வெள்ளி, 21 நவம்பர், 2014

சிலம்பூரில் ஐயனார் கோவிலை வைத்து கலவரத்தை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் சதி

சிலம்பூரில் 
ஐயனார் கோவிலை வைத்து கலவரத்தை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் சதி


மனிதனின்  நாகரிகத்தைப்போன்றே இறை வழிபாடும் பல்வேறு கால கட்டங்களில் மாறி வந்துள்ளது. ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டான். அடுத்து வந்தவர்கள் தங்கள் மூதாதையர்களையும், சிறு தெய்வங்களையும், தங்கள் குலத்துக்கு உரித்தான தெய்வங்களையும் வழிபட்டனர். சிறு தெய்வ வழிபாட்டில் போரில் வீர மரணம் அடைந்தவர்களையும், குடும்பத்தில் அகால மரணமடைந்தவர்களையும் தெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கமும் உண்டு.

காலப்போக்கில் எங்கும் நிறைந்த எல்லாவற்றையும் படைத்த பரம்பொருள் ஒன்றை கண்டுகொண்டு, அத்தெய்வத்தை வழிபடுவதற்கான வழிமுறைகளை முறைப்படுத்தினர். இப்படியாக பெருந்தெய்வ வழிபாடு பிறந்து வந்து நிலைத்துவிட்ட காலத்திலும்;
   சிறுதெய்வ வழிபாடும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியதாக வளர்ந்து வந்தது.

மன்னர்கள் ஒரு நாட்டின்மீது படையயடுத்துச் செலலும்போது, தம் வெற்றியின் அடையாளமாக அந்த நாட்டு அரசகுலப் பெண்களை வாரிசுகளை, வீரர்களை சிறையயடுத்துத் திரும்புவது உண்டு.

அப்படி கொண்டு வரப்பட்டவர்கள் வந்த இடத்திலேயே தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். மன்னர்களால் இவ்விதம் நாடுவிட்டு நாடு கொண்டு வரப்பட்டவர்களுக்கு கொண்டி மக்கள் எனப் பெயர். பின்னர் இவர்கள் கொண்டியார் எனும் பெயரில் ஒரு
  சமூகமாகத் திரண்டனர். தமிழகத்தில் சென்னை, சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர் உட்பட பல மாவட்டங்களில் கொண்டியர் இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் எங்கே வாழ்ந்தபோதும் தம் குலதெய்வமான ஐயனாரை மறப்பதில்லை. அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தின் ஏரிக்கரையையயாட்டி அருள்பாலித்துவரும் கொண்டி ஐயனார், இவ்வின மக்கள் தேடிவந்து வழிபடும் ஆற்றல்மிகு தெய்வமாக விளங்குகிறார்.

இப்படித்தான் பூரணி பொற்கலையயன ஐயனார் எங்க காவல் தெய்வமானார். வீரனார், கருப்பையா, பச்சையம்மாள், முத்தையா இவங்களோடு சேர்த்து கருமுனி, செம்முனி, வேதமுனி, வாமுனி, நாதமுனி, முத்துமுனி, வேங்கைமுனின்னு ஏழு முனிகளும் தங்கள் ஐயனாருக்கு ஏவல் தெய்வங்களா இருக்காங்க" என்று நீண்ட வரலாறு சொன்னார்கள் அச்சமூகத்தின் தலைவர்கள்.

நீங்கள் என்னை வழிபட்டு எனக்கான பூஜைகளைச் செய்யுங்கள். நான் உங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறேன் என்பது போலுள்ளது கொண்டி ஐயனாரின் தோற்றம். ஐயனாருக்கு பணி செய்வதாக வேண்டிக் கொண்டவர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும், குறைவில்லா வாழ்வு கூடும் என்பது ஐயனார் அருள் பெற்றவர்களின் அனுபவப் பூர்வமான வார்த்தை.

விருத்தாச்சலம் - நெடுஞ்சாலையில், ஆண்டிமடத்திலிருந்து மேற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொண்டி ஐயனார் கோவில்.
   பஸ், கார் முதலிய போக்குவரத்து வசதிகளுண்டு.

சென்னையில் எங்கள் இன மக்கள் குடியேறிப் பெருகிய இடமே கொண்டித்தோப்பு. இந்தக் கோவில் எங்கள் சமூகத்துக்குப் பாத்தியப்பட்டது. இங்கே கோவில் பூசாரியிலிருந்து கணக்கு வழக்குவரை எங்க சமூகத்தவங்கதான். மூத்தவரும் முன்னாள் மணியக்காரருமான சிதம்பரக் கொண்டியார் கோவிலை நிர்வாகம் பண்றார்." என்கிறார்கள் சிலம்பூர் பிரமுகர்களான சுயப்பிரகாசம், முத்துசாமி, வரதராஜன், சக்கரவர்த்தி, சசிக்குமார், செல்வராசு, சிங்கு, சுப்பு, ராமலிங்கம் ஆகியோர்.
சிலம்பூரில் கொண்டியார் இன மக்கள் போலவே வந்து குடியேறிய இன்னொரு குடி பல்லவராயர் இனமக்கள். ஊரின் மேல்பாதியில் பல்லவராயர் இன மக்களும், கீழ்பாதியில் கொண்டியார் இன மக்களும் வசிக்கின்றனர். இரு இனத்தாரும் மாமன் மைத்துனர் உறவுகொண்டாடி அன்யோன்யமாக வாழ்கின்றனர். பல்லவராய மக்கள் பெரிய நாயகியையும் ஓம் சக்தியம்மனையும் தம் குல தெய்வமாக வணங்குகின்றனர்.


கொண்டி இனமக்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. முன்பெல்லாம் பல்லவராய இனமக்கள் பெரியநாயகியம்மனுக்கு பலி, பூஜை நடத்தி படையலிடும்போது இவர்கள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர மாட்டார்களாம். இப்போது அதுபோல் இல்லையயன்றாலும், அசைவம் சாப்பிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஐயனாருக்கு கும்பாபிசேகம் நடத்தியிருக்கும் இம்மக்கள் கொண்டி இனத்தார் எங்கிருந்தபோதும் தங்கள் குல தெய்வத்தைத் தெரிந்து கொண்டு இங்கு வரும்படி அழைப்பு விடுக்கின்றனர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 200 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்


அமைதியாக இருக்கும் ஊர்களில் அமைதியைக் குலைத்து -
கலவரத்தை உருவாக்குவதன் மூலமே தங்கள் இன மக்களை ஒருங்கிணைத்து கட்சியை வளர்க்க முடியும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

அமைதியாக இருக்கும் சிலம்பூரை மட்டும் விட்டு விடுமா?

காலம் காலமாக சிலம்பூர் ஐயனார் கோவில் பராமரிப்பு; கோவில் விரிவாக்கம்; கோவில் பூசாரி என எல்லாமும் கொண்டியார் இன மக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது.

மற்ற
  சமூக மக்களுக்கும் இந்தக் கோவிலில் வழிபட வருவார்கள். அப்படி வரும் கொண்டியார் அல்லாத சமூகத்தவர்கள் கூட கொண்டியார் சமூகப் பூசாரி மூலம்தான் வழிபாடு செய்து கொடுக்கச் சொல்லிப் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்
கடந்த ஆடி மாதம் அதே ஊரைச் சேர்ந்த திருமாவளவன் கட்சியினர் இந்த ஐயனார் கோவிலில் எங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறியதோடு ஐயனார் கோவிலின் உள்ளே கருப்புசாமி சிலை வைக்கப்போகிறோம் என அறிவித்து சாதி மோதலை உருவாக்க முயன்று வருகின்றனர்.

இதற்கு கொண்டியார் சமூக மக்கள் மட்டுமல்லாமல் - அந்த ஊரில் உள்ள எல்லா சமூக மக்களும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

உடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

உண்மை நிலவரம் என்ன என்று தெரியாமலே ஊரில் உள்ள 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது காவல்துறை.

இந்த வழக்கை எதிர்த்து ஊர்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து -

நிலைமை விபரீதமாவதை உணர்ந்து ஜெயங்கொண்டம் கோட்டாட்சியர் கருணாகரன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த பேச்சு வார்த்தையின்போது கோவில் தங்கள் சமூகத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதற்கான ஆதார ஆவணங்களை கொடுத்திருக்கின்றனர் கொண்டியார் சமூகப் பிரமுகர்கள். ஆவணங்களைப் பார்வையிட்ட ஜெயங்கொண்டம் கோட்டாட்சியர் கருணாகரன்.

கோவில் கொண்டியார் சமூகத்திற்கு மட்டுமே சொந்தமானது. அவர்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் வழிபடலாம். அவர்கள் அனுமதிக்காவிட்டால் அதைமீறி நீங்கள் செல்ல உரிமை இல்லைஎன அறிவித்து -
எழுதி இரு தரப்பினரிடமும் கையயாப்பம் பெற்றுள்ளார்.

இதையயல்லாம் தெரியாமல் -

காவல்துறை சிலம்பூரைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு போட்டிருக்கிறது.

வன்னிய இன மக்கள் வாழும் ஊர்களைக் குறிவைத்து திருமாவளவன் கும்பல் சாதி மோதலை உருவாக்குவதை திட்டமிட்ட செயலாகச் செய்து
வருவதால் - வன்னிய இன மக்களும் மற்ற சமூக மக்களும் இதனை  சட்டபூர்வமான வழிகளில் எதிர்கொள்ள ஒற்றுமையாக இருப்பது அவசியம். 
  - சிவசாரதி

ஞாயிறு, 16 நவம்பர், 2014

அழிக்கப்படவேண்டிய நச்சுமரம் வேலிக்காத்தான் - பெ.பழநிச்சாமி

அழிக்கப்படவேண்டிய நச்சுமரம்
வேலிக்காத்தான்

வேலிக்காத்தான் - சீமை வேலிக்காத்தான், வேலிக்கருவை எனப் பல பெயர்களில் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் நிலங்களில் மட்டுமல்லாது காடுகளிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இத்தாவரத்தின் தாயகம் மெக்சிகோ, இந்த நச்சு மரம் தென் அமெரிக்காவிலிருந்து இங்கு பரவி வளர்கின்றது.

இந்த வேலிக்காத்தான் மக்களுக்கும் வேளாண்மைக்கும் எதிரிெயன தாவரவியல் கூறுகின்றது. நிலத்தடி நீர் வளப் பெருக்கத்திற்கு இது எதிரி. நிலத்தடி நீரை 175 அடி வரை தனது வேரை பூமியின் அடியில் செலுத்தி அங்குள்ள நீரையயல்லாம் உறிஞ்சி விடுகின்றது. மேலும் காற்று வெளியில் உள்ள தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றது. எனவே இது உள்ள இடம் விரைவில் வறண்ட பிரதேசமாகின்றது.

இது வறண்ட பாலை நிலத்திலும் உவர்ப்பு மண்ணிலும் கூட நன்றாக வளர்கின்றது. சுமார் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும்  நன்றாக வளர்கின்றது.

டாக்டர் ஆண்டர்சன் என்பவர் இத்தாவரம், பொருளாதார மற்றும் வேளாண்மை சீர்கேட்டை உண்டுபண்ணுவதாகக் கூறுகின்றார். வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல் பூண்டுகள் கூட அழிகின்றன. நீரை உறிஞ்சி பூமியைப் பாலையாக்குகின்றது. கால்நடைகள் இதனை உண்டு நச்சுத் தன்மையால் வயிற்றுப் போக்கு உண்டாகி இறந்து போகின்றன. இவை போன்றவை அவரது கண்டுபிடிப்புகளாகும். 

1950களில் பயிர்களுக்கு வேலியாக அடைக்கலாமென்ற மிகத் தவறான புரிதல் காரணமாக கொண்டு வரப்பட்டது. மிக வேகமாகப் பரவி தமிழக நிலங்களையும் காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில், இத்தாவரம் வேளாண்மைக்கு எதிரி என அறிவிக்கப்பட்டு கண்காட்சிகளில் மட்டும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நீர்மிகு மாநிலம் கேரளா, மிக அதிகமாக தண்ணீர் கிடைக்கின்ற நம் அண்டை மாநிலமான கேரளாவில் முழுமையாக இது அழிக்கப்பட்டு விட்டது. 

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டன. திரும்ப இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் விளை நிலங்களில் இவை 25 விழுக்காடு பயிரிட முடியாமல் நிலத்தையே பாழ்படுத்தி   வருகின்றன. 

மழை பெய்யவில்லை எனினும், நிலத்தடி நீரை உறிஞ்சி தனது இலைகளை செழுமையாக வைத்துக் கொள்கின்றது. இதனை எந்த நோயும் பூச்சியும் தாக்குவதில்லை. எந்த இடத்திலும் இது மற்ற தாவரங்களை அழித்து விட்டு வளர்கின்றது.

 வேலிக்காத்தானால் ஏற்படும் தீமைகள் :

 1.நிலத்தை வீணாக்குகிறது.

 2.நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகின்றது.

 3.விவசாயம் செய்யவிடாமல் எல்லா செடிகளையும் அழித்து விடுகின்றது.

 4.புல் அடியோடு வளரவிடாமல் கால் நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

 5.இது உள்ள ஊரே நீரின்றி பாலைவனம் போலச் செய்யவல்லமை கொண்டது.

 6.நஞ்சு மிகுந்த முள்ளால் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து.

 7.நிலத்தடி நீர் குறைவதால் அரிய வகை மூலிகைகள் அழிகின்றன.

 8.பிற தாவரத்துடன் கலந்து இதனை உண்ணும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றன.

 9.இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால் இதனை சுற்றிலும் வெப்பநிலை அதிகரிக்கின்றது.

வேலிக்காத்தானை அழிக்கும் முறை :

இயந்திரங்களைக் கொண்டும் கூரிய ஆயுதம் கொண்டும் இம்மரங்களை வெட்டி வீழ்த்தி அழிக்கலாம். வெட்டிய பிறகு அதன் வேர்களை வெட்டி எடுத்து முற்றுமாக எரித்து விடுவதே நிரந்தரத் தடுப்புக்கு வழி.

முதலில் காடுகளில் உள்ள இந்த நச்சுத் தாவரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வனத்துறை பிடுங்கி எறிய வேண்டும். பிடுங்கிய பின்னர் காட்டில், பத்திரமாக மற்ற மரங்களை சேதப்படுத்தாமல், வேர்களை எரித்து முழுமையாக அழிக்க வேண்டும்.  காட்டைக் காப்பாற்றி மழை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்துவது வனத்துறையினரின் தலையாய கடமை.

சனி, 15 நவம்பர், 2014

வளர்க்க வேண்டிய வன்னிமரம்

வளர்க்க வேண்டிய வன்னிமரம்

இருபதாம் நூற்றாண்டில் உத்திராஞ்சல் மாநிலத்தில் ஒப்பந்தக்காரர்கள் இமயமலைப் பகுதி வனத்தில் உள்ள மரங்களை வெட்ட வந்தபோது, கிராமத்து மக்களே மரங்களை அணைத்து வெட்ட விடாமல் தடுத்த போராட்டமே சிப்கோ இயக்கம். இதுபோல் ஒரு போராட்டம் 18-ஆம் நூற்றாண்டில் மார்வாரி ராஜ்ஜியத்தில் நடந்தது.

கி.பி  1495இல் மராட்டிய வீரன் ஜாம்பாஜி உருவாக்கிய சித்தாந்தம் வன்னி மர வளர்ப்பு. எட்டாண்டு வறட்சியை இலந்தையும் வன்னியும் தாங்கி வளர்ந்ததையும் பஞ்ச காலத்தில் ஒன்றுமே கிடைக்காத சூழ்நிலையில் வன்னிப் பழங்களை உண்டு மக்கள் பசியாறியதையும் எண்ணி பிஷ்ணாய் சித்தாந்திகள் உருவானார்கள். 16 மைல் தூரத்துக்கு வன்னி மரக்காடுகள் உருவாயின.

பின்னர்  250 ஆண்டுகள் கழித்து, மராட்டிய மன்னர் சுண்ணாம்புக் காளவாய்க்கு   வன்னி மரக்காட்டை அழிக்க முடிவு செய்து சிப்பாய்களை அனுப்பினார். பிஷ்ணாய்கள் மரங்களைக் கட்டியணைத்தும் கூட அவர்கள் கொல்லப்பட்டு  

மரங்கள் வெட்டுண்டனவாம். இவ்வாறு உயிர்த்தியாகம் செய்த 363 பிஷ்ணாய்களுக்கும் 363 வன்னி மரங்கள்  1977இல் நடப்பட்டன. வறட்சி தாங்கிப் பாலைவனத்திலும் வளமையை வழங்கிய வரலாறு படைத்த இந்த முள்மரம் இங்கிருக்க எங்கிருந்தோ வந்த வேலிக்காத்தான் நம்மை ஆட்டிப் படைக்கிறதே.

“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே” 
- திருஞான சம்பந்தர்

முதுகுன்றம் என்பது விருத்தாச்சலம். சம்பந்தர் சுவாமிகளால் பாடல் பெற்ற இந்த சிவத் தலத்தில் வன்னியே தல மரம். திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி என்று கணக்கிலடங்கா பல சிவன் கோவில்களில் இதுவே தலமரம்.


வில்வம் இல்லாதபோது வன்னித் தழைகளாலும் சிவனை பூஜை செய்யலாம். வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள். வளம் நிரம்பிய பரம்பு மலையில் தானே பாரி வாழ்ந்தான். பாரியை வள்ளலாக்கிய இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப் படுத்தினோம் என்பது புரியவில்லை.

விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும். முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிவேகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புடையது. இதன் முள் மென்மையானது.  25 அடிக்கு மேல் வளர்வது அபூர்வம். 2 முதல் 3 அடி விட்டம் வரை அடிமரம் பருக்கும். மழைக்காலம் முடிந்த பின் பூக்கும் மஞ்சள் நிறப் பூங்கொத்துக்கள் உருவாகும். மார்ச் முதல் மே வரை கனி கிட்டும். வன்னிப் பழத்தை சதையுடனும் விதையுடனும் பாலை நில மக்கள் விரும்பி உண்பர். குறிப்பாக, ராஜஸ்தான் (மார்வாரி) மக்களுக்கு வன்னி மரம் அவர்களின் உயிர் மரம். ராஜஸ்தானில் ஆடும், ஒட்டகமும் அதிகம் உயிர் வாழ இன்னமும் வன்னி மரங்களே காரணம்.

பஞ்ச காலத்தில் வாழ்வு தரும் வன்னிப் பழங்கள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் புரதச் சக்தி தரும். கால்நடைகளுக்குத் தீவனம். அதிகம் நின்று எரியும் விறகு, பாலை நில மணலில் 60, 70 அடி வேர் ஊடுருவிச் செல்லும், இம் மரத்தின் இலைகள் உதிர்ந்த காட்டில் உள்ள மண்ணைச் சோதனை செய்த போது, ஏராளமான அங்ககப் பொருள்களுடன் எல்லாப் பேரூட்டங்களும் நுண்ணூட்டங்களும் இருந்தன. ஆகவே வன்னியை உயிர் வேலியாக விவசாயிகள் வைத்து வளம் பெறலாம்.

வன்னி மரத்தின் எல்லாப் பாகங்களுமே மருந்துகள். தினமும் ஒரு வன்னிக் கொழுந்தை பூ, காய், பட்டை, வேர் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து 100 மி.லி. பாலில் கலக்கி வடிகட்டி அருந்தி வந்தால் ஆயுள் விருத்தி ஆகும். நோயில்லாமல் வாழலாம். சொறி, சிறங்கு, கபம், பித்தம் எல்லாம் தணியும். வாதம் நீங்கும்.

வன்னிப் பட்டையை கால் கிலோ எடுத்து பஞ்சு போல் நசுக்கவும்.. ஒரு லிட்டர் விளக்கெண்ணையில் நன்கு காய்ச்சி வடித்து எடுத்துக் கொண்டு தினமும் காலை 25 மி.லி. வீதம் ஒரு வாரம் வரை பெண்கள் அருந்தினால், வெள்ளைப்படுவதும் நீங்கும், கருச்சிதைவு ஏற்படாது. பட்டைக் கஷாயம் தொண்டைப்புண்ணுக்கும் மருந்து.

வன்னிமரம் சிவபெருமானுக்கும் சனி பகவானுக்கும் உரிய மரம். உள்ளுக்குச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.   பல வகையிலும் பயனுள்ள இம்மரத்தை ஊர்தோறும் வளர்த்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே அருமையான புதர்க்காட்டை உருவாக்கலாம். வனத்துறையை அணுகினால் விதை அல்லது கன்றுகள் கிட்டும். 

யாரையும் விட சட்டம் மேலானது என்பதை நிரூபித்த தீர்ப்பு!

"யாரையும் விட
சட்டம் மேலானது”
என்பதை
நிரூபித்த தீர்ப்பு!



டான்சி வழக்கில் கவிழ்ந்த நீதியின் தலை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கின் தீர்ப்பால் நிமிர்ந்திருக்கின்றது.

யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம்; எந்த வழக்கிலிருந்தும் தப்பிவிடலாம் என்ற மமதைக்கு விழுந்த மரண அடி. இந்தத் தீர்ப்பு.

ஜெயலலிதாவுக்கு எதிரானதுதான் இந்தத் தீர்ப்பு. வழக்கு தொடுத்த கருணாநிதியையே கலங்கடித்திருக்கிறது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் மகிமை.

வருவாய் வழிவகைக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் - ஜெயலலிதா; அவரது தோழி சசிகலா; சசிகலாவின் உறவினர்களான சுதாகரன்; இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம்; சசிகலா; இளவரசி; சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா பத்துகோடி அபராதம்.

யாரிந்த மைக்கேல் டி.குன்ஹா?
இந்தியர்கள் மட்டுமல்ல, உலக  நாடுகளைச்  சேர்ந்தவர்களையும் இந்தக் கேள்வியைக் கேட்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா.

ஒரு ஊழல் வழக்கில் இவ்வளவு அழிச்சாட்டியங்களைச் செய்ய முடியுமா என உயர்நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை வியக்கும் அளவுக்கு அத்தனை  சட்ட அழிச்சாட்டியங்களையும் செய்தார் ஜெயலலிதா.

66 கோடி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதற்காக ஆயிரங்கோடிக்கு மேல் செலவழித்திருப்பார் ஜெயலலிதா என்கிறார்கள். 

அப்பவும் தப்பமுடியவில்லை என்பதுதான் விதியோ?

எல்லோரையும் காலில் விழவைத்து பூரித்த ஜெயலலிதா .

இந்த வழக்கு போடப்பட்டபோது எனக்கு வயது 48, இப்போது 66. இந்த வழக்கு டார்ச்சர் காரணமாக எனக்கு ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய்; மனச்சோர்வு எனப் பல்வேறு பாதிப்புகளால் நிம்மதி இழந்துள்ளேன்.  இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என -

நீதிபதி குன்ஹா முன்பு மமதை அழிந்து தெண்டனிட்டு நின்றாரே?

இதைவிட டி.குன்ஹா கொடுத்த 4 ஆண்டு சிறைத் தண்டனையும் நூறுகோடி அபராதமும் ஒன்றும் பெரிய தண்டனை அல்ல தான்.

இந்தத் தீர்ப்புக்குப் பின் -

29.9.2014 நாளிட்ட தமிழ் இந்து நாளிதழ், வாய்மை வெல்லட்டும் என்று ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அந்தத் தலையங்கத்தின் இறுதி வரிகளில் இந்த வழக்கு எவ்வளவு அதிகார துஷ்ப்பிரயோகங்களைச் சந்தித்தது என்பது குறித்து இவ்வாறு எழுதுகிறது-

“ஏறத்தாழ 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இது.

அதிகார உச்சத்தின் உக்கிரத்தை – அழுத்தங்களை

எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட விசாரணை. 

இறுதியில் –

அரசுத் தரப்பும்; இந்த வழக்கை வெவ்வேறு காலங்களில் விசாரித்த பல்வேறு நீதிபதிகளும் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார்கள்.  (அனுபவித்த) எல்லா இடர்பாடுகளையும் தாண்டி- தம்முடைய கடமைகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். நீதியின்முன் எல்லோரும் சமம் என்னும் ஒளிபொருந்திய உண்மை நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறையின் பணி இந்திய ஜனநாயகத்தின் மீதான கம்பீரத்தை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.

எப்போதும் வாய்மையே வெல்லட்டும்."

அதிகார உச்சத்தின் உக்கிரத்தை; அழுத்தங்களை; நெருக்கடிகளை-

என்ற ஒவ்வொரு வார்த்தை குறித்தும் நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதலாம்.

என்றாலும் -

இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட பி.வி.ஆச்சாரியாவுக்கு ஜெயலலிதா தரப்பிலிருந்து எவ்வளவு தொல்லைகள் கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிந்து கொண்டால்-

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு எவ்வளவு அழுத்தங்கள்; எவ்வளவு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கும்என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

ஆச்சாரியா நேர்மையான; திறமையான; கறாரான வழக்கறிஞர். ஜெயலலிதாவின் டான்சி வழக்கு பார்முலாவுக்கு மசியாதவர். இவர் தொடர்ந்து இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடித்தால் வழக்கு சீக்கிரம் முடிந்து தண்டனை கிடைத்துவிடும் என்ற முடிவுக்கு வந்த ஜெயலலிதா-

அதிமுக தேசிய அளவில் பிஜேபியோடு கொண்டிருந்த நெருக்கமான உறவைப் பயன்படுத்தி- 

கர்நாடக மாநில பிஜேபி அரசு மூலம் இவரை நீக்க அழுத்தம் கொடுத்தார்.

பி.வி.ஆச்சாரியா கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும்; இந்த வழக்கின் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டராகவும் இருந்ததால்-

அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கெளடா மூலம் ஏதாவது ஒரு பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இவர்கள் நினைத்தார்கள்-

கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கின் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவியை ஆச்சார்யா விட்டு விடுவார் என்று. 

ஆனால்-

பி.வி.ஆச்சார்யா ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவியை வைத்துக் கொண்டு கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவியை பிப்ரவரி 2012இல் ராஜினாமா செய்து விட்டார்.

அதன்பிறகும் ஆச்சார்யா அனுபவித்த தொல்லைக்கு அளவே இல்லை.

ஆச்சார்யா பி.எம்.எஸ்.கல்வி   அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். அதில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடு செய்கிறார் என்று லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தனிநபர்புகார் ஒன்றைக்கொடுக்க வைத்தார்கள். லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட்டதும் . இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் போனார் ஆச்சார்யா. இவர் மீதான புகாரைத் தள்ளுபடி செய்ததோடு வழக்குத் தொடுத்தவர் ரூ 50,000/. ஆச்சார்யாவுக்குக் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி மன உளைச்சலுக்கு ஆளான ஆச்சார்யா ஜூலை  2012இல் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். 

அதுபற்றியயல்லாம் இப்போது நான் பேச விரும்பவில்லை   என்கிறார் ஆச்சார்யா.

இதன்பிறகுதான் பவானிசிங் சிறப்பு அரசு வழக்கறிஞராக வந்தார்.

அரசு வழக்கறிஞருக்கே இத்தனை தொல்லை கொடுத்தவர்கள்; இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகளுக்கும்; இறுதி நிலையை எட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.குன்ஹாவுக்கும் எவ்வளவு தொல்லை கொடுத்திருக்கும் ஜெயலலிதா தரப்பு என்பதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

கற்பனை செய்தாலும் கற்பனைக்கும் எட்டாததாகவே இருக்கும் ஜெயலலிதா தரப்பு நீதிபதி டி.குன்ஹாவுக்கு கொடுத்திருக்கக் கூடிய தொல்லைகள்.

இத்தனையையும் மீறி-

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா சில வரலாறுகளைப் படைத்துள்ளார்.

1.முதல்வராக இருக்கும்போது ஊழல் வழக்குத் தீர்ப்பால் பதவி இழந்த முதல் முதல்வர் இந்திய அளவில் ஜெயலலிதா மட்டுமே.

2.ஏற்கனவே டான்சி ஊழல் வழக்கில் முதல்வர் பதவியை 2001இல் இழந்துள்ளார் என்பதால் ஊழல் வழக்கால் முதல்வர் பதவியை இரண்டு முறை இழந்தவரும் ஜெயலலிதா மட்டுமே.

3.இந்த வழக்கில் யாரும் பெறாத அளவுக்கு ரூ 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டவரும் ஜெயலலிதா மட்டுமே. இவ்வளவு பெரிய அபராதத் தொகை இதுவரை எந்த ஊழல் வழக்கிலும் விதிக்கப்பட்டதில்லை. இதன் மூலமும்   ஜெயலலிதா வரலாறு படைத்துள்ளார்.

4.டான்சி வழக்கு; பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு; கலர் டிவி வழக்கு; லண்டன் ஓட்டல் வழக்கு; பிறந்தநாள் பரிசு வழக்கு என இத்தனை ஊழல் வழக்குகள் இந்திய வரலாற்றில் வேறு எந்த முதல்வர் மீதும் போடப்பட்டதில்லை.


மற்றவர்கள் மீதான அடக்குமுறையில் ஜெயலலிதா படைத்த வரலாறு.

தடா; பொடா; தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் அதிக வழக்குகள் போட்டு சர்வாதிகார வரலாறு படைத்தவர் ஜெயலலிதா.

1.தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரை 1993இல் தடா சட்டத்தின் கீழ் கைது செய்து ஏழு மாதங்கள் சிறையில் அடைத்தார். சிறையிலிருந்து வெளிவந்த சிறிது காலத்தில் பெருஞ்சித்திரனார் மரணமடைந்தார்.

அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகளைப் போட்டு ஒரு தமிழறிஞரை சாகடித்த பெருமை ஜெயலலிதாவிற்கு உரியது.

பொடா சட்டத்தின் கீழ்:-
வைகோவை - 570 நாட்கள் (19 மாதம்) சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

பழ.நெடுமாறனை - 510 நாட்கள்  (17 மாதம்) சிறையல் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

புதுக்கோட்டை பாவாணனை - 527 நாட்கள் (17 1/2 மாதம்) சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தியவர் ஜெயலலிதா.

சுப.வீரபாண்டியனை -  494 நாட்கள்  (16  1/2 மாதங்கள்) சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

நக்கீரன் கோபாலை  - பத்திரிகையாளரை  252 நாட்கள்  (8  1/2 மாதங்கள்) சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் :
காடுவெட்டி குருவை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழக்குகளை போட்டு 4 முறை   தேசிய பாதுகாப்புச்  சட்டத்தின் கீழ் கைது செய்து  219 நாட்கள் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

இது மட்டுமல்லாமல் ராமதாசு கைதின் போது 130 க்கும் மேற்பட்ட வன்னியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வரலாறு படைத்தவரும் ஜெயலலிதாதான்.

வீரபாண்டியார் மீது நில அபகரிப்பு வழக்குப்போட்டு கைது செய்து அலைக்கழித்து, அவர் மரணமடையக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.

தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்க நினைத்து (வளர்ப்பு மகன் சுதாகரன் உட்பட) போடப்பட்ட கஞ்சா வழக்குகள் ஏராளம்.

எத்தனை எத்தனை பொய் வழக்குகள்? 

ஒரு ஜனநாயக நாட்டின் முதல்வராக இருக்கும் போதே . தடா, பொடா, என்.எஸ்.ஏ சட்டங்களின் பெயரால் இவ்வளவு பேர்களைக் கைது செய்து இவ்வளவு அக்கிரமங்களை செய்திருக்கிறார் என்றால்;

இவர் ஒரு சர்வாதிகாரியாக இருக்க நேர்ந்தால் உலக சர்வாதிகாரிகளை மிஞ்சி வரலாறு படைத்திருக்க மாட்டாரா?

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா கட்சியினர் போராட்டம் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால்- நடிகர்கள்; திரையரங்கு உரிமையாளர்கள்; தனியார் பேருந்து உரிமையாளர்கள்; தனியார் பள்ளிகள் ஆகியோர்-

உண்ணாவிரதம்; கடையடைப்பு; விடுமுறை என்று போராட்டங்கள் நடத்துவதைப் பற்றி என்ன சொல்ல?


இவ்வளவு அராஜகங்களை செய்து; ஆண்டுக் கணக்கில் மற்றவர்களை சிறையில் அடைத்த ஜெயலலிதா; தனக்கு தண்டனை என்றவுடன் மறுநாளே ஜாமீனில் வந்துவிட வேண்டும் என்று லண்டனில் இருந்து  ராம்ஜெத் மலானியைக் கூப்பிடுகிறார் என்பது-

தான் மட்டும் சட்டத்திற்கு மேலானவர் என்ற நினைப்பில் ஜெயலலிதா இன்னமும் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

BE YOU EVER SO HIGH,
THE LAW IS ABOVE YOU

“நீங்கள் எவ்வளவு உயர்ந்தவராகவும் இருங்கள் உங்களை விட சட்டம் உயர்வானது”

என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, ஹெச்.கே.சேமா ஆகியோர்   ஜெயலலிதா வழக்கில் எச்சரித்து சொன்ன வாசகங்கள்.

தற்போதைய தீர்ப்பு, அந்த எச்சரிக்கையை நிரூபித்திருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா நினைவில் கொள்ள வேண்டும்.

- ஆசிரியர் குழு

வியாழன், 13 நவம்பர், 2014

ஓப்ரா வின்ஃபிரே - மோசமான அனுபவங்களை தலைகீழாக மாற்றி உலக பிரபலமானவர்

பேச்சே இவரது மூச்சு
ஓப்ரா வின்ஃபிரே
மோசமான அனுபவங்களை
தலைகீழாக மாற்றி
உலக பிரபலமானவர்
ஓப்ரா வின்ஃபிரே

உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால்  ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர்,  சக்தி  வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண், கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர். ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி, உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட மாட்டோமா  என்று ஏக்கப்பட வைத்தவர். இந்தப்  பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஓப்ரா வின்ஃபிரே. 

உலகின் மிகுந்த செல்வாக்கான பெண் இவராக  இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் பாரக்  ஒபாமாவால் பாராட்டப்பட்டவர். அதே ஒபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய  சகஜத்தை ஓப்ரா பெற்றிருந்தார். இதற்குக் காரணம் உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் இருந்ததுதான். 

உலகப் பிரபலர் 
அவருக்கு முந்தைய தலைமுறையில் சினிமா நடிகர், நடிகைகள் பெற்றிருந்த பிரபலத்தை டிவி மூலம் பெற்றவர் ஒப்ரா.  25 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த தி ஓப்ரா வின்ஃபிரே டாக் ஷோ வை நிறுத்துவது பற்றி யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த நிகழ்ச்சி அவ்வளவு  பிரபலம்.

நிகழ்ச்சி தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரே முடிவெடுத்து நிறுத்தி விட்டார். 3 ஆண்டுகளுககு முன் 2011 மே 25.ஆம் தேதிதான் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஒப்ராவின் ரசிகர்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. 

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த போது அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி உலகப் பிரபலமாகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்ற குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதி கொண்டவராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டு வருகிறார்.

 வறுமையின் பிடியில்
அதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் சிறு வயதில் பல நேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக இருந்திருக்கிறது. அப்போது பாட்டி வெர்னிடா லீயிடம் வளர்ந்தார் ஓப்ரா. அவர் அடிக்கடி வீட்டு வேலைக்குப் போய்விட்டதால், பிறகு தந்தையிடம் விடப்பட்டார். அங்கு நெருங்கிய உறவினர்களாலேயே பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். கறுப்பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக இருந்தது. பிறகு காதல் கொண்டவருடன்  14 வயதிலேயே தாயானார். ஆனால். சில  நாட்களில் அக்குழந்தையைப் பறிகொடுத்தார்.

மற்றொருபுறம், சிறு வயதில் இருந்தே ஓப்ராவின் பேச்சுத் திறமையும், வாசிப்பும் மேம்பட்டிருந்தன. இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர் மீது குத்திய ஒவ்வொரு முத்திரையையும் தகர்க்க ஆரம்பித்தார்.

பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். அந்த வருமானமும் போதாத நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலமாக கிடைத்த தொகை மூலம் கல்லூரி; கட்டணங்களைச் செலுத்தினார். கொஞ்ச காலத்தில் உள்ளூர் டிவி அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார்.

அமெரிக்காவில் அந்தக் காலத்தில் ஊரின் வாயை அடக்குவதற்காகக் கறுப்பினப் பெண்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள்  வழங்கப்பட்டதில்லை. ஆனால், ஓப்ரா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் இயல்பான கடும் உழைப்பைச் செலுத்தினார். 


புகழ்பெற்ற பேச்சு
அடுத்து பால்டிமோர் டிவி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது,  விஐபிக்களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையயல்லாம் கற்றுக் கொண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ டிவி நிறுவனமே ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது. அங்கேதான் தனது  அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை  அரங்கேற்றினார். அது மிகப் பெரிய ஹிட். அப்போது  புகழ்பெற்றிருந்த பில் டொனாகு டாக் ஷோவை அது விஞ்சியது. டாக் ஷோவைத் தொகுத்து வழங்குவதில்  தனி ஆளுமையாக வளர்ந்த பின் ஹார்ப்போ  புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி,  தனது நிகழ்ச்சிகளைத் தானே தயாரித்தார். 

சமூக அங்கீகாரம் 
வரவேற்பறையில் அமர்ந்து இலகுவாக கலந்துரையாடுவது போன்று பிரபலங்களுடன் பேட்டி காண முடியும் என்பதை முதலில் சாத்தியப்படுத்தியது ஓப்ராதான். மற்றொருபுறம் அந்தப் பிரபலங்கள் தனிப்பட்ட வாக்குமூலங்களை வழங்கியதற்காகவும் புகழ்பெற்றது. தன்பால் 
உறவினர், திருநங்கைகள் உள்படச் சமூகத்தால்  புறக்கணிக்கப்பட்டோரைச் சமூகம் ஏற்றுக் கொள்ளச் செய்ததில் இவரது நிகழ்ச்சிக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஒருபுறம் சிறு வயதில் தான் அனுபவித்த கொடுமைகளை உரமாகக் கொண்டு, தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார் ஓப்ரா. அதேநேரம் தனது நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் குறித்து விவாதித்தார். அவரது முயற்சியால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறித்த தகவல் தொகுப்பை வெளியிடச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் ஓப்ரா லா. 


நலப்பணிகள் 
 தனது வருமானத்தின் பெரும் பகுதியை ஏஞ்சல் நெட்வொர்க் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் குழந்தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் படிப்புக்கும் அவர் உதவி வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரே பெண்கள் தலைமைப்பண்பு அமைப்பை நடத்தி வருகிறார். கறுப்பின மாணவிகளின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கல்வி நிறுவனம் அது

ஓப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கையைச் சொல்வதென்றால், இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான்.
  
"போராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் கிடைக்காது. உங்கள் மனக்காயங்களைப் புத்திக் கூர்மையாக மாற்றுங்கள் அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம்.”


நன்றி : தி இந்து 26.5.2014

புதன், 12 நவம்பர், 2014

பல்லவர்கள் தமிழரல்லர் என்பது தமிழினத்துக்குச்செய்யும் துரோகம்



பல்லவர்கள் தமிழரல்லர் என்பது
தமிழினத்துக்குச்செய்யும் துரோகம்

டாக்டர் மா.இராசமாணிக்கனார் என்பவர் பல்லவர் வரலாறு என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் பல்லவர் தமிழர் அல்லர்  என்றும் தமிழரில் வேறுபட்டவர் என்றும் எழுதுகிறார்.

பல்லவர்கள் யார்? பல்லவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? என்பதெல்லாம் தெரியவில்லை என்கிறார்.

வின்செண்ட் ஸ்மித் என்கிற இந்திய வரலாற்று ஆசிரியர் தனது  ‘பழைய இந்திய வரலாறு’ என்ற நூலில் பல்லவர்கள் தென் இந்தியர் என்று கூறியுள்ள கருத்தே பெரிதும் ஏற்கத் தக்கதாக இருக்கிறது என்றும் ராசமாணிக்கனார்  எழுதுகிறார்.

பல்லவர்கள் தமிழரல்ல என்று எழுதிவிட்டு;  பல்லவர்கள் தென் இந்தியர் என்ற வின்செண்ட் ஸ்மித் கூறும் கருத்தே ஏற்கத் தக்கதாக இருக்கிறது என்று ராசமாணிக்கம் கூறுவதிலிருந்து இவரது இந்தக் கருத்துக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று சந்தேகப்பட வைக்கிறது.

அது என்ன உள் நோக்கம்?

வின்செண்ட் ஸ்மித் பல்லவர்கள் தென் இந்தியர் எனக் கூறியிருப்பது பொதுவானதுதானே?

தென் இந்தியாவில் இருக்கும் தமிழர்களாகவோ; தெலுங்கர்களாகவோ; மலையாளிகளாகவோ; கன்னடராகவோ இருக்கலாம் என்ற பொருளுடையது தானே!

அப்படி இருக்கும்போது-

பல்லவர்கள் தமிழர் அல்லர் என்று கூறிவிட்டு; பல்லவர்கள் தென் இந்தியர் என்று கூறும் ஸ்மித் கருத்தை ஏற்கிறேன் என்கிறாரே ஏன் என்ற கேள்வி எழுகிறது?

வின்செண்ட் ஸ்மித் பல்லவர் தமிழர் அல்லாத மற்ற தென்னிந்தியர் என்று கூறாதபோது-

இவர் ஏன் பல்லவர் தமிழரில்லை என்று கூறித் தமிழரை ஒதுக்கிவிட்டு . பல்லவர் தென் இந்தியர் என்ற கருத்தை ஏற்கிறேன் என்கிறார்.

தமிழரை நீக்கிய பிறகு- தென் இந்தியர்களில் மிஞ்சி இருப்பவர் யார்? மலையாளி; கன்னடர்; தெலுங்கர் இவர்கள்தானே?

அப்படியானால் பல்லவர் மலையாளியா? கன்னடரா? தெலுங்கரா?

பல்லவர் சத்திரியர் என்று கதம்ப மயூரசன்மன் கூறியதாக தாளகுண்டாக் கல்வெட்டு கூறுகிறது என்றும்; தமிழ் வேந்தர்கள் ஆல்; வேம்பு; பனை இவற்றைத் தம் தமிழ் மரபுக்கு அடையாளமாகக் கொண்டதைப் போல ஆந்திர நாட்டில் இருந்து வந்த பல்லவரும் தமிழ்முறையைப் பின்பற்றி - பல்லவர் கொடி - தொண்டைக் கொடி என்பதால் தங்களைப் பல்லவர் என அழைத்துக் கொண்டனர் என்கிறார் ராசமாணிக்கனார்.

பல்லவர்களை ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர் என்ற தன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக . வின்செண்ட் ஸ்மித் கூறியபடி பல்லவர் தென் இந்தியர் என்பதே பெரிதும் ஏற்கத் தக்கது 

என்கிறார். பிறகு பல்லவர் தமிழரல்லர் எனக்கூறி தமிழரை பல்லவர் தென்னிந்தியர் என்ற வட்டத்திலிருந்து நீக்குகிறார்.


இதன் பிறகு-

ஆந்திராவிலிருந்து வந்தவர் பல்லவர் எனக கூறுவது அவருக்கு எளிதாகிவிடுகிறது. பல்லவர் ஆந்திரர் ஆக்குவதற்கு ராஜமாணிக்கனார் செய்த மிகப்பெரிய தகிடுதத்தம் இது. எனவே இவரது தகிடுதத்தத்தை அம்பலப்படுத்துவது நமக்கு அவசியமாகிறது.

பல்லவர் தமிழர் அல்லர் என்பதற்கு இவர் கூறும் காரணம் என்ன?

பல்லவர் காலப் பட்டயங்கள் அனைத்தும் பிராகிருத மொழியிலும்;  சமஸ்கிருத மொழியிலும் இருக்கின்றன. தமிழர் வழியில் வந்தவர்களாக இருந்திருந்தால் பட்டயங்களைத் தமிழில் எழுதாமல் தமிழ் மக்கட்கே புரியாத பிராகிருத மொழியிலும்; வடமொழியிலும்  எழுதியிருப்பார்களா என்கிறார்?

மேலும்; பல்லவர் ஆட்சியில் வடமொழிதான் கோலோச்சியது. வடமொழிப் புலவர்களான பாரவி; தண்டி போன்றோரே பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இதுவும் இது போன்ற காரணங்களாலும் பல்லவர் தமிழரல்லர் என்பதையும்; பல்லவர் தமிழரின் வேறு பட்டவர் என்பதையும் தெளிவாகக் காணலாம் என்கிறார் ராசமாணிக்கனார்.

தமிழர் மீதும் தமிழ் மொழி மீதும் அக்கறை கொண்டவர்போல காட்டிக் கொண்டு; பல்லவர் தமிழர் அல்லர் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ராசமாணிக்கனாருக்கு ஒரு கேள்வி?

இதே அளவுகோலை தெலுங்கர்களுக்குப் பொருத்தி;

இவர்கள் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கராயின்; தங்கள் பட்டயங்களைத் தெலுங்கில் எழுதாததை வைத்தும்; இவர்கள் ஆட்சியில் பிராகிருதமும் வடமொழியும் கோலோச்சியதை வைத்தும்; இவர்கள் ஆட்சியில் தெலுங்குப் புலவர்களை முன்னிறுத்தாததை வைத்தும் பாரவி; தண்டி போன்ற வடமொழிப் புலவர்களுக்கே செல்வாக்கு இருந்ததை வைத்தும் பல்லவர்கள் தெலுங்கர் அல்லர் என்ற அறிவிப்பை உங்களால் ஏன் வெளியிட முடியவில்லை ராசமாணிக்கனாரே?

எனவே-

நீங்கள் யார்? தமிