங்கெல்லாம் அதை மீறி அந்தந்த மாநில மக்கள் ஆட்சிகள் எழுந்திருக்கின்றனவே?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் இன்னும் எத்தனை காலத்துக்கு ஆரிய சனாதனத்தால் அழிந்தோம் என்று புலம்பி; பிதற்றித் திரிவது?


இங்கே இருக்கும் நூற்றுக் கணக்கான தமிழ்த் தேசிய அமைப்புகளால் தமிழுணர்வை வளர்த்து தமிழன் ஆட்சியைக் கொண்டு வர முடியவில்லையே ஏன்?

செல்லாக்காசுகளின் சில்லறைச் சத்தங்களாகி கிடக்கின்றன தமிழ்த் தேசிய அமைப்புகள். ஏன்?

2004-ல் மகாராஷ்டிர மாநிலத்தில் விலாஸ்ராவ்தேஷ்முக் என்பவர் காங்கிரஸ் முதலமைச்சர்; ஆர்.ஆர்.பட்டேல் துணை முதல்வர், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்; சிவசேனாக கட்சியை சேர்ந்த நாராயண ரானே எதிர்க்கட்சித் தலைவர்.

இவர்கள் மூவருமே மராட்டா சாதியினர்.

இது மட்டுமல்ல - 40 அமைச்சர்களில் 20 அமைச்சர்கள் மராட்டா சாதி. 288 எம்.எல்.ஏக்களில் 160-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மராட்டா சாதியினர் என்ற உண்மை எந்த தமிழ்த்தேசியவாதிக்காவது தெரியுமா? 


மகாராஷ்டிராவில் மராட்டா சாதி 31 சதவிகித மக்களை கொண்ட பெரும்பான்மை சாதி.

தமிழ்நாட்டில் வன்னியர் 25 சதவிகிதம் கொண்ட பெரும் பான்மைச் சாதி.

வன்னியனை ஒழிப்பதில் பெரியாருக்கும் காங்கிரஸ் காரனுக்கும் திமுக காரனுக்கும்; அதிமுக காரணுக்கும் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் ஒரே முகம்.

மராட்டா சாதியினரைப் போல் இங்கே வன்னியர் ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள தமிழ்த்தேசிய வாதிகள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் மாரடைப் பால் செத்துப் போவார்கள். அந்த அளவுக்கு தமிழ்த்தேசிய வாதிகளுக்கு வன்னியர் மீது காழ்ப்புணர்ச்சி.

வந்தேறிகளான வைகோபால்சாமியும்; விஜயகாந்தும்; தமிழ்நாட்டை நாங்கள் ஆள்வோம் என்று சொல்லும்போது - தமிழ்த்தேசிய வாதிகள் ஊமைகளாய் முடங்கி ஆமைகளாய் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.


ஆனால் வன்னியன் ஒருவன் நாங்கள் ஆள வேண்டும் என்று சொன்னால் ஆட்சிக்கு வர சாதிதான் தகுதியா என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள்.

என்றைக்கு தமிழ்த் தேசியத்துக்கும் தமிழக அரசியலுக்கும் வன்னியன் ஒருவன் தலைவனாக வருகிறானோ அன்றைக்குத்தான் தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி எழும்.

அக்நிய குல திலகன் வல்லாள மகாராஜன்

திருவண்ணாமலையை தலைமையிடமாக் கொண்டு வல்லாள மகாராஜன் என்பவர் 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளார். 

தமிழ் மூவேந்தர்களுள் சேரர் அக்நி குலத்தவரென்றும், சோழர் சூரிய குலத்தவரென்றும், பாண்டியர் சந்திர குலத்தவர் என்றும் பழம் இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அக்நி குலத்தவரான சேரர்கள் பரசுராமன் வருகைக்குப் பிறகு பலமிழந்து கேரளப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வெளியேறியிருக்கின்றனர்.

அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.

யஹாய்சாளர்களின் முன்னோர்கள் யஹாய்சாளர் என்ற பெயருடன் அறியப்பட்ட பகுதி மைசூருக்கு அருகில் உள்ள துவார சமுத்திரம் பகுதியாகும்.

முனிபுங்கவர் என்பவர் தனது குல தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்தபொழுது புலி ஒன்று அவர் மீது பாய அங்கிருந்த சாலன் என்பவரிடம் இரும்புத்துண்டு ஒன்றனைக் கொடுத்து புலி மீது எறியச் சொன்னாராம்.

சாலன் புலி மீது எறிந்த இரும்பால் அடிபட்டு அப்புலி இறந்து விட்டதாம். சால இதைப் புலி மீது எறி என்ற வாசகமே கன்னடத்தில் யஹாய் சாளர் என மருவியிருக்கிறது இக்காரியத்தைப் பாராட்டி முனிவரின் உத்தரவுப்படி அங்கிருந்த மக்கள் அளித்த பெரும் பரிசுத் தொகையைக் கொண்டு துவார சமுத்திரத்தில் முதன் முதலில கோட்டை கட்டியி ருக்கிறார் சாலன், இதைச் செய்த காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இதோடு இன்னொரு பழம் கதையும் மேற்கண்டதைப் போலவே உள்ளது.

புறநானூற்றில் பாரியின் நண்பராகிய கபிலர் பாரி இறந்த பின் புதல்வியர் இருவரை அழைத்துக் கொண்டு இருங்கோ வேளைச் சந்தித்து “இருங்கோவேளே இவர்கள் பாரியின் மகளிர்,
யானே தந்தைத் தோழன் ஆதலால் இவர்கள் என் மகளிர்.

அந்தணன் புலவன் கொண்டு வந்தனன் நீயே வடவால் முனிவன் வேள்விக் குண்டத்தில் தோன்றித் துவாராபதியை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே
ஆண்கடன் உடைமை யிற்பாண்கடன் ஆற்றி ஒலியற் கண்ணிப் புலி கடி மா அல் யான் தர இவரை மணந்து கொள்க” - என்கிறார்.

ஆக இரண்டு செய்திகளும் ஒரே தன்மையில் இருப்பதால் யஹாய்சாளரின் முன்னோர்கள் வேள்விக் குண்டத்தில் திரெளபதியைப் போல உதித்தவர்களாயிருத்தல் வேண்டும்.

ஆகையால் இவர்கள் சேர குலத்தோடு அடையாளப் படுத்த வேண்டியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேலைச் சாளுக்கியர்களிடம் சிற்றர சாயிருந்து பின் கி.பி.1006-ல் வினயாதித்தியன் என்பவர் துவார சமுத்திரத்தில் யஹாய்சள முதல் அரசை நிறுவுகிறார். இப் பாரம்பரியத்தில் அதிகம் புகழ் யப்றவர் முதலாம் வல்லாளன் கி.பி. 1100 முதல் 1106 வரை ஆட்சி புரிந்துள்ளார்.

இவர் காலத்தில் கட்டப்பட்ட இன்றைய மைசூர் - ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹளபேடு (துவாரசமுத்திரம்) யஹாய்சளேஸ்வரர் ஆலயத்தில் அர்ஜூனன் சுயம்பரத்தில் வென்று திரெளபதியை ஏற்கும் காட்சியையும்; பாரதப் போரின் முடிவில் துச்சாதனனின் ரத்தத்தை முடியில் தேய்த்து சபதத்தை முடிப்பதையும் அருகில் இடும்பி பீமனுடன் ஆனந்த நடனமாடும் காட்சியையும் சிற்பமாக வடித்துள்ளனர்.

அச்சான்று திரெளபதியை அடையாளப் படுத்தி தங்களையும் அக்நியில் தோன்றிய வம்சத்தவர் என அறிவிக்கப்பட்டதற்கான சான்றாகும். அதற்கு அருகில் உள்ள பேளூரில் சென்ன கேசவப் பெருமாள் விஷ்ணு ஆலயம் ஒன்றும் அவர்களால் கட்டப் பட்டது. இந்த இரண்டு ஆலயங் களும் கர்னாடக மாநிலத்தில் கோயில் சிற்பக் கலைக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.

முதலாம் வல்லாளனும் அவரது தம்பி பிட்டிதேவனும் ஜைன சமயத்தவராய் இருந்துள்ளனர். ராமானுஜர் பிட்டி தேவனை வைணவத்திற்கு மாற்றியுள்ளார்.

பிட்டி தேவனின் மகன் முதலாம் நரசிம்மன் 1152 -1173 வரையிலும்; இரண்டாம் வல்லாளன் 1173-1220 வரை 47 ஆண்டுகள் ஆட்சி புரிந்து சாம்ராஜ்யத்தின் நிலையை வலுப்படுத்தியிருந்தார். வடக்கில் இருந்த யாதவ தேவகிரி அரசையும் தோற்கடித்து தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்தார்.

இரண்டாம் வல்லாளனின் மகன் இரண்டாம் நரசிம்மன் 1220 முதல் 1238 வரை ஆட்சி புரிந்துள்ளார். இந்தக் காலத்தில் யஹாய்சாளர்கள் சோழர்களுடன் திருமண உறவு ஏற்படுத்தியிருந்தனர். அதன் பிறகு அருடைய மகன் சோமேஸ்வரன் ஆட்சிப் பகுதி காவிரி வரை தெற்கில் விரிவடைந்து விட்டது.

ஆகையால் ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்து 1238 ‡1267 வடபகுதியை மூன்றாம் நரசிம்மனுக்கும் தென்பகுதியை அதாவது வடதமிழகப் பகுதியை இராமநாதனுக்கும் வழங்கினார். இராமநாதன் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் அப்பொழுது கண்ணனூர் குப்பம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1295 வரை ஆட்சி புரிந்துள்ளார். அவருடைய மகன் மூன்றாம் வல்லாளன் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு 1342 வரை ஆண்டுள்ளார்.

இவர் திருவண்ணாமலையை தலைமை யிடமாகக் கருத மிக முக்கிய காரணம் ஒன்றுள்ளது. அதாவது பஞ்சபூத தலங்களுள் திருவண் ணாமலை அக்நி ஸ்தலமாகும். மேலும் சிவபெருமான் அவர்கள் விஷ்ணுவிற்கும் - பிரம்மாவிற்கும் ஏற்பட்ட போட்டியில் ஜோதி சொரூபமாக பரபிரம்மத்தில் தானே மூலம் என்பதை உணர்த்திய ஸ்தலமாகும்.
மேற்கண்ட வல்லாள மகாராஜன் பெயரில்தான் தற்பொழுது வன்னிய குல சத்திரியரால் நிர்வாகம் செய்யப் படும் வல்லாள மகாராஜன் மண்டபமும் அதோடு சேர்ந்த கடைகளும் திருவண்ணா மலையில் உள்ளன.

மூன்றாம் வல்லாளன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்லி சுல்தான் சார்பாக மாலிக்காபூர் எனும் தளபதி படையயடுத்து 1311-ல் துவாரசமுத்திரத்தை அழித்து செல்வங்களை கொள்ளை யடித்தான். இருந்தும் தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்து தொடர்ந்து இசுலாமியர் ஆதிக்கம் செய்ய விடாமல் போரிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துப் பார்த்தார்.
இறுதியில் 1342-ல் கொல்லப்படுகிறார்.

ஆக தமிழகத்தில் முஸ்லீம் ஆதிக்கத்தை வேரறுக்க தன்னுடைய உடல், பொருள், உயிர் அனைத்தையும் அர்ப்பணம் செய்த தியாக மூர்த்தியாவார். இவருக்கு இரு மனைவிகள் மல்லம்மா, சல்லம்மா என்றிருந்தனர். இருந்தும் குழந்தை இல்லாததால் சிவபெருமானை நோக்கி யாகஞ் செய்து 32 வகை யான அறங்களை கடைபிடித்து தர்மங்களைச் செய்து வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட சிவபெருமான் ஒரு சிறிய திருவிளையாடலுக்குப் பிறகு சல்லம்மாவின் குழந்தையாக உருமாறினார். அதன்பிறகு வானத்தல் பார்வதி தேவியுடன் காட்சியளித்த சிவபெருமான் கர்ம காரியஞ் செய்ய குழந்தை இல்லை எனக் கவலைப்படாதே வல்லாளா நானே உனக்கு மகனாக இருந்து இறுதிக் காரியங்களை செய்கிறேன் என வாக்களித்து மறைந்தாராம். அந்த அடிப்படையில்தான் சுமார் 650 ஆண்டு காலமாக மாசி மகம் நட்சத்திரத்தில் திருவண்ணா மலையில் இருந்து 8 கி.மீ தொலை வில் உள்ள துரிஞ்சலாற்றின் கரையில் உள்ள பள்ளி கொண்டாடபட்டு என்னு மிடத்தில் கர்ம காரியங்கள் செய்து வருகிறார்.

உற்சவர் அருணாச லேஸ்வரருக்கு சம்பந்தனூரைச் சேர்ந்த வன்னியர்கள் சம்பந்தி முறையில் வரவேற்கிறார்கள். இதுவே திருவண்ணாமலையில் இருந்து ஆண்டவர்கள் வன்னியர்களே என்பதற்கான சான்றாகும்.

உத்திரபிரதேசம் முசாபர் நகர் கலவரத்துக்கும் தருமபுரி கலவரத்துக்கும் ஒரே காரணம் பெண்கள் கடத்தல் கற்பழிப்பு

அங்கே பறிக்கப்பட்டது 36 உயிர்கள்
இங்கே எரிந்துபோனது 40 குடிசைகள்

உத்திரப் பிரதேச முசாஃபர் நகர் கலவரத்துக்கு என்ன காரணம்?

“குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேரந்த பெண்களை வேற்று சமுகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து காதல வலையில் விழ வைக்கிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து,

ஒரு வகையான சமூக இறுக்கம் உத்திரபிரதேச முசாஃபர் நகரில் நீண்ட நாட்களாகப் புகைந்து வந்தது. ஒரு காதல் அதையடுத்து ஒரு கொலை. அதற்குப பழிவாங்க இரண்டு கொலைகள் என்று ஆரம்பித்த கலவர நெருப்பு, இரண்டு மாதகாலமாகியும் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.

அடர்த்தியான திராவகத்தை விடபும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய இது போன்ற கலவரங்களை தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஆட்சியாளரும் எதிர்க்கட்சியினரும் கையாளும் விதத்தைப் பார்க்கிறபோது பதற்றம் அதிகமாகிறது.”


இதுதான் முசாஃபர்நகர் கலவரத்துக்கு காரணம் என்கிறது 6.11.2013 ஆனந்த விகடன்.

தருமபுரி கலவரத்துக்கு என்ன காரணம்?

“குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்; மற்ற சமூக இளம் பெண்களைக் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்திப் பணம் பறிப்பதாக தருமபுரி மாவட்டம் முழுக்க நீண்ட காலமாக ஒரு விவகாரம் புகைகிறது.

காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள் அந்தப் பெண்ணோடு சில வாரம் குடும்பம் நடத்துவார்களாம். உடனே பெண்ணின் பெற்றோரைப் பார்த்துப பேசும் உள்ளூர் சாதிப் பிரமுகர்கள்; தம்பதிகளைப் பிரித்து ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பார்களாம். லட்சங்கள் கைமாறினால் பெண்ணைப் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்களாம்.

காதல் மணம் புரிந்த அந்த இளைஞருக்கும்; வருமானத்தில் பங்கு கொடுப்பதோடு; அதே பாணியில் அடுத்த பெண்ணை மயக்குவதற்கு ஊக்கம் தருகிறார்கள். பணத்துக்கும் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு சில இளைஞர்கள் அந்த காதல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி பணத்தை நோக்கமாக வைத்து அரங்கேற்றிய வலியும் இந்த வெறியாட்டத்திற்கு காரணம் என்கிறார்கள்.”


-இதுதான் தருமபுரி கலவரத்திற்கு ஜூனியர் விகடன் சொன்ன காரணம் (14.11.2012)

அங்கே பெண்களைக் கடத்தி கற்பழிப்பவர்கள் யார் என்பதை 6.11.2013 நாளிட்ட ஆனந்த விகடனும் அடையாளப் படுத்தவில்லை.

இங்கே பெண்களைக கடத்தி கற்பழித்து - பணம் பறிக்கும் காட்டுமிராண்டி தேசவிரோதக் கும்பலை யார் என ஜூனியர் விகடனும் அடையாளப் படுத்தவில்லை.


பட்டியல் சாதியினர் வன்கொடுமைச் சட்டம் இருக்கிறது என்ற தைரியத்தில் திட்டமிட்டு பிற சாதிப் பெண்களைச் சீண்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள் என 12.11.2012 தினமணிதான் இங்கே பெண்களைக் கடத்தி பணம் பறிப்பவர்கள் பட்டியல் சாதி யினரே என அடையாளப் படுத்தியது.

இது கூட சரியான அடையா ளப்படுத்துதல் இல்லை. இங்கே பெண்களைக் கடத்தி பணம் பறிப் பவர்களை பட்டியல் சாதியினர் என்று அடையாளப் படுத்தினால் போதுமா? அது திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த கும்பல் என்பது யாருக்குத் தெரியாது?

ஏன் எந்தப் பத்திரிகையும்; ஏன் எந்தத் தொலைக்காட்சியும் இந்த உண்மையை திரைபோட்டு மூடி மறைத்தது?

பட்டியல் சாதியினர் என்று பொதுவாகச் சொன்னால் ஒட்டு மொத்த தலித் சாதியினருமா இதைச் செய்கிறார்கள். பழங்குடியினரும் கூட (றீஜுedற்யிe வீrஷ்ணுeவி)பட்டியல் சாதியினர்தான் அவர்களுமா இந்த சமூகவிரோத செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்?

36 உயிர்களைப் பறித்த முசாஃபர் நகர் கலவரத்தை கலவர நெருப்பு கனன்று கொண்டு இருக் கிறது என மென்மையாகத்தான் ஆனந்தவிகடன் சொல்கிறது.


40 குடிசைகள் எரிந்து போனதை வெறிச்செயல் என்கிறது ஜூனியர் விகடன்.

முசாஃபர் நகர் கலவரத்தை அடர்த்தியான திராவகத்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று சொல்லும் ஆனந்த விகடனும்; தருமபுரி கலவரத்தை வெறிச்செயல் எனச் சொல்லும் ஜூனியர் விகடனும் ஒரு கூரையின் கீழிருந்து தான் வெளிவருகிறது.
ஏனிந்த பாரபட்சம்?

முசாஃபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து ஆனந்த விகடன் சொல்லா விட்டாலும் - பிரண்ட் லைன் பத்திரிகை அவர்கள் முஸ்லீம்கள் என்று அடையாளப் படுத்தியுள்ளது. (அக்டோபர் 4, 2013).


நல்ல அழகான முஸ்லீம் இளைஞர்களைத் தேர்தெடுத்து ஹிந்து பெண்களை மயக்கு வதற்காக மசூதிகளில் பயிற்சி அளிக்கிறார்கள். மொபைல் போன்களையும்;

மோட்டார் பைக்குகளை அந்தப் இளைஞனுக்கு கொடுத்து ஹிந்து பெண்களை மயக்கும்படிக் கூறுகிறார்கள். மறுக்கிற ஹிந்துப் பெண்ணை ஈவ் டீசிங் செய்வது; துரத்தி தொந்தரவு செய்வது; கற்பழிப்பது என்று செயல் படுகிறார்கள் அந்தப் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள் என இந்துக்கள் குற்றம் சாட்டுகிறார் கள் என்கிறது பிரண்ட் லைன்.

(good looking Muslim youngmen are identified and trained in madrassas to woo Hindu women. They are given mobile phones and motor bikes, which they can use to pursue Hindu women who eventually fall for them as they are also trained to be modern. If the Hindu women resists the Muslim youth will indulege in rape; molestation; eve-teasing, the Hindu nationalists claim.)

ஜீன்ஸ் பேண்டும்; கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு பெண்களை மயக்குகிறார்கள் தலித் இளைஞர் என்று ராமதாஸ் சொன்னவுடன் அவரைப் பாய்ந்து, பிடுங்கி, கேலி பேசியவர்கள்

முசாஃபர் நகர் முஸ்லீம் இளைஞர்கள் மொபைல் போன்களுடன் மோட்டார் பைக்கில் சுற்றி ஹிந்து பெண்களை மயக்குகிறார்கள் என்பது குறித்து என்ன சொல்கிறார்கள்?

ஜீன்ஸ் பேண்ட்; கூலிங் கிளாஸ்; மொபைல் போன்; மோட்டார் பைக் போன்ற வற்றைக் கண்டு எல்லா பெண்களும் இதற்கு மயங்கு வார்கள் என்பது இதற்கு அர்த்த மல்ல. சபல புத்தியுள்ளவர்கள் எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் சபல புத்தியைப் பயன் படுத்தி; அவர்கள் கெடுக்கப் படுவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? எப்படி அனுமதிக்க முடியும்?

இனி- முசாஃபர் நகர் கலவரம் குறித்து பிரண்ட் லைன் பத்திரிகைச் செய்தியை விரிவாகப் பார்ப்போம்.

காவல் (kawal) என்பது முசாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிராமம். முஸ்லீம்களும்; தலித்துகளும்; ஜாட் சமூகத்தினரும் வாழும் கிராமம். ஜாட் சமூகத்தினர் நில உடைமையாளர்கள். முஸ்லீம் தலித் ஆகிய சமூகங்கள் பெரும்பாலும் ஜாட் சமூகத்தவர் களின் நிலங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள்.

1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கூட இங்கே கலவரம் எதுவும் நடக்கவில்லை. அதனால் காவல் கிராமம் நட்புணர்வுக்கும் நல்லிணக் கத்திற்கும் புகழ் பெற்ற ஊராகவே இருந்தது.

தென்மாவட்டங்களில் சாதி கலவரங்கள் நடந்த போது கூட வட மாவட்டத்தில் வன்னியர் களும் தலித்துகளும் நல்லிணக் கத்தோடு தான் இருந்தார்களே அது போல,

பாபர் மசூதி இடிப்பின் போது கூட நல்லிணக்கத்தோடும் நட்புணர்வோடும் இருந்த இந்த கிராமத்தில் - 2013 செப்டம்பர் முதல் வாரத்தில் திடீரென பயங்கரக் கலவரம் ஏற்பட்டு 36 உயிர்கள் பலியாகிவிட்டன. ஏன்?

ஒரு முஸ்லீம் இளைஞன் ஜாட் சமூக இளம் பெண் (minor girl)) ஒருவரை தொந்தரவு (teasing) செய்திருக்கிறான். இதை அந்த இளம் பெண்ணின் சகோதரர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

இது மோதலாகி அதில் அந்த முஸ்லீம் இளைஞன் கொல்லப்படுகிறான். இதற்குப் பழிவாங்கும் நடவடிக் கையாக - அந்தப் பெண்ணின் இரு சகோதரர்களையும் முஸ்லீம்கள் கடத்திக் கொன்று விடுகிறார்கள்.

கொல்லப்பட்ட ஜாட் சமூக இளைஞர் இருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அப்பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கில் ஜாட் சமூகத்தினர் திரண்டுவந்துள்ளனர். இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு டிராக்டர், மோட்டார் பைக்கில் திரும்பிய ஜாட் சமூகத்தினர் -
காவல் கிராமத்தில் உள்ள முஸ்லீம் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து முஸ்லீம் வீடுகளையும் கடையையும் அங்கிருந்த மசூதியையும் தாக்கி சிதைத்திருக்கிறார்கள். முஸ்லீம்கள் தப்பி ஓடி பிழைத்திருக்கிறார்கள்.

காவல் கிராமத்திற்குள் நுழைந்த ஜாட் சமூகத்தினர் வெட்டு கத்திகளோடும்; நாட்டுத் துப்பாக்கிகளோடும் வந்து எங்கள் சொத்துக்களை அழித்தார்கள்.
“பாக்கிஸ்தானுக்கு ஓடிப்போ.. இல்லை கல்லறைக்குப் போ..

ஹிந்து ஒற்றுமை வாழ்க..

எங்கள் ஒரு உயிருக்கு உங்கள் நூறு உயிர்களை எடுப்போம்.”

என்று கோ­மிட்டார்கள். என்கிறார்கள் அங்குள்ள முஸ்லீம்கள்.

ஜாட் சமூக இளைஞர்களைக் கொன்றிருக்கக் கூடாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதற்காகக் குற்றவாளிகளைப் பிடித்து தண்டிக்க வேண்டும். இந்த சண்டையில் சம்மந்தமில்லாத நாங்கள் சுற்றி வளைக்கப் பட்டோம். இப்போது எங்கேயும் போக வழியல்லாமல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் ஒரு முஸ்லீம்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் ‡ ஜாட் சமூகத்தினர் தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கூட்டம் கூட்டு வார்கள். அதற்கு பெயர் மகா பஞ்சாயத் அதாவது ஜாட் சமூகப் பொதுக்குழு. இந்த முறை அந்த மகா பஞ்சாயத்தைக் கிராமம் கிராமமாகக் கூட்டினார்கள். இது, முஸ்லீம் அராஜகத்திலிருந்து ஜாட் சமூக கெளரவத்தைக் காப்ப தற்காக என்கிறார்கள்.
இந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் - பிஜேபி தலைவர்களான குகும்சிங்; சங்கீத்ராம்; சுரேஷ்ரானா;

பாரதிய கிசான் சங்கத் தலைவர்களான நரேஷ் திக்காயத்; ராஜேஷ் திக்காயத் (இவர்கள் இருவரும் பாரதீய கிசான் சங்கத்தைத் தோற்றுவித்தவரும்; ஜாட் சமூகத்தவரால் குலபதி என போற்றப் பட்டவருமான மகேந்திர சிங் திக்காயத்தின் மகன்கள்) காங்கிரஸ் கட்சித் தலைவர் - ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஹரேந்திரசிங் மாலிக் போன்றோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல்- அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்ற வன்னியர்களும் விடுதலைச் சிறுத்தைகளின் பெண் கடத்தலுக்கு எதிராக தருமபுரி கலவரத்தின்போது ஒரு கூட்டத்தை கூட்டிக் குரல் கொடுத் திருப்பார்களேயானால் - ஆதிக்க சாதியினர் நத்தம் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்திருக்கிறார்கள். அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி தலித் காலனிகளுக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தினார்கள்.

அவர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வன்னியர்களுக்கு எதிராக வி­ம் கக்கும் தைரியம் கருணாநிதிக்கு வந்திருக்குமா?

தலித் வீட்டு 50 ஆண்டு கால சேமிப்பான நகைகளையும்; பணத்தையம் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என நல்லக்கண்ணுக்கு கள்ள ஒப்பாரி வைக்கும் தைரியம் வந்திருக்குமா?

தலித் வீடுகளில் புகுந்து கேஸ் சிலிண்டர்களை வன்னியப் பெண்கள் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் என நம் குலப் பெண்கள் குறித்து பழி சுமத்த கொங்கு சாதி வெறியன் கொளத்தூர் மணிக்கு தைரியம் வந்திருக்குமா?

காட்டிக் கொடுக்கும் எட்டப் பனாக காக்கை வன்னியனாக மாறி ‡ வன்னியர்கள் வன்கொடுமை யாளர்கள் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணனுக்கு பொய் அறிக்கை எழுதும் தைரியம் வந்திருக்குமா?

ஜாட் சமூகத்தினரிடையே உள்ள அந்த ஒற்றுமை இல்லாத தால்தான் தருமபுரி கலவரத்தின் போது கண்டவனும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராய் அறிக்கை விட்டு வன்னியர்களை இழிவுபடுத்தினார்கள்.



உத்திரப் பிரதேச மகா பஞ்சாயத்து தலைவர்கள் - 36 கொலைகள் விழுந்த பின்பும் - நம் பெண்களின் கெளரவம் காக்க நம் மகள்களையும்; மருமகள் களையும் காப்பாற்ற
நம் பெண்கள் அச்சமின்றி நடமாட ஒருங்கிணைந்து போராட வாரீர் என ஜாட் சமூகத்தினர் தங்கள் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இது குறித்து - பெரும்பான்மைச் சமூகங் களின் மன உணர்வைக் காயப் படுத்த அனுமதிக்க முடியது.

ஒருங்கிணைந்து போராடா விட்டால் நம் பெண்கள் வெளியில் நடமாட முடியாது-
என்கிற உணர்வுகள், தான் பார்த்த எல்லா கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கிறது என்கிறது பிரண்ட்லைன்.

எங்கள் பெண்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வில் எங்களுக்குள் நான் ஜாட்; நான் ஹரிஜன் என்ற பேதமெல்லாம் கிடையாது. என பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியதாகவும் பிரண்ட் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கே - பெண்கள் மீதான முஸ்லீம் களின் அராஜகத்தை எதிர்த்து சாதி வித்யாசங்களை மறந்து - ஹிந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை போலத்தான் - இங்கே அனைத்து சமுதாயப் பேரவை உருவானது. அதற்கு தலைவரானதற்காக - ராமதாசை - சாதிதாஸ் என்று எழுதிக் கொச்சைப் படுத்திய ஜூனியர் விகடனுக்கு உத்திரப் பிரரேசத்தில ஏற்பட்டிருக்கும் உணர்வை இந்து மத வெறி என்று எழுதும் துணிவு பிறக்குமா?

36 கொலைகள் விழுந்த பிறகும் அங்கே ஜாட்கள் ஊருக்கு ஊர் மகா பஞ்சாயத்தைக் கூட்டு கிறார்கள். ஜாட் சமூக கெளரவம் காக்க ஒருங்கிணைந்து போராடுவோம் என அறிவிக்கிறார்கள்.


ராணுவம் வரும் என்று அரசு அச்சுறுத்தியபோது - “அனுப்பு.. அதையும்தான் பார்க்கிறோம்” என சவால் விடுகிறார்கள்.

அங்கே குற்றம் செய்த மதத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் தங்கள் ஊர்களை விட்டுஅகதி முகாம்களில் தஞ்சமடைந்திருக் கிறார்கள்.
இங்கே என்ன நிலைமை?

பெண்களைக் கடத்தி பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட திருமாவளவன் கும்பல் ஊருக்கு ஊர் வன்னியர்கள் மீது வாய்கூசும் படியான வார்த்தை களால் நம் மன உணர்வுகளைக் காயப்படுத்துவதைத் தடுக்க ஜெயலலிதா அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தண்டிக்க வேண்டிய இந்தக் குற்ற வாளிகளை தண்ணீர் தெளித்து விட்டுவிட்டு நத்தம் காலனியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் உள்ள வன்னியர்களை (பள்ளி மாணவர்கள் உட்பட) வேட்டையாடி 230க்கும் மேற்பட்டோரை சிறையி லடைத்துக் கொடுமைப்படுத்தி - நான்கு மாதங்களுக்குப்பின் பிணையில் விட்டுள்ளது.
500பேரைக் கைது செய்ய வேண்டும். 250 பேரைத்தான் கைது செய்திருக்கிறோம்.

மீதி பேரைத் தேடுகிறோம் என்று சொல்லி நத்தம் காலனியில் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் ஆண்களே நுழைய முடியாத அளவுக்கு அராஜகம் செய்து வன்னியர்களை ஜெயலலிதா அரசு.

36 உயிர்பலிக்கு காரணமான முசாஃபர் நகர் பகுதியில் கூட இத்தகைய ஒடுக்குமுறை இல்லை.

கலவரத்துக்கு காரணமான விடுதலைச் சிறுத்தைகளை விட்டுவிட்டு எதிர்வினையாற்றிய வன்னியர்களை ஒடுக்கிவிட்டால் கலவரங்கள் ஓய்ந்துவிடுமா?

தருமபுரியில் அடக்கினால் - நாளை பரமக்குடியில் வெடிக்கலாம்.

பரமக்குடியில் அடக்கினால்- நாளை மறுநாள் தூத்துக் குடியில் வெடிக்கும்.

திருமாவளவன் கும்பல் அராஜகத்தை அடக்கி அழிக்காத வரை கலவரங்கள் அங்கங்கே அரசு அடக்குமுறைகளை மீறி வெடித்துக் கொண்டே தானிருக்கும்.

முசாபர் நகர் கலவரமும்; தருமபுரி கலவரமும் சொல்வது என்ன?

பெண்கள் மீது கை வைக்கும் பொறுக்கிகளை எந்த சமூகமும்; எந்த மதமும் நீண்ட நாள் பொறுத்துக் கொள்ளாது என்பதே.

முதலியார் சமூகப் பெண்ணுக்கு நடந்த பாலியல் பயங்கரம்

திருமாவளவன் கும்பலால் தமிழகத்துக்குத் தலைகுனிவு
=======================

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி நிர்பயாயை - காம வெறி மிருகங்கள் கதறக் கதறக் கற்பழித்து ரோட் டோரம் தூக்கி வீசி விட்டுப் போன கொடூர சம்பவத்தால் - சர்வதேச சமூகங்களின் முன்பு இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.

அதைவிடக் கொடுமையாக காரைக்காலில் 24.12.2013 இரவில் 15 காமவெறி மிருகங்கள் சத்தியப் பிரியா என்ற முதலியார் சமூகப் பெண்ணை நாசம் செய்த சம்பவம் ‡ தமிழகத்தை இந்திய சமூகங்களின் முன் தலைகுனியச் செய்துள்ளது.

சத்தியப்பிரியாவை வேட்டையாடிய காமவெறி மிருகங்களின் பெயர்கள்

1.மதன் -

இவன் காரைக்கால் விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சிப் பேரவையின் பொறுப்பாளர். இவனது அப்பா தமிழ் அழகன் பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர். தான் படித்த பாலிடெக்னிக் கல்லூரியில் கம்யூட்டரை திருடிய குற்றத்திற்காக டி.சி. கொடுத்து வெளியேற்றப்பட்டவன்.

2.எழிலரசன் -

இவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வனின் அண்ணன் மகன்.

3.கணபதி

4.பாபுராஜ்

5.ஜெயகாந்தன்

6.ஆட்டோ மணி என்ற மணிகண்டன்.

7.புரூனே - செல்லப்பா
இவர்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

8.நசீர் - ஏற்கனவே ஒரு கர்ப்பிணி பெண்ணை தனது அண்ணனுடன் சேர்ந்து கற்பழித்த வழக்கில் 
தற்போதுதான் சிறையில் இருந்து வந்திருப்பவன்

9.முபாயத்

10.யூசுப்

11.இர்சான்

12.பைசல்

13.அமீர்

14.அக்பர்

15.காசிம்



இவர்கள் அனைவரும் திமுகவினர் - தற்போதைய திமுக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான நாஜீமின் உறவினர். இதில் நசீர் இந்த எம்.எல்.ஏவின் கையாள்.

இனி சம்பவத்திற்கு வருவோம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரைச் சேர்ந்தவர் செளமியா வயது 25. ஒரு குழந்தையின் தாய். கணவரைப் பிரிந்து வாழ்பவர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது உறவினரான சத்தியப்பிரியா வயது 27 இவரும் இரு குழந்தைகளுக்குத் தாயானவர் விவாகரத்தால் தான் பிறந்த குடும்பத்தோடு வாழ்பவர்.

மதனுக்கும் செளமியாவுக்கும் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட பழக்கம் கணவரைப் பிரிந்து வாழ நேர்ந்ததால் ‡ மதனுக்கு திருமணம் ஆன பின்னும் தொடர்ந்திருக்கிறது. அவ்வப்போது இருவரும் காரைக்காலுக்குச் சென்று விடுதிகளில் தங்கி வந்திருக்கின்றனர்.

எனவே - காரைக்கால் சென்று கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வரும்படி செளமியாவை கூப்பிட்டிருக்கிறான் மதன்.

நீ வந்து பைக்கில் அழைத்துப் போ என்று சொன்னதற்கு - நான் வரமுடியாத சூழலில் இருப்பதால் நீயும் உன் உறவினரான சத்தியப் பிரியாவும் அவரது ஸ்கூட்டியில் வநது விடுங்கள் என்று சொல்லி இருக்கிறான் மதன். இதன்படி சத்தியப் பிரியாவை அழைத்துக் கொண்டு காரைக்கால் சென்றிருக்கிறார் செளமியா.

அங்கே போய் மதனை சந்தித்தவுடன் - சத்தியப் பிரியாவை கணபதி வீட்டில் தங்க வைத்து விட்டு, நாம் வெளியில் போய் வருவோம் எனக் கூறி கணபதி வீட் டிற்கு அழைத் துப் போயிருக் கிறான் மதன். கணபதியின் தாயார் இதற்கு சம்மதிக்காததை அடுத்து - ஆட்டோ மணி என்கிற மணிகண்டனிடம் போய் இரவு சத்தியப் பிரியாவை உன் அறையில் தங்க வைக்கிறோம் காலையில் அழைத்துக் கொள்கிறோம் எனக் கூறி தங்க வைத்து விட்டு - மதனும் செளமியாவும் திருநள்ளாறு போய்விடுகிறார்கள்.

சத்தியப்பிரியா தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கே குடித்து விட்டு வந்த ஆட்டோ மணி - சத்தியப் பிரியாவை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான்.

பிறகு - தன் நண்பனான நசீருக்கு போன் செய்து சூப்பர் பிகர் கிடைச்சிருக்கு வா என்று அழைக்கிறான்.

நசீர் தன் கூட்டாளியான ஜெயகாந்தன் அமீர் ஆகியோருடன் வந்து - சத்தியபிரியாவிடம் தாங்கள் போலீஸ் என்று மிரட்டிவிட்டு கதறக் கதற வண்புணர்ச்சி செய்திருக்கிறார்கள்.

இதற்குப் பிறகு - முபாயத்; இர்சான்; பைசல்; அக்பர்; காசிம்; யூசுப் ஆகியோரிடம் பணம் வாங்கிக் கொண்டு சத்தியப் பிரியாவை அவர்களிடம் ஒப்படைத் திருக்கிறான் நசீர்.

சத்தியப் பிரியாவை அங்கிருந்து கடத்திச் சென்ற இந்த மிருகங்கள்

தருமபுரம் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இரவு முழுவதும் நாசம் செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தருமபுரம் சர்ச் வாசலில் சத்தியப் பிரியாவை கொண்டுபோய் போட்டு விட்டுத் தப்பி விட்டார்கள். மயக்கம் தெளிந்த சத்தியப் பிரியா மதனுக்கு போன் செய்ய, மதன் தன் நண்பர்களான கணபதி; பாபுராஜ்; எழிலரசன் ஆகியோருடன் சென்று சத்தியப் பிரியாவை அழைத்து போய் ஒரு லாட்ஜில் தங்க வைத்திருக் கிறார்கள். சத்தியப் பிரியாவைக் காப்பாற்ற வந்த மதனின் நண்பர்கள் மூலம் அடுத்த அதிர்ச்சி. அவர்களும் அங்கே சத்தியப் பிரியாவை கதறக் கதற கற்பழிக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இந்த தகவலை யாரோ காவல் நிலையத்திற்கு போன் செய்து தெரிவிக்க முல்லை நகர் பகுதியில் சுடுகாடு பிரச்சனை தொடர்பாக விசாரிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த துணை ஆய்வாளர் வெங்கடாசலபதி; ஏட்டு சபாபதி; மற்றும் கான்ஸ்டபிள்களிடம் குற்றவாளிகளைப் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைக்கச் சொல்லிவிட்டு, இந்த தகவலை இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடமும் சொல்லிவிட்டு முல்லை நகருக்குச் சென்று விட்டார்.

ஏட்டு சபாபதியும்; கான்ஸ்டபிள்களும் மதன்; நாசர் உள்ளிட்ட 10 பேர்களை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விட்டனர்.

இந்த செய்தி அறிந்ததும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் காவல் நிலையத்திற்கு தன் ஆட்களுடன் வந்து தகராறு செய்ய ஆரம்பித்து விட்டார்.

இதற்கிடையில் - நாஜீம் எம்.எல்.ஏ., தன் உறவினர்களுக்காக காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி ரெட்டியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு - அந்த பெண் விபசாரி அவள் மீது விபசார வழக்கு போடுவதை விட்டு விட்டு தன் உறவினர்களை எப்படி காவல் நிலையத்திற்கு பிடித்துக் கொண்டு போய் உட்கார வைக்கலாம் என சத்தம் போட்டு விட்டு - அந்தப் பெண்ணுக்கு வேண்டுமானால் ஏதாவது பணம் வாங்கித் தருகிறேன் பசங்கள விட்டு விடுங்கள் எனக் கட்டப் பஞ்சாயத்து செய்திருக்கிறார்.

குற்றவாளிகள் மீது வழக்குப் போடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தி மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த சுகுமாறனுக்குத் தெரியவர ‡ அவர் உடனே காரைக்கால் காவல்துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் றீறீP மோனிகா பரத்வாஜூக்கு (வடநாட்டுப் பெண்) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்திகளைச் சொல்லி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செய்தியைக் கேள்விப்பட்ட மோனிகா பரத்வாஜ் உடனடியாக அந்தக் காவல் நிலையத்திற்கு சென்று - விசாரணை நடத்தி குற்றவாளிகள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 14 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். ஒருவன் தலைமறை வாகியுள்ளான்.

காலையிலிருந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனக் கேட்டதற்கு - எஸ்.பி.வேங்கடபதி ரெட்டியும்; இன்ஸ்பெக்டர் ராஜசேகரும் சொன்ன தவறான தகவலின் அடிப் படையில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
வழக்குப் பதிவு செய்ய வேண்டியது இந்த சம்பவத்தின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜசேகரும் எஸ்.பி.வேங்கடபதி ரெட்டியுமே. இவர்கள் தான் நாஜிம் கும்பலிடம் பேரம் பேசிக்கொண்டு வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்தவர்கள்.

இவர்களது தொலைபேசி, அலைபேசி ஆகியவற்றிற்கு 25.12.2013 அன்று காலையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்து பரிசீலித்தாலே - இவர்கள் தான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியவர்கள் என்பது உறுதிப்படும். காமராஜ் டி.ஜி.பி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


எஸ்.பிக்கு நிர்ப்பந்தம் கொடுத்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சித்த திமுக எம்.எல்.ஏ நாஜீம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் மீது குற்றவாளிகளைத் தப்ப வைக்க முயற்சி செய்ததற்காக கிரிமினர் சட்டப்பிரிவு 202‡ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

டெல்லியில் நிர்பயா என்ற மாணவியை வன்புணர்ச்சி செய்த காமவெறி மிருகங்கள் தனிப்பட்டவர்கள்.

ஆனால் - காரைக்கால் சம்பவத்திற்கு காரணமான வர்கள் அனைவரும் - திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் பின்புலம் கொண்டவர்களே.

சத்தியப் பிரியாவை செளமியாவுடன் காரைக்காலுக்கு வரவழைத்தது.

சத்தியப்பிரியாவை தனியாக தன் நண்பன் ஆட்டோ மணியின் அறையில் தங்க வைத்தது ‡

சத்தியப்பிரியாவை மீட்பதற்கென அழைத்துப் போன மதனின் நண்பர்களே சத்தியப்பிரியாவை வேட்டையாடியது

இவைகளை எல்லாம் பார்க்கும் போது.

தன் காரைக்கால் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மதன் திட்டமிட்டு செய்த ஏற்பாடே செளமியாவிடம் சொல்லி சத்தியப்பிரியாவை காரைக்காலுக்கு அழைத்து வந்தது என்ற முடிவுக்கே நாம் வரேவேண்டியுள்ளது.


மதன் விபச்சார புரோக்கரா? விபச்சார வியாபாரியா?


எதுவானாலும் - இந்தக் கும்பலில் அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவன் மதனே!

தருமபுரி கலவரத்தின் போது வன்னியருக்கு எதிராய் வி­ம் கக்கிய கருணாநிதி; வீரமணி; நல்லக்கண்ணு; ராமகிருஷ்ணன் போன்ற நச்சரவங்கள் எல்லாம் இப்போது எந்த புற்றுக்குள் புகுந்து கொண்டன?

திருமாவளவன் கும்பலால் இந்திய சமூகங்களின் முன் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.

குச்சுக் கொளுத்திகள் விடுதலைச் சிறுத்தைகளே..!

தங்கள் குடிசைகளை தாங்களே கொளுத்திக் கொண்டு வன்னியர்கள் கொளுத்தி விட்டதாகப் புகார் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் 8 பேர் மீது

பெண்களைக் கடத்திப் பணம பறிப்பது.

தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தைக் கேடயமாக்கிக் கொண்டு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது

தங்கள் குடிசைகளைத் தாங்களே எரித்துக் கொண்டு கள்ள ஒப்பாரி வைப்பது

இவற்றைத் தொழிலாகவே செய்து பிழைத்து வந்த ஒரு கும்பலுக்கு முதல்முறையாக தர்மபுரியில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ராகர்க் மரண அடி கொடுத்திருக்கிறார்.

தருமபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் அத்தூரணஹள்ளி. இந்த ஊரில் உள்ள சேகர் என்கிற வெங்கடசாமிக்கு சொந்தமான நிலத்தை தலித்துகளுக்கு வீடு கட்டும் மனைகளாகப் பிரித்து கொடுப்பதற்காக தமிழக அரசு அரசுடைமையாக்கியது 1994இல். தலித்துகளுக்கு மனைப்பட்டாவும் வழங்கப்பட்டது.

தலித்துகளுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டதே தவிர - நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து 2002 வரை எட்டு ஆண்டு காலம் ஆகியும் யாருக்கும் கொடுக்கவில்லை.

அங்கே யாரும் வீடு கட்டவும் இல்லை.

இந்த நிலையில் - நில உடைமையாளர் சேகர் தனது நிலத்தை அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் - நிலத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என 2006 இல் தீர்ப்பு வழங்கியது.

இந்த விபரத்தை தெரிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை - பட்டா வழங்கப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் பட்டா வழங்கியதை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ரத்து செய்யவில்லை.

இதை வைத்து - தலித்துகளைத் தூண்டி தங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் குடிசைகளைப் போட வைத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் என்பர். குடிசைகளைப் போட்ட அன்று இரவே அவைகளைத் தீ வைத்து கொளுத்தி விடும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

அவர்களே வைத்த தீயில் குடிசைகள் எரிந்து கொண்டிருக்கும் போதே மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் - தங்கள் குடிசைகளை சேகர் எரித்து விட்டதாக பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிய வைத்து விட்டார்கள்.

இந்த பொய்ப் புகார் அடிப்படையில் நில உரிமையாளர் சேகரையும்; அவரோடு மற்றொரு வரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது காவல் துறை. இவர்கள் வன்னியர்கள்.

இந்த நிலையில் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் குடிசைகள் எரிக்கப்பட்டது தொடர்பாக தானே விரிவான விசாரணை நடத்தியபோது - குடிசைகளை எரித்தது சேகர் அல்ல - குடிசைகளைப் போட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராஜகோபாலும் மற்ற தலித்துகளும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் - நில உரிமையாளர் சேகரையும் அவரோடு கைது செய்யப்பட்ட மற்றொருவரையும் விடுதலை செய்தது மாவட்ட காவல்துறை.

உண்மையான குச்சிக் கொளுத் திகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த - 1.ராஜகோபால் 2.பி.முருகன் 3.கே.நாகராஜ் 4.கே.கோவிந்தராஜ் 5.என்.பழநி 6.எம்.மாசாமணி 7.எம்.முத்துசாமி 8.ஜி.பெருமாள் ஆகிய எட்டு பேர் மீதும் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளது தருமபுரி மாவட்ட காவல்துறை.

இவர்கள் மீது - தீவைப்பு மற்றும் வெடிமருந்துகளுடன் வீடுகளை அழிக்க முயன்றது.

ஆபாசமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு ஆடியது.

சட்ட விரோதமாக கலகம் ஏற்படுத்தும் நோக்கமுடன் கூட்டமாகக் கூடியது.

இரண்டு சமூகங் களுக்கிடையே பகையை உருவாக்கத் திட்டமிட்டது.

அத்து மீறி பிறருக்கு உரிமையான இடத்தில் புகுந்தது.

மற்றவர்க்கு தீங்கு செய்யும் நோக்கோடு பொய்ப் புகார் கொடுத்தது.

ஆகிய கிரிமினல் விதிகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ரா கர்க் போன்ற 10 நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இருந்தால் - திருமாவளவன் கும்பலின் பாலியல் மற்றும் சட்டவிரோத செயல்களால தமிழ்நாட்டில் ஏற்படும் அராஜகங்களுக்கு முடிவு ஏற்பட்டுவிடும்.

ஏன் வேண்டும்? வடதமிழ்நாடு!

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம்

மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் புதிய மாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன என்பது குறித்து; இந்திய உள்துறைச் செயலகம் வெளியிட்ட பட்டியல் ஒன்றைச் செய்தித்தாள்களில் சமீபத்தில் பார்த்தேன்.

வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு எனத் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் இந்திய அரசின் உள்துறைச் செயலாகம் வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்படாதது ஆச்சரிய மளிக்கிறது.

இது தொடர்பாகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.


காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும்; பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வடதமிழ்நாடு தனி மாநிலமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தலைமையிலான உழைப்பாளர் பொதுநலக் கட்சியின் மூலம் வலியுறுத்தி வந்துள்ளார். நூற்றுக்கணக்கானோர் இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் கைதாகியும் உள்ளனர்.

17.3.1976-ல் திட்டக்குடியில் இதற்கென்றே இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளார் இது இந்திய அரசின் எமர்ஜென்சி காலம்.

இந்த மாநாடு தொடர்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் புதிய மாநிலத்தை அடைந்தே தீர்வோம் என்ற வாசகம் ஆட்சேபகரமானது எனக்கூறி - மாநாட்டுப் பொறுப்பாளர் , சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகப் பொறுப்பாளர் ஆகியோரைக் கைது செய்து வழக்கும் தொடுத்தது அப்போதைய தமிழக அரசு.

தனிமாநிலம் கேட்பது சட்டப்படி குற்றமல்ல; கோரிக்கையை ஏற்பதோ மறுப்பதோ அரசின் முடிவு என - உளுந்தூர்பேட்டை நீதிமன்ற முதன்மை நீதிபதி கருணாகரன் 7.12.1977 அன்று தீர்ப்பு வழங்கி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை அமைப்பான தெலங்கானா பிரஜா சமதி அமைப்பின் தலைவராக இருந்த சென்னா ரெட்டியை 1972 சட்டமன்றத் தேர்தலுக்குமுன்; காங்கிரசில் இணைத்து - தெலங்கானா கோரிக்கையை நீர்த்துப் போக வைத்ததன் பரிசாக ஆநதிர மாநில முதல்வராகவும் ஆக்கப்பட்டார் சென்னாரெட்டி - அதைப் போலவே - தமிழ்நாட்டில் தனி மாநிலம் கேட்டு இயக்கம் நடத்திய எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரையும் ஆசைகாட்டி காங்கிரசில் இணைத்து வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைளைக் கைவிட வைத்தது.

என்றாலும்- தெலங்கானாவைப் போலவே - வடதமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கையும் கனன்று கொண்டு தான் இருக்கிறது.

எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாருக்குப் பிறகு ‡ வடதமிழ்நாடு கல்வியில்; வேலைவாய்ப்பில்; அரசியலில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து - வடதமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி விளிம்பு நிலை மக்கள் கலை இலக்கிய இயக்கம் தன் கொள்கை பரப்பு இதழான அச்சமில்லை மாத இதழின் மூலம் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது.

1999 முதல் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் குறித்து - அறிஞர்கள்; சான்றோர்கள் அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் நேர்காணல்களையும் வெளியிட்டு வருகிறது.


விளிம்பு நிலை மக்கள் கலை இலககிய இயக்கத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழ்நாட்டிலிருந்து வடதமிழ்நாட்டைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டுமென்ற தீர்மானங்கள் நிறைவேற்றி தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளோம்.

இயக்கத் தோழர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி 14.2.2004 அன்று கும்பகோணம் வட்டம், குடிதாங்கி கிராமத்தில் உள்ள சியாபாட்டன் திடலில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் - விளிம்புநிலை மக்கள் இயக்கத்தை - வடதமிழ்நாடு மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைக்காகப் போராடி வருகிறோம்.
இக்கோரிக்கைக்காக இயக்கத்தின் சார்பாக அச்சமில்லை, வடதமிழ்நாடு என்கிற இரண்டு மாத இதழ்களையும் நடத்தி வருகிறோம்.

வடதமிழ்நாடு தனிமாநிலமாக அமைக்க வேண்டிய அவசியம் குறித்த விரிவான விளக்கங்கள் அடங்கிய வடதமிழ்நாடு என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளோம்.

வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைக்கு பா.ம.கட்சி நிறுவனத் தலைவரான டாக்டர் இராமதாஸ் அவ்வப்போது ஆதரவு தெரிவித்து வருகிறார்.


தென்தமிழ்நாடு தனி மாநிலம் கேட்டு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவரான டாக்டர் சேதுராமன் அவர்களும் போராடி வருகிறார்.


தென்தமிழ்நாட்டுக்கென மதுரையில் தனி உயர்நீதிமன்றமும் காவல்துறை தலைமை அலுவலகமும் திறக்கப்பட்டாயிற்று. தலைமைச் செயலகம் அமைப்பது ஒன்றுதான் பாக்கி.
எனவே தமிழ்நாட்டின் மாநிலப் பிரிவினை - இரு பகுதியினரும் வரவேற்கும் ஒரு கோரிக்கை.

எங்கள் கோரிக்கையை ஏற்று புதிய மாநிலங்களை உருவாக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏன் வேண்டும் வடதமிழ்நாடு புதிய மாநிலம் என்பதற்கான காரணங்களில் சிலவற்றை இக்கடிதத்தின் இணைப்பாகக் கொடுத்துள்ளேன்.

ந.இறைவன்
16.12.2009

மாநிலப்பிரிவினைக் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்ற ப.சிதம்பரத்திற்கு பதில் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமானது. 

அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கருணாநிதியைச் சந்தித்து விட்டு கருணாநிதியின் வீட்டுப் படிக்கட்டில் நின்று முழங்கி விட்டு போயிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்றெல்லாம் கருணாநிதி அடிக்கடி வீர வசனம் பேசுவார். அதிர்ந்து பேசாதவர் என்று பெயரெடுத்த ப.சிதம்பரத்தையும் இந்த நோய் தொற்றிக்கொள்ளும் என்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று. கருணாநிதி வீட்டுப் படிக்கட்டை அடிக்கடி மிதிக்க நேர்ந்த பழக்க தோசத்தால் ஏற்பட்ட விபத்தாகவும் இருக்கலாம்.

இருந்தாலும் - தன் நிதானத்தைக் காத்துக் கொள்ள - எந்த மருந்தை தின்றால் இந்த பித்தம் தெளியும் என்பதைத் தேர்ந்து தெளிய வேண்டிய ப.சிதம்பரத்தின் உடனடித் தேவை என்பதே நாம் அவருக்குச் சொல்லும் ஆலோசனை.

கொஞ்ச நாளைக்கு முன்புதான் ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டில் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை இல்லாததைப் போல ஒரு பட்டியலை வெளியிட்டது.

இப்போது - மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை முளைக்கும் போதே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டிலும் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை முளைத்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தமைக்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது நமது கடிதம் ஏற்படுத்திய மாற்றம்.

இனி, வடதமிழ்நாடு கோரிக்கை அபத்தமானதா? முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்ற சிதம்பரத்தின் பேச்சு அபத்தமானதா? என்பதைப் பார்ப்போம்.

ப.சிதம்பரம் உலகப் புகழ் பெற்ற ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். சென்னை உயர் நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் சிறந்த வழக்கறிஞர் என்று பாராட்டப் படும் அளவுக்கு வழக் கறிஞர் தொழில் புரிந்து வந்தவர். சட்டம் தெரிந்தவர்களால், சட்ட மேதை என்றெல்லாம் கூட கொண்டாடப் பட்டவர்.

மாநிலப் பிரிவினைகளை இந்திய அரசியலமைப்புப் பகுதி - 1 சடட விதி - 2 அனுமதிக்கிறது என்பது சாதாரண சட்ட அறிவு உள்ளவர்களுக்கே புரியும்.

சட்டமேதை எனக் கொண்டா டப்படும் சிதம்பரத்திற்கு எப்படி இந்தச் சட்டம் புரியாமல் போனது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட வட தமிழ்நாடு மாநிலக் கோரிக்கையை அபத்தமானது எனச் சொல்வது - மேற்கண்ட அரசியல் சட்டத் தையே அபத்தமானது எனச் சொல்லி அவமதிக்கும் செயலாகும். மத்திய அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிதம்பரமே இப்படிச் சட்டத்தை அவமதித் தால், வேறு யார்தான் சட்டத்தை மதிப்பார்கள்?

“அவனைத் தூக்குங்கடா” என்பது நமது சினிமா வில்லன்கள் அடிக்கடி பேசும் வசனம்.

சட்டத்திற்கு உட்பட்ட எங்களது வடதமிழ்நாடு மாநிலக் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் பேச்சுக்கும் மேற்கண்ட வசனம் பேசும் வில்லன்களுக்கும் என்ன வித்தியாசம்?


முன்னதை நடிகர்கள் பேசுகிறார்கள். பின்னதை இந்திய உள்துறை அமைச்சர் பேசுகிறார் என்பதைத் தவிர வேறு ஒரு வித்தியாசமும் இல்லை.

இரண்டுமே சட்டத்தை மதியாத அடாவடிப் பேச்சுக்களே.


அறிவு ஜீவிகளைக்கூட அதிகார போதை குப்புறத் தள்ளி - குழி பறித்து மண் அள்ளிப் போட்டு மூடிவிடும் என்பார்கள். சிதம்பரத்திற்கு அத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பதற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் டெல்லி எஜமா னர்கள் இரண்டாவது மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைப்பதற்கான கொள்கை முடிவினை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் - மத்திய அரசின் கொள்கை முடிவிற்கு எதிராக மாநிலப் பிரிவினையை முளையிலேயே கிள்ளி எறிவேன் என எகிறி குதிப்பது - இரண்டாவது மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைப்போம் என்ற அறிவிப்பைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது.

மத்திய அரசின் கொள்கை முடிவுககு எதிராக, மத்திய அரசின் ஒரு அங்கமாக இருக்கும் உள்துறை அமைச்சரே இப்படிப் பேசுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது?

30 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருக்கின்றன. சுமார் 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் வெறும் 28 மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

அமெரிக்க அடிப்படையில் பார்த்தால், பல மாநிலங்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவில் இருப்பதோ 28 மாநிலங்கள் மட்டுமே. இந்த நிலையில் புதிய மாநிலங்கள் கேட்பதை அபத்தம் என்றும், அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அமெரிக்காவின் தாசானுதாசனாக இருக்கும் சிதம்பரத்தால் எப்படி இப்படி முரண்பாடாகப் பேச முடிகிறது? இதற்கு என்ன காரணம்?

அண்ணன் எப்போ சாவான்; திண்ணை எப்போ காலியாகுமெனக் காத்திருக்கிறான் என கிராமத்தில் ஒரு கேலிப்பேச்சு உண்டு. அதுபோல், தமிழக முதல்வர் நாற்காலி கனவோடு காத்திருக்கிறார் சிதம்பரம் எனத் தமிழகப் பத்திரிகைகள் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு அவரது ஆசைகளைப் பேராசைகளாக்கி வருகின்றன.

இதன் விளைவாக முதலமைச்சர் நாற்காலிக் கனவு சிதம்பரத்தின் மனதிலும் வேர் பதித்து விட்டது. வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கை தனது தமிழக முதல்வர் நாற்காலிக் கனவைக் கருவிலேயே கலைத்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பன போன்ற சட்ட விரோதப் பேச்சுக்களைப் பேச ஆரம்பித்திருக்கிறார் சிதம்பரம்.

ஆசை வெட்கம் அறியாது என்பது பழமொழி. ஆசை அறிவையும் அறியாது என்பது சிதம்பரத்தின் பேச்சின் மூலம் நாம் அறியும் உண்மை.

பழங்குடிமக்களும்; மண்ணின் மைந்தர்களும் ஆட்சி அதிகார உரிமைகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டது தான் ஜார்கண்ட், சட்டீஸ்கார் உத்தராஞ்சல் போன்ற புதிய மாநிலங்கள்.

இந்த அடிப்படையில் - நெடுங்காலமாக ஆட்சி அதிகாரங்களை இழந்து தாழ்ந்து கிடக்கும் இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆட்சி அதிகாரங்களைப் பெற்று முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டதுதான் வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கை.

சிதம்பரம், கருணாநிதி, ஜெய லலிதா போன்றோரின் சுயநல வேட்கையால், அவர்களது உருட் டல் மிரட்டல்களால், இரண் டரை கோடி உழைக்கும் மக்களின் ஆட்சி உரிமைக் கோரிக்கையான வட தமிழ்நாடு தனி மாநிலக் கோரிக் கையை இனியும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இதனைப் புரிந்து, உணர்ந்து, ஒதுங்கி நில்லுங்கள் என அவர்களைக் கேட்டுக் கொள் கிறோம்.

- தொடரும்

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பன்முகப் படைப்பாளி, சேலம் தமிழ்நாடன் இலா.வின்சென்ட்

நாங்கள் எல்லாம் கண்மூடிக் கிடக்குமிந்த 
மனிதருக்காய்க் கூவுகிறோம்

இது புதிய ஞானம்

புதிய ராகம்

புதிய பாட்டு

என முழங்கிய வானம்பாடி தமிழ்நாடன். பெரியாரியம், மார்க்சியம் இரண்டும் கலந்தது அவரது இலக்கிய ஆத்மா.

யாதும் என்மொழி யாவரும் என் மக்கள்; மண்ணுலகின் மகன் நான் என்று பிரகடனப் படுத்தியவர்; பொய்மைக்கு ஏவல் செய்து வாழ்வதைவிட உண்மையிடத்து போரிட்டுச் சாகலாம் என்பது அவரது போர்க்குணம், இத்தகு பெருமைக்குரிய தமிழ்நாடன் கடந்த 09.11.2013 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ்நாடன் சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943ல் பிறந்தவர். தாய் இருசாயம்மாள், தந்தை ஆறுமுகம். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சுப்பிரமணியம்.

வியத்நாம் போரின் உச்சம். தமிழ் நாடனின் போர் நாய்க்கு என்றொரு கவிதை (1965). வாழ்வு அழிக்கப்பட்ட ஒரு வியத்நாமிய சகோதரி “என்னை வேசியாக்கி யவன் ஜான்சன்” என்று பாடுவதாய் இன்னொரு கவிதை (1966). இரண்டையும் தெசினியின் கவிதை இதழ் வெளியிட்டது. அவற்றை ஆங்கிலமாக்கி, புது டெல்லி அமெரிக்கத் தூதரகம் மூலம் அதிபர் ஜான்சனுக்கு அனுப்பி வைத்தார் தமிழ்நாடன்.

1972ல் வானம்பாடிகளின் புதுக்கவிதை இயக்கம், கங்கை கொண்டான், சிற்பி, ஞானி, சுந்தரம், மேத்தா, பாலா, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன் ஆகியோருடன் தமிழ்நாடன் தோழமை கொண்டார். அவரது வேள்வி (மரபு) கவிதைத் தொகுதி வெளிவந்தது. தொடர்ந்து மண்ணின் மாண்பு (1973) இதில் இரண்டு கவிதைகள் மகாத்மா காந்தியை விமர்சித்தன. அந்நேரத்தில்தான் மார்க்சிய லெனினியவாதிகள் காந்தி சிலைகளைத் தகர்த்துக் கொண்டிருந்தார்கள். கவிதைக்காக தமிழ்நாடன் கைதானார். இருப்பினும் அவர் கவிதையின், பேச்சின் வீரியம் குறையவில்லை.

1978ல் தமிழ்நாடனின் அம்மா அம்மா கவிதைத் தொகுப்பை கவிஞர் மீரா வெளியிட்டார். இத்தொகுப்பு உலகக் கவிதையின் உயரம் தொடும் உன்னதம் நிறைந்தது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனே´யா இஸ்ரேல், எகிப்து, சீனா, பிரிட்டன், பொலிவயா. ர´யா, ஆகிய பத்துத் தாய்களுக்குமான பாட்டுப் படையல் அது. தாய் மொழியையும தாய் நாட்டையும் அம்மா என்றழைத்த தமிழ்க் கவிதை இன்று உலகத்தை யேஅம்மா என்றழைக்கும உன்னத நிலைக்கு உயர்ந்திருக்கிறது. உயர்த்தியிருப்பவர் தமிழ்நாடன்.

தமிழ்நாடனின் கதைப் படைப்புகள்

சாரா. கலாசாகரம், திரெளபதை சம்வாதம். அன்னை கதீஜா. ஆதாம் ஆப்பிள் தேடுகிறான். ஏவாள் மறுத்த ஆப்பிள் (வேலிகள்), மகாநிவேதனம், ஆதியாகமம், மனிதப்பிம்பம், கடவுளுக்குக் காதுகள் இல்லை. பிரம்மாவின் மரணம் என்னும் 11 கதைகளின் தொகுப்பு தமிழ் நாடனின் கதைகள் (2003).

தமிழ்நாடனின் மற்றொரு ஆற்றல் முகம் மொழிபெயர்ப்பு, இலக்கியம் மனித இனத்தை ஒன்றுபடுத்தும் சக்தி. அதில் மொழியாக்கம் பல்வேறு இன, மொழி, நாடு சார்ந்த மக்களுக்கான உறவுப்பாலம். அவரின் அண்மைக் கால தமிழாக்க வெளியீடுகள் இரண்டு. ஒன்று உலகக் கவிதைகள் (2010). இங்கிலாந்து, அமெரிக்கா, வியத்நாம், கொரியா, சீனம், ஜப்பான், ஆஸ்திரேலியா, கம்போடியா, திபெத், நேப்பாளம் நாட்டுக் கவிதைகளின் தமிழாக்கம்.

இன்னொன்று இந்தியக் கவிதைகள் புதுமையின் பாதை (2011). இந்திய மொழிகளான தோஹ்ரி, காஷ்மீரி, சிந்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, மைதிலி, அசாமி, வங்கம், ஒரியா, இந்தி, உருது, குஜராத்தி, மராத்தி, கொங்கணி, தெலுகு, கன்னடம், மலையாளம் மொழிக் கவிதைகளின தமிழாக்கம்.

அவரது மனுதருமம் தமிழாக்கம் (1988) ஐந்து பதிப்புகள் கண்டுள்ளது. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம், (2011) தமிழில் தந்தார். ஒரிய எழுத்தாளர் ரி´கேஷ் பாண்டாவின் சிறுகதை களை ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் எனத் தமிழாக்கினார். அது தமிழ் நாடனுக்கு மொழிபெயர் ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் (2000) பெற்றுத் தந்தது.

தமிழ்நாடனின் உரைநடை பிரமிடுகளின் கல்லடுக்குப் போன்றசொல்லடுக்குக் கொண்டவை. அவ்வளவு இறுக்கம். கட்டுரைக்குக் கட்டுரை புதுப் புதுப் பதச் சேர்க்கை, கலைச் சொற்கள்.

ஒரு வானம்பாடியின் இலக்கியவனம் (1990) சேலம் கலையும் இலக்கியமும் (2001). என் மொழி என் மக்கள் என் நாடு (1997), புதுமையின் வேர்கள் (2000), சாகித்ய அகாதெமி தமிழ் விருதுகள், சில விவரங்கள் சில விசாரங்கள் (2001), கலைகள் ‡ உறவும் உருமாற்றமும் (2001), உயிர் ஒன்று உடல் நான்கு (2001), ஜப்பானியக் கவிதை (2001), தமிழ்நாடன் கட்டுரைகள் (2008) அவரது உரைநடை ஆக்கங்களாம்.

அண்மைக்காலப் படைப்புகள் திருக்குறள் புதிர்கள் (2009), அறிஞர் அண்ணாவின் கனவு (2010), அல்குல் (2010).

200 ஆண்டுகாலச் சேலம் மாவட்டம் பரமத்தி அப்பாவு, வள்ளல் சம்புகுல சேகர கந்தசாமி கண்டர், தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம், சேலம் திருமணிமுத்தாறு போல்வன தமிழ்நாடனின் வரலாற்று ஆய்வு நூல்கள். சேலம் மாவட்டம் சில ஆய்வுகள், தருமபுரி மாவட்டம் புதிய ஆய்வுகள், தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள், கெட்டிமுதலி அரசர்கள், இடும்பை இல; போல்வன தமிழ்நாடன் தொகுத்தவை.

அலெக்சாண்டர் ரீடுவின் அறிக்கை 1800, பாரதிதாசன் எழுதிய குமரகுருபர நாடகம், சோழர் கால செப்பு நாணயங்கள், பன்னாட்டார் பட்டயம், வீரபத்திர சதகம் ஓலைச்சுவடி, திருக்குறள் (பரிதியார் உரையோடு) ஓலைச்சுவடி அவர் கண்டறிந்து தமிழர்க்குத் தந்தவை.
தமிழ்ப் புதுக்கவிதை மீது அமெரிக்கக் கவிதையின் தாக்கம் என்ற பொருளில் ஆய்வு செய்துள்ளார் தமிழ்நாடன். கொங்கு ஆய்வகம் சார்பில் பல வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்தியுள்ளார். அவர் கொங்கு களஞ்சியம் தொகுப்பு நூல் ஆசிரியர்களுள் ஒருவர்.

தமிழ்நாடன் ஒரு ஓவியருமாவார், தொடக்க நாட்களில் அவருடைய கவிதைகளுக்கான ஓவியங்களை அவரே வரைந்தார். அவர் சேலத்தில் தேசிய அளவிலான முதல் ஓவியக் கண்காட்சி (1975) நடததினார். தென்னிந்திய ஓவியர் 50 பேர் கலந்து கொண்ட ஓவியம் சிற்பம் குறித்த இலவச பயிற்சி முகாம் (1999) அமைத்தார். தான் தீட்டியதும் தன்னிடம் இருந்ததுமான இரண்டு லட்சம் மதிக்கத்தக்க ஓவியங்களைச் சேலம் அருங்காட்சியகத்துக்கு அன்பளித்தார். ஆதிமூலம், ராஜவேலு, வீரசந்தனம், விஸ்வம்., பொன். ரகுநாதன் போன்ற ஓவிய மேதைகளும் தட்சிணாமூர்த்தி, சீனிவாசன் போன்ற சிற்பிகளும் இவரது கலையுலக நண்பர்கள்.

சேலத்துச் செம்மல் விருது ‡ 1984, இந்திய அரசின் ஆசிரியர் விருது ‡1988, பாவேந்தர் பாரதிதாசன் விருது ‡ 1991, திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருது ‡ 1994, சேலம் மாநகராட்சி இலக்கிய விருது ‡ 2000, சிற்பி இலக்கிய விருது ‡ 2003 எனத் தமிழ்நாடன் பல விருதுகறையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.

கவிஞர், அறிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர். மொழி பெயர்ப்பாளர், ஆய்வாளர், ஓவியர் எனப் பன்முகம் கொண்ட படைப்புக் கலைஞர் தமிழ்நாடன். அவரது இறப்பு தமிழுலகுக்கு இழப்பு. இந்த மாபெரும் படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.

நாயுடு கட்சியிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வேண்டுகோள்! ந.இறைவன்

விஜயகாந்த் நாயுடு கட்சியிலிருந்து அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிவிட்டார் என்ற செய்தி அப்பாடா தப்பி விட்டார் என்ற மகிழ்ச்சி.

2006 தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் முன்னிலையில் தினமணி பத்திரிகையாளரை அடித்தார் இந்த நாயுடு.

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெரும் பணம் செலவழித்து இவருக்காக சேலத்தில் பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார் நாயுடு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளரான மோகன்ராஜ். அவர் ஒரு வன்னியர். அவர் வீட்டில் தங்கி இருந்த போது - மூச்சு முட்ட குடித்துவிட்டு மோகன்ராஜை அடித்து அவர் வீட்டு டிவியையும் உடைத்தார் என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தோம்.

2011 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் நாயுடு கட்சி வேட்பாளர் பாஸ்கரன். வன்னியர்.


தருமபுரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது குடி போதையில தள்ளாடிய விஜய காந்த் நமது கட்சி வேட்பாளர் பாண்டியனை ஆதரியுங்கள் என உளறி இருக்கிறார். கூட்டம் கொல்லென சிரித்திருக்கிறது. உடனே நாயுடு கட்சி வேட்பாளரான பாஸ்கரன் எழுந்து அவர் காதருகில் போய் அய்யா என் பெயர் பாஸ்கரன் என்று சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான் - தேர்தல்களத்தில் எதிரணி டிவி கேமராக்கள் தன்னைச் சூழ்ந்தி ருக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில் ஒரு மாட்டை அடிப்பதைப் போல அடிக்கிறார்.

இதுபற்றி பத்திரிகைகள் நாயுடுவை நாறு நாறாகக் கிழித்தபோது - என் கட்சிக்காரனைத் தானே அடிக்கிறேன்.


என் கையால் அடி வாங்குகிறவன் நாளை மகாராஜா ஆவான் என்று முச்சந்தியில் நின்று வேடிக்கை காட்டும் மோடி மஸ்தானைப் போல் பேசுகிறார். (அச்சமில்லை 2011 இதழில் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறோம்.)

அடுத்ததாக - மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏவான பார்த்திபனை பளார் பளார் என அறைந்தார் என்ற செய்தி நக்கீரனில் வெளியாயிற்று.

இவர் வீரவன்னியர் பேரவையில் பொறுப்பில் இருந்தபோது ‡ மேடைக்கு மேடை “என் இதயத்தில் தங்க சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறான் தம்பி பார்த்திபன்” என்று சொல்லி விட்டுத்தான் வீர வன்னியர் பேரவைக் கூட்டத்தில் பேச ஆரம்பிப்பார் அதன் நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன்.

விஜயகாந்திடம் அடி வாங்கிய -

மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,

பாஸ்கரன் எம்.எல்.ஏ.,

பார்த்திபன் எம்.எல்.ஏ.,

ஆகிய மூவரும் வன்னியர்கள். அப்போதெல்லாம் எங்கள் நெஞ்சு படபடக்கும்; பண்ருட்டி ராமச்சந்திரனையும் கூட இந்தப் பாவி ஒரு நாள் அடித்து விடுவானோ என்று.

அதனால்தான் - பண்ருட்டியார் அக்கட்சியில் இருந்து விலகி விட்டார் என்றபோது அப்பாடா தப்பித்து விட்டார் பண்ருட்டியார் என்ற ஆறுதலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.


இவர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்த போது நாங்கள் 2006 அச்சமில்லை இதழில் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

தமிழ்நாட்டில் அதிக காலம் அமைச்சர் பதவியை வகித்தவர் பட்டியலில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால் - வன்னியர்களில் அதிக காலம் அமைச்சர் பதவி வகித்தவர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனே.

வன்னியர் யாரையும் வளரவிடாமல் வெட்டி வீழ்த்துவதில் வெறியோடு செயல்பட்டு வரும் திராவிடக் கட்சிகளில் இப்படியயாரு சாதனையை வேறு ஒரு வன்னியர் படைக்க வாய்ப்பில்லை.

தனது அரசியல் சாணக்கிய தனத்தாலும், தனது அறிவாலும் இந்த சாதனையைப் படைத்த ஒரே வன்னியர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் மட்டுமே!
இதனாலேயே இவரை வன்னியத் தலைவராக மற்ற சாதி அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள்.

ஆனாலும் - இவர் ஒரு வன்னியத் தலைவரென வன்னியர்கள் நினைககும் அளவுக்கு இவர் வன்னிய அரசியலை ஒரு நாளும் முன்னெடுத்ததே இல்லை.

இதுவே - இவருக்கு பலமாகவும் இருந்திருக்கிறது! பலவீனமாகவும் இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரை திமுக கட்சியை விட்டு கருணாநிதி நீக்கியபோது,

ஒரு கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டு கணக்கு வழக்கை பொது மேடையில் கேட்டது ஒழுங்கீனமானதுதான்! அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவிலிருந்து நீக்கியதும் நியாயமானதுதான்!

ஆனால் - அவர் கேட்ட கேள்வி தப்பான தல்லவே. நியாயமானதுதானே? அந்த நியாயமான கேள்விக்கு இன்றுவரை தலைவர் பதில் சொன்னாரா? இப்படிஒரு கட்சியின் வரவு செலவு அக்கட்சியின் பொருளாளருக்கே தெரியாமல் மறைப்பது கட்சி ஆதிக்கம் ஒரு தனிநபர் கைக்குள் முடங்கிப் போய் கட்சி வளர்ச்சியைப் பாதிக்கும்தானே?

என்று பேசிப் பேசி...


அப்போது திமுகவிலிருந்த துடிப்பான எம்.எல்.ஏக்களில் 26 பேர்கள் இளந்துருக்கியர்கள் என்ற பெயரில் கருணாநிதிக்கு எதிராக கேள்வி கேட்கத் தயார்படுத்தி விட்டார் ஒருவர் என்றால் ‡ அது சாதாரணமானதா?


இதனை சாதித்தவர் வேறு யாருமல்ல. பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்தான் என்பது பலருக்கும் புதிய செய்தி.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டு அலறித் துடித்து அரண்டு போனார் கருணாநிதி என்பதும்,
இதற்குப் பிறகும் - அந்த எம்.எல்.ஏக்களை உருட்டி மிரட்டி கருணாநிதியால் அந்த இளந்துருக்கியர் அமைப்பைக் குலைக்க முடிந்ததே தவிர - இவர்களை ஒருங்கிணைத்த பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு கருணாநிதிக்கு கடைசிவரை வரவே இல்லை.

இந்த இளம் துருக்கியர்கள் எல்லாம் வன்னிய எம்.எல்.ஏக்களா என்றால் இல்லை. இவர்கள் அனைவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்கள் என்பதுதான் இதன் சிறப்பே.

தாம் சொல்கிற கருத்தை எதிரில் இருப்பவர் ஆம் போட்டு தலையாட்ட வைத்து விடுமளவுக்கு கைதேர்ந்தவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்.

இதன் மூலம் கருணாநிதிக்கு பிடிக்காதவராக இருந்தார் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் எம்.ஜி.ராமச் சந்திரனையே வெளியேற்றிய கருணாநிதியால் இவரை கடைசி வரை திமுகவை விட்டு நீக்க முடியாதவராகவும் இருந்தார்.

இதனால் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு வேண்டியவரானார் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன். அந்த எம்.ஜி.ராமச்சந்திரனே கூட இவரது அறிவுக் கூர்மை காரணமாக இவரை நெருக்கத்தில் வைத்துக் கொள்ள பயந்தவராகவே இருந்தார்.

ஜெயலலிதாவும் அப்படித் தான் இவரை ஒதுக்கினார்.


டாக்டர் ராமதாசும் அப்படித் தான் இவரை ஒதுக்கினார்.


இவருக்கு பலமாக இருந்த இவரது அறிவுக் கூர்மையே இவருக்கு பலவீனமாகிப் போனதும் இப்படித்தான்.


இவரும் கூட தான் ஒரு அறிவாளி என்ற நீங்கா நினைப்போடு எப்போதும் இருந்து பழக்கப்பட்டு போனதன் காரணமாக மக்களோடு ஐக்கியமாக முடியாமல் தனித்து தனிமரமாகிப் போனவர்.
தனித்து தனி மரமாகிப் போன நிலையிலும் தான் ஒரு தோப்பு என்ற நினைவோடு வாழ்ந்து எட்ட வேண்டிய உயரங்களை எட்டாமல் போனவர்.

தனது அறிவையும் தனது அரசியல் சாணக்கியத்தனத்தையும் நேசித்த அளவுக்கு இவர் வன்னிய மக்களை நேசித்து, தன் அறிவுமீதும் அரசியல் சாணக்கியத்தனத்தின் மீதும் நம்பிக்கை வைத்த அளவுக்கு வன்னிய சமூகத்தின் மீது நம்பிக்கையும் வைத்து அரசியலில் செயல்பட்டிருந்தால்...


பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் அறிவிற்கு தமிழக முதல்வர் பதவி ஒன்றும் எட்டாக் கனியாகி இருந்திருக்காது.

வன்னியகுல விரோதியான விஜயகாந்த் நாயுடு துவக்கியிருக்கும் கட்சி தமிழகத்திலும் ஒரு அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும், டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் எந்த மக்களை வைத்து அரசியல் பண்ணுகிறார்களோ அந்த மக்கள் விஜயகாந்த் பக்கம் இருக்கிறார்கள் என்றும் - இனிமேல் விஜயகாந்திடம் இவர்கள் பாட்சா பலிக்காது என்றும் வன்னிய மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் டாக்டர் ராமதாசையும் திருமாவளவனையும் புறக்கணித்து விடுவார்கள் என்றும் 21.9.2005 ஜூனியர் விகடனில் பேட்டி அளித்தார்.

இந்த தமிழர்களை வீழ்த்தி தெலுங்கன் விஜய்காந்தை வளர்ப்பதில் தமிழன் பண்ருட்டிக்கு அப்படி என்ன அக்கறை?

விஜயகாந்த் நாயுடு அப்படி என்ன வன்னிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ரட்சகனா?
தன் படங்களில் - நாடாராய், தேவராய், சின்ன கவுண்டராய், நாயுடுவாய் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் விஜயகாந்த் நாயுடு - நடிப்புக்காக கூட வன்னிய அடையாளத்தோடு கூடிய பாத்திரத்தில் நடிக்க மறுத்த ஆதிக்க சாதி வெறி கொண்ட நடிகன் விஜயகாந்த் நாயுடு.

மறுமலர்ச்சி திரைப்பட கதாபாத்திரத்தின் பெயரான ராசு படையாட்சியில் உள்ள படையாட்சி என்ற சாதி அடையாளத்தை எடுத்தால் மட்டுமே நடிக்க முடியும் என்றும் ‡
தனது சொந்த தயாரிப்பில் உருவான வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி ஜாதி ஒழிப்பு வீரனாகத் தன்னை தமிழ்நாட்டில் அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நாயுடு.

அதே வல்லரசு படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டபோது அப்படத்திற்கு நாயுடு தி கிரேட் என்று பெயரிட்ட நாயுடு சாதி வெறியன் விஜயகாந்த்!

எல்லா சாதிகளும் குறிப்பா வன்னிய சாதியும், தாழ்த்தப்பட்ட சாதியும் ஒழிய வேண்டும். நாயுடு ஜாதி மட்டும் வாழவேண்டும் என்பதுதானே இதற்கு அர்த்தம்? இப்படிப்பட்ட நாயுடு ஜாதி பாசிஸ்ட் மனம் கொண்ட விஜயகாந்த் கட்சியில் எப்படி வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் செயல்பட முடியும்?


விஜயகாந்த் நாயுடு வன்னிய சமூகத்தின் பகையாளி.


இந்த விபரம் தெரியாமல் / புரியாமல் வன்னியர் யாராவது விஜயகாந்த் பக்கம் தலைகாட்டினால் கூட அவனைத் தடுத்து நிறுத்தி நல்வழி காட்ட வேண்டியதல்லவா வன்னியர்களில அதிக காலம் மந்திரி பதவி வகித்தவரான பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அறிவாளிகளின் கடமை?


ராமதாசோடு பண்ருட்டிக்கு இருப்பது பங்காளிப் பகை.
பங்காளியை எதிர்த்துத் தோற்பது ஒரு தோல்வியும் அல்ல.

பங்காளிப் பகையை பகையாளியின் காலில் வீழ்ந்து வெல்வது ஒரு வெற்றியும் அல்ல.
பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் சிந்தித்து இந்த அவலத்திலிருந்து மீள வேண்டும். நாயுடு ஜாதி வெறிகொண்ட விஜயகாந்தின் முகத்திரையை கிழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே வன்னியர்களின் எதிர்பார்ப்பு.

இது நாம் அப்போது எழுதியது.


இப்போது ஜூனியர் விகடன் என்ன எழுதுகிறது?


23.12.2013 கழுகார் பதில் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி இது.

பண்ருட்டியார் அதிமுகவில் சேர்வாரா?

இதற்கு கழுகாரின் பதில் இது:


அவரது அரசியல் கடந்த காலத்தை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவர் எந்தக் கட்சியிலும் சேரலாம்.

முதலில் திமுகவில் இருந்தார்.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோதும் திமுக விலேயே இருந்து சில ஆண்டுகள் கழித்துதான் அதிமுகவில் இணைந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் இயங்கினார்.

ஜெயலலிதாவுடன் முரண்பட்டு நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம் ஆகியோருடன் பணியாற்றினார். இதற்கு அந்தக் காலத்தில் நால்வர் அணி என்று பெயர்.

மறுபடியும் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்.


அங்கிருந்து திருநாவுக்கரசு போன்றவர்களுடன் விலகி, அண்ணா புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.பு.மு.க சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாக நின்றார்.

ஆனால் அவரைப் பா.ம.க ஆதரித்தது. உடனே பா.ம.க. எம்.எல்.ஏ வாக மாறினார்.
அந்தக் கட்சியிலிருந்து விலகி மக்கள் உரிமைக் கழகம் தொடங்கினார். எஸ்.டி.சோமசுந்தரம், புரட்சித் தலைவர் அண்ணா திமுக என்ற கட்சியைத் தொடங்கியபோது அதில் இணைப் பொதுச் செயலாளராக பண்ருட்டியார் ஆனார்.

பிறகு, அதில் இருந்து விலகி, மீண்டும் மக்கள் உரிமைக் கழகம் தொடங்கினார்.
அதனைக் கலைத்து விட்டுத்தான் தேமுதிகவில் சேர்ந்தார்.


இப்போது சொல்லுங்கள் பண்ருட்டியார் என்ன செய்வார் என்று யாராவது உறுதியாகச் சொல்ல முடியுமா?

பண்ருட்டியார் நாயுடு கட்சியில் சேர்ந்த போது ஏற்பட்ட வருத்தமும் வலியும்; ஜூ வியின் இந்த பதிலைப் படிக்கும் போதும் ஏற்படுகிறது.

எனவே - வேண்டாம் பண்ருட்டியார் அவர்களே, உங்களுக்கு இனி அரசியல் வேண்டாம்.

இதுவரை அரசியலில் இருந்து சாதிக்காத எதை இனி அதிமுகவிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து சாதிக்கப் போகிறீர்கள்?

சமுதாயப் பணிக்கு வாருங்கள்.

தமிழக கட்சிகள் வன்னியர் அரசியலை எப்படியயல்லாம் குழி தோண்டிப் புதைத்தது என்பதை மற்ற யாரைவிடவும் அனுபவ ரீதியாக உணர்ந்தவர் நீங்கள்.
வன்னியர் சமூகம் வஞ்சிக்கப் பட்டதை வரலாறாக எழுதுங்கள்.

கடந்த கால அரசியல் வரலாற்றை அறியாமல் - இருளில் தவிக்கும் வன்னியர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும் வகையில் அந்த வரலாற்றை எழுதுங்கள் என அழைக்கிறோம்.

வன்னிய குல சத்திரிய மகாசங்கம் 125-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு

அன்புள்ள வன்னிய குல உறவுகளே!
வணக்கம்.

வன்னியகுல சத்திரிய மகா சங்கம் 1888‡ல் தோற்றுவிக்கப் பட்டு கடந்த டிசம்பரோடு 125 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. நம் சமூகத்தின் பழம்பெரும் அடையாளம் இது.

ஆண்ட பரம்பரையாக இருந்த நாம் வீழ்ச்சியுற்று; தாழ்ச்சியுற்ற போது நம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி; கல்வியில், சமூக - பொருளாதாரத்தில் தோள் கொடுத்து 
தூக்கி நிறுத்துவதற்காக நம் குல சான்றோர்கள் கூடி தோற்றுவித்த சங்கம் இது.

இன்றைக்கு நம் சமூகத்திற்காக பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் தோன்றுவதற்கும் -
வரலாற்று ஆய்வு அறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார்; மயிலை சீனி.வேங்கடசாமி;

நடன.காசிநாதன் போன்றோர் நாம் ஆண்ட பரம்பரை என்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டதற்கும் - உணர்வுகளின் ஊற்றுக் கண்ணாய் இருப்பது நமது தாய்சங்கமான வன்னிய மகா சங்கமே.

இந்த சங்கத்தின் 125வது ஆண்டு விழாவை நாம் எல்லோரும் ஒன்று கூடி பெரும் விழாவாக எடுக்க வேண்டியது இச்சங்கத்தை தோற்றுவித்த நம் குலத் தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.


இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்; நம் சமூக ஒற்றுமையைப் பறைசாற்றவும் நம் சமுதாய தலைவர்கள் அனைவரையும் அழைக்க இருக்கிறோம்.

நமக்குள் ஆயிரம் பேதங்கள் இருந்தாலும் - அனைத்தையும் ஒதுக்கி வைத்து ஒரு மேடையில் இருப்பதன் மூலம் நம் பலத்தை உணர்த்துவோம்.

இந்த மாநாட்டில் - வரலாற்றில் வன்னியர் மகா வம்சம் என்ற தலைப்பில்

ஐவன்னியர் சமூகத்தின் வரலாற்றுப் பெருமைகளையும்;

வன்னியர் மகா சங்கம் தோற்றுவித்த நம் குலத் தலைவர்கள் வரலாற்றையும் ஒரு தொகுதியாக ஆவணப் படுத்துகிறோம்.

1920 -1950 காலங்களில் வன்னியர் சங்கம்;

அரசர்குல வாலிபர் சங்கம் ஆகியவை வன்னியர் விழிப்புணர்வுக்காக நடத்திய மாநாடுகள்;

தலைவர்கள் நிகழ்த்திய உரைகள் ஒரு தொகுதியாக ஆவணப் படுத்துகிறோம்.

* அத்திப்பட்டு வெங்கடாசல நாயகர்; சூளை சோமசுந்தர நாயகர்; நாவலர் சோமசுந்தர பாரதியார்;

தி.வே.சதாசிவப் பண்டாரத்தார்; மயிலை சீனி.வேங்கடசாமி; பொன்னம்பலனர் போன்ற அறிஞர்களின் வாழ்வையும் பணியையும் ஆவணப் படுத்துகிறோம்.

ஐநாகப்பன் படையாட்சி; அஞ்சலையம்மாள்; ஜமதக்னி; அர்ததநாரீசவர்மா; செல்லான் நாயகர்; அன்சாரி துரைசாமி போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள்.

சமூக நீதிக்கான சாலைமறியல் போராட்ட தியாகிகள்;

உடையார் பாளையம் வேலாயுதம்; சிதம்பரம் பழநிவேல் போன்ற சமுதாய தியாகிகள் வரலாறுகள் ஒரு தொகுப்பாக ஆவணப் படுத்தப் படுகின்றன.
இதிலேயே புலவர் கலிய பெருமாள்;

தமிழர் விடுதலைப் படை தலைவர் தமிழரசன் போன்ற போராளிகள் வரலாறுகளும் - அடக்குமுறைக்கு எதிர்வினை ஆற்றிய வன்னிய வீரர்களான - கொடுக்கூர் ஆறுமுகப் படையாட்சி; மலையூர் மம்பட்டியான்; சந்தனக்காடு வீரப்பன் உள்ளிட்டோர் வரலாறுகள் தொகுக்கப்படுகின்றன.

கல்வி வள்ளல்கள் பி.டி.லீ செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து மீட்ட வரலாறு ‡ கோவிந்தப்ப நாயகர் அறக்கட்டளையை மீட்க நடக்கும் வழக்கு விபரம்; கந்தசாமி கண்டர்; புன்னமை தியாகராய நாயகர், எட்டியப்ப நாயகர் போன்ற கல்வி வள்ளல்களின் வரலாறு

நமது படைப்பாளிகள் சிந்தனையாளர் விந்தன்; திருச்சி தியாகராஜன் போன்றோரின் வரலாறுகளுடன்; வாழும் படைப்பாளிகளின் சுருக்க வரலாறு;

ஐகாளி என்.ரத்தினம்; கர்ணன் தொடங்கி இன்று வரையிலான திரைப்படக் கலைஞர்கள் வரலாறு
மணி நாகப்பா போன்ற சிற்பிகள்; காவிரிப்பட்டினம் ஓவியர் சூரிய மூர்த்தி மாமல்லபுரம் சிற்பி பாஸ்கரன்; ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் வரலாறுகள் அடங்கிய தொகுப்பு

என 7 தொகுதிகளுக்கான தொகுப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவைகள் நம் கடந்த கால வரலாறுகள்.

நம் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள்.

நிறைய பொருட்செலவில் நடை பெற்று வரும் இப்பணிகளுக்கான செலவினத்தை ஈடு கட்ட விளம்பரங் களையும்;

நன்கொடைகளையும் வழங்கி மகாசங்க மாநாடு சிறக்க ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
உ.பலராமன்
தலைவர்.
வன்னியகுல சத்திரிய மகா சங்கம்

“வே.ஆனைமுத்து பெரியாரின் அசைக்க முடியாத வித்து”

ஜூனியர் விகடன் பாராட்டு

------------------------------------

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாயாய் மகிழ்கிறோம்..

திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் (15 தொகுதிகள்)

90 வயதைத் தொட்டு, பெரியாரின் பெருந்தொண்டராக இன்றும் உற்சாகமாக வலம் வருகிறார் திருச்சி வே.ஆனைமுத்து.

அரசுப் பணியைத் துறந்து அரசியல் பணியை ஏற்றவர். பகுத்தறிவு, நாத்திகம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பொதுவுடமை, தேசிய இன விடுதலை ஆகிய தத்துவத்துக்காக எழுதியும் பேசியும் போராடியும் வருகிறார். இளமையில் முடுக்குடன் இருப்பவர்கள் முதுமையை அடையும்போது மெள்ள தவங்கி, கொள்கையில் சாயம் வெளுத்து, முடங்கிவிடக் கூடும்.

ஆனால், ஆனைமுத்து வயது கூடக் கூட கொள்கை உரம் பெற்றது. அப்படிப்பட்ட ஆனைமுத்து எழுதிய கட்டுரைகள் மொத்தமாக 15 தொகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

அறநெறி அடிக்கற்கள், தமிழ்நாட்டில் பண்டபாட்டுப் புரட்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டம், விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு, நாத்திகன் போர்வாள், மார்க்சியப் பெரியாரியம், இயக்கம், அரசியல். ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழீழ விடுதலை, காலப்பதிவுகள், பெரியாரியல் ... என்ற பகுப்புகளாய் பிரிக்கப்பட்டு காலவரிசைப்படி இந்தக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.

ஆனைமுத்துவின் அரசியல் அடிநாதமாக அமைந்தவை இரண்டு கருத்துக்கள். ஒன்று, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, அதற்காகவே தொடக்கம் முதல் இன்று வரை இடைவிடாமல் பேசி வந்துள்ளார்.

சமுதாயத்திலும் அரசியல் அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் சமநிலை பெறாதவர்கள்தான் இந்தியச் சமூகத்தில் 95 சதவீதத்துக்கும் மேல் வாழ்கிறார்கள். அவர்களின் குரலாக ஆனைமுத்துவின் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எந்த சாதியை அடிப்படையாக வைத்து கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப் பட்டார்களோ அதையே அந்த வாய்ப்பை அடையும் வழியாக மாற்றியது இட ஒதுக்கீடு தத்துவம்.

அதற்காக அந்த இட ஒதுக்கீடு மட்டுமே சமூகத்தை முழுமையாக முன்னேற்றி விட முடியாது என்ற யதார்த்தத்தையும் ஆனைமுத்து சொன்னார். இந்த இட ஒதுக்கீட்டை வைத்து சாதிப்பிளவை அதிகப்படுத்தும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் ஆனைமுத்து கண்டித்தார். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பது ஆனைமுத்துவின் உன்னத லட்சியமாக இருக்கிறது.

இன்னொன்று... மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் பகை சக்தியாக இல்லாமல் நட்பு சக்தியாக பார்க்க வேண்டும் என்ற பார்வையைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆனைமுத்து.

பெரியாரை நிலப்பிரபுத்துவவாதியாக மார்க்சிஸ்டுகளும், மார்க்சியர்களை வறட்டு இயக்கத்தவர்களாக பெரியாரிஸ்டுகளும் ஒதுக்கியபோது ஒன்றிணைப்பை வலியுறுத்திச் செயல்பட்டவர் இவர். இவரால் தான் இன்று இரண்டு தரப்பினரும் இணக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இப்படி தத்துவ ரீதியாகவும் போராட்டங்களின் மூலமாகவும் தனது பங்களிப்பைச் செய்த ஆனைமுத்துவின் எழுத்துக்களை மொத்தமாகப் படிக்கும்போது பெரியாரின் அசைக்க முடியாத வித்து இவர் என்பதை உணர முடிகிறது.
புத்தகன்.

பெரியார் நூல் வெளியீட்டகம்

8/2, இராசரத்தினம் தெரு, இரண்டாம் மாடி,
மேற்குத் தாம்பரம், சென்னை ‡ 45.

(15 தொகுதிகளும் சேர்த்து) விலை : 4,500

திண்டுக்கல் கரியாம்பட்டி கலவரம் காவல்துறை அராஜகத்தைக் கண்டித்து 98 பட்டி கிராம வன்னியர்கள் உண்ணாவிரதம்

சன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஒரு பெண் ஊழியர் சன் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜா என்பவர் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்கிறது ஜெயலலிதா அரசு.

கேப்டன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஒரு பெண் ஊழியர் சம்பளப் பிரச்சனை தொடர்பாக பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதற்குப் பிறகு அந்த பெண் ஊழியர் அந்த தொலைக் காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் தினேஷ்குமார் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். தினேஷ் குமாரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கிறது ஜெயலலிதா அரசு. இதெல்லாம் சரிதான்.

ஆனால் - பள்ளி மாணவிகளையும்; இளம் பெண் களையும் கடத்துவது; கற்பழிப்பது; பிளாக்மெயில் செய்து பெற்றோர்களிடம் பணம் பறிப்பது என்பதையே தொழிலாகக் கொண்டு கொழுத்து திரியும் சமூக விரோதக் கும்பல் தமிழ் நாட்டையே கலவரக் காடாக்கிக் கொண்டிருக் கிறதே! அதை ஒடுக்க ஜெயலலிதா அரசு இந்த வேகத்தை; இந்த அக்கறையை எப்போதாவது காட்டியதுண்டா?

முதல்வர்களுக்கு வேண்டாதவர்களை ஒடுக்குவது மட்டும் தான் தமிழகக் காவல்துறையின் வேலையா?


தமிழகத்தைக் கலவரக் காடாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காமக் கொடூரன்களை ஒடுக் குவதில் ஜெயலலிதா அரசுக்கு அக்கறை இல்லையா?

இவர்கள் மீது புகார் கொடுத்தால அதன் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு‡
புகார் கொடுத்தவர்களுக்கு எதிராக ‡தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தைக் கேடயமாக்கிக் கொண்டு இந்த சமூக விரோதக் கும்பல் கொடுக்கும் பொய்ப்புகார்கள் மீது நடவடிக்கை என்ற பெயரால் - பாதிக்கப் பட்டவர்களையே தங்கள் பங்குக்கு அடித்து நொறுக்கி அராஜகம் செய்வதுதான் காவல்துறையின் வேலையா?

பயிர்களை அழித்துவிட்டு களைகளுக்கு உரமிட்டு வளர்க்கிறதே தமிழக அரசு?

ஜெயலலிதா அரசாக இருந்தாலும், கருணாநிதி அரசாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.
இதனால்தான் தருமபுரி கலவரம். இதற்கு இந்த சமூக விரோதக் கும்பல் மட்டும் காரணமில்லை. 


இந்தக் கும்பலை ஒடுக்கத் தவறிய கருணாநிதி; ஜெயலலதா அரசுகளும் தான் காரணம்.

இப்போது திண்டுக்கல்லில் ஒரு கலவரம். இதற்கு என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிக அளவில் வாழும் ஊர் கரியாம்பட்டி. இதனை ஒட்டி சக்கிலியர் சமூக மக்கள் வாழும் ஊர் நடுப்பட்டி. அமைதியாக இருந்த ஊர்கள் இவை.

கடந்த ஜூன் மாதத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் வன்னிய சமூக இளைஞர்களுக்கும்; சக்கிலிய சமூக இளைஞர்களுக்கும் இடையே சின்னத் தகராறு.


ஜூலை மாதத்தில் - நடுப்பட்டி இளைஞர்கள் ஒண்டி வீரன் படத்தைப் போட்டுப் பார்த்துவிட்டு ஒண்டி வீரன் படம் போட்ட பனியன்களைப் போட்டுக் கொண்டு - சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சக்கிலியன் மிரண்டால் இந்த ஊரு கொள்ளாது என்ற முழக்கத்தோடு - வன்னியர் குடியிருப்புப் பகுதிகளில் வந்து ஆபாச சைகையோடு குத்தாட்டம் போடுகிறார்கள்.

கரியாம்பட்டியைச் சேர்ந்த வர்கள இதையயல்லாம் உங்க நடுப்பட்டியில் போய் வைத்துக் கொள்ளுங்கள் எங்கள் வீடுகளின் முன்பு இப்படி ஆடக்கூடாது என்று சொல்லி அனுப்புகிறார்கள்.

மறுநாள் வயல்வெளிகளுக்குப் போன இரண்டு இளைஞர்களை சக்கிலிய சமூக இளைஞர்கள் தகராறு செய்து அடித்து விட்டு - முன்னெச்சரிக்கையாக - காவல்நிலையத்துக்குச் சென்று 21 பேர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கிறார்கள்.

இது தெரிந்தவுடன்; கரியாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று கலவரத்தைத் தூண்டும் நடுப் பட்டியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுக்கிறார்கள்.


காவல்நிலையத்தில் கரியாம் பட்டியினர் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றவுடன் - மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து முறையிடுகிறார்கள்.

தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த் தைக்குழு போடுகிறார், மாவட்ட ஆட்சித் தலைவர்.


அமைதிப் பேச்சுவார்த்தைக்குழு நிலக்¼ காட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெளியூர் ஆட்களும்; மதுரை எவிடென்ஸ் கதிரின் வெளியூர் ஆட்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

வெளியூர் ஆட்கள் இந்த அமைதிப் பேச்சு வார்த்தைக் கூட்டத்தில் கலந்து கொள் வதற்கு கரியாம் பட்டியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் - நாங்கள் வெளியேறுகிறோம் என அவர்கள் அனைவருமே வெளியேறி விட்டனர்.


இதனால் அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க வில்çலை.

அடுத்ததாக ம்.யூ.நு. தலைமையில் பேச்சுவார்த்தை நடத் தும்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் - நத்தத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.


“அமைதிப் பேச்சுவார்த்தை என்பது அரசு நடத்தும் கட்டப் பஞ்சாயத்து” என எவிடென்ஸ் கதிர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டது. இருந்தும் பேச்சு வார்த்தை நடந்தது.

அமைதிக்குழுக் கூட்டத்தில்

* சாதித் தலைவர்கள் படம் போட்ட பனியன்களை அணிந்து கொண்டு மற்றவர்கள் பகுதிகளுக்குள் போய் ஆட்டம் போடக்கூடாது.

* இரு ஊர்களுக்கும் பொதுவில் ஒரு புறக்காவல் நிலையத்தை அமைப்பது. கண்காணிப்புக் கேமரா பொருத்துவது என்ற பொதுக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதோடு தங்களுக்கு கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்ற நடுப் பட்டிக் காரர்களின் பொருளாதாரக் கோரிக்கையையும் ஏற்று உடனடியாக 5 லட்ச ரூபாய் நிதியையும் ஒதுக்குகிறது மாவட்ட நிர்வாகம்.

நியாயமாகப் பார்த்தால் இரு கிராமங்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் முடிந்து இருக்க வேண்டும்.

நடுப்பட்டி கிராம மக்கள் மட்டுமாக இருந்திருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்.

பிரச்சனை முடிய விடக் கூடாது. வளர்த்து கலவரத்தை பெரிதாக்க வேண்டும் என்பதற்காகவே நடுப் பட்டிக்கு வந்து முகாமிட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆதித் தமிழர் பேரவைகளைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் கிராமங்கள் அமைதியாக இருக்க விட்டு விடுவார்களா என்ன?

விடுதலைச் சிறுத்தைகளும்; ஆதித்தமிழர் பேரவையினரும் பெண்களைச் சீண்டினால் தான் கலவரம் வெடிக்கும் எனத் திட்டம் தீட்டிக் கொடுத்தது.

21.11.2013 மாலை 3 மணி அளவில் வெள்ளத்தான்பட்டியில் இருக்கும் தன் தாத்தா வீட்டிற்கு போய்விட்டு கரியாம்பட்டிக்கு நடுப்பட்டி வழியாக வந்தார் +2 மாணவி ஒருவர்.

நடுப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்; நாகராஜன்; அழகுபாண்டி; மாரிபாண்டி; அழகுராஜ்; கண்ணன் ஆகிய 6 இளைஞர்களும் அந்த மாணவியை வழிமறித்து; வாடி... வாடி.. வந்து பாருடி பாருடி.. என வேட்டி; ஜட்டிகளை அவிழ்த்துக் காட்டி ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

அந்த மாணவி அவமானப்பட்டு அழுது கொண்டு ஓடி கரியாம்பட்டியில் தன் வீட்டாரிடம் கதறி இருக்கிறார்.

இதைப் பார்த்து கோபப்பட்ட கரியாம்பட்டி இளைஞர்களில் சிலர் நடுப்பட்டிக்குப் போய் மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சக்திவேல் கும்பலில் நான்கு பேர்களைப் பிடித்துவந்து புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.

இதைக் கேட்டவுடன் நடுப்பட்டிக்காரர்கள் திரண்டு வந்து புறக்காவல் நிலையத்தில் இருந்த சக்தி வேலையும் மற்றவர்களையும் இழுத்துக் கொண்டு போய் விடுகின்றனர்.

இந்த செய்தியையும் கேள்விப் பட்ட கரியாம் பட்டிக்காரர்கள் - இதை இப்படியே விட்டால் நாம் மானத்தோடு வாழ முடியாது ஊரைக் கூட்டி முடிவெடுப்போம் என ஒலிபெருக்கி மூலம் ஊர் கூட்டத்திற்கு அழைப்பு விடுகிறார்கள்.

இந்த செய்தியை அறிந்தவுடன் - முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பயனில்லாதிருக்கும 20 குடிசைகளுக்கு தாங்களே தீ வைத்து எரித்து விட்டு; கரியாம்பட்டிக்காரர்கள் எங்கள் வீடுகளை எரிக்கிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் என மாவட்ட காவல்துறையிடம் தொலைபேசியில் அழுதிருக் கிறார்கள்.

உடனடியாக விரைந்து வந்த போலீஸ் படை நடுப்பட்டி காட்சிகளைப் பார்த்துவிட்டு - கரியாம்பட்டிக்குப் போய் கண்மண் தெரியாமல் கண்டபடி அடித்து நொறுக்குகிறது. பெண்கள்; 


முதியவர்கள் மாணவர்கள் என கையில் கிடைத்தவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி ரத்தக் களறியாக்குகிறார்கள். இரண்டு பெண்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டக் கொட்ட போலீஸ் வேனில் தூக்கிப் போடுகிறார்கள். ஒரு இளைஞனின் காலை ஒடித்து நடக்க முடியாமல் வீழ்ந்து கிடந்த அவனையும் வண்டியில் ஏற்றுகிறார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவரை காவல்துறை வண்டியில் ஏற்றுகிறார்கள். மற்ற பெண்கள் அவருக்காக பரிந்து பேசும் போது, நாங்களே பிரசவம் பார்த்து விடுகிறோம். நீங்கள் போங்கள் என்று கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

(பின்னர் காவல் நிலையம் சென்றுஅந்த பெண் மீட்கப் பட்டார்)
51 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

இதில் 3 பேர் மாணவர்கள், 10 பேர் பெண்கள், 6 பேர் அரசு ஊழியர்கள்.

மேலும் 150 பேர்கள் மீது வழக்குப் பதிந்து - தேடி வருவதால் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர். 144 தடையுத்தரவு போட்டு போலீஸ் படை முற்றுகை இட்டு இருப்பதால் ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட மாடுகளும் கன்றுக் குட்டிகளும் தண்ணீர், தீனி இல்லாமல் இறந்து போய்விட்டன.


போலீஸ் தாக்கியதில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் ஆச்சிமுத்து இறந்து போனார்.

இந்த ஒரு மாத காலத்தில் மேலும் இரு முதியவர்கள் மருத்துவ, பராமரிப்பு வசதிக்கு ஆளில்லாததால் இறந்து போயிருக்கின்றர்.

இறந்த மூன்று பேர்களையும் அடக்கம் செய்யக்கூட ஊரில் ஆண்கள் இல்லாததால் - பெண்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள்.


மேலும் பாதுகாப்புக்கு என்ற பெயரில் ஊரில் முற்றுகை இட்டிருந்த போலீஸ்காரர்கள் ஊரில் இருந்த ஆடு; கோழி; அத்தனையும் பிடித்து தின்று விட்டார்கள்.


ஊரில் இருந்த அனைத்து இருசக்கர வாகனங்கள்; சிறிய வகை வேன்கள்; டிராக்டர்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.

வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஊரில் இருப்பவர்கள் அறிய முடியாமலும்; ஊருக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளியில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியாமலும் ஒரு மாதத்திற்கு மேல் ஊரே தனித் தீவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள 98 பட்டிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்த உடன் - மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இறங்கி வந்து இனி யாரையும் கைது செய்ய மாட்டோம்;

கரியாப்பட்டிக்குள் செல்வதைத் தடுக்க மாட்டோம் என உறுதியளித்ததை அடுத்து - உண்ணாவிரதத்தில் இருந்தவர் களோடு கலந்து பேசி உண்ணா விரதம் விலக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது.

கரியாம்பட்டி கிராமத்தில் இத்தனை கொடுமைகள் நடந்திருக்கும் நிலையில் - மார்க்சிய கட்சித் தவைர் ராமகிருஷ்ணனும்; 


திண்டுக்கல் எம்.எல்.ஏ., பாலபாரதியும் -

* கரியாம்பட்டி சாதிவெறி கொடு மைக்கு எதிராகப் போராட்டம்.

*கரியாம்பட்டி சாதி வெறியர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்.


* தலித் மக்கள் மீது தாக்குதலுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு என உண்மைக்குப் புறம்பாக அறிக்கை விட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கிறார்கள்.

இந்த ராமகிருஷ்ணனையும் பாலபாரதியையும் பார்த்து முகம் சுளிக்கும் பொதுமக்கள் -

“இவங்க பொண்ணுங்க முன்னாடி வேட்டிய அவிழ்த்துக் காட்டினா இவங்க சும்மா இருப்பாங்களா?”

“அநியாங்களுக்கு ஒரு கட்சித் தலைவரும்; ஒரு எம்.எல்.ஏவும் துணை போறது அசிங்கமா இருக்கு?”

“பொண்ணுங்களை அவமானப்படுத்தும் பொறுக்கி கும்பலுக்கு ஆதரவா பேச இவங்களுக்கு வெக்கமா இல்லையா?”

“எங்க தொகுதி (ரிசர்வ்) எம்.எல்.ஏ ராமசாமியே எதுவும் சொல்லாமல் சும்மா இருக்கும்போது இந்த பாலபாரதி எதுக்கு இங்க வந்து கூத்துக் கட்டுது?”

என்றெல்லாம் கேட்கிறார்கள்.

கபோதி கம்யூனிஸ்டுகளுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?

இவர்கள் பின்னால் போக இவர்கள் நிழல் கூட வெட்கப்பட்டு ஒதுங்கிப் போகும் காலம் நெருங்கிக் கொண்டுதானிருக்கிறது.

-


மத்திய மாநில அரசுகளையும் அமைச்சர்களையும் தன் காலின் கீழ் கட்டிப் போட்டிருந்த ஆசாராம் பாபு என்ற சாமியார் பாலியல் குற்றச் சாட்டில் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

- தன் பத்திரிகை பலத்தால் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கிய பத்திரிகை ஆசிரியர் தேஜ்பால் பாலியல் குற்றச்சாட்டில் ‡ விசாரணைக் கைதியாகித் தவிக்கிறார்.

- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக்குமார் கங்குலி பாலியல் குற்றச்சாட்டால் விசாரணைக் கைதியாகப் போவது நிச்சயம் என்ற நிலையில் தலைகவிழ்ந்து நிற்கிறார்.

ஆனால் - மாணவிகளையும்; இளம் பெண்களையும்; கடத்தி கற்பழித்து பிளாக்மெயில் செய்து பணம் பறித்து கடிவாளம் இல்லாமல் திரியும் இந்த சமூக விரோதக் கும்பலுக்கு மட்டும் ஒரு முடிவு வராமலா போகும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

முசாபர் நகர் கலவரத்தின் போது ராணுவமும் தான் வரட்டுமே... அதையும் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம் என உத்திரப் பிரதேச ஜாட் சமூகத்தினர் போராளிகளாய் மாறி மூர்க்கமாகி நின்றதைப் பார்த்தோம்.


தமிழக சமூகங்களும் அப்படி மாறாமல் இருக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிடம் தான் இருக்கிறது.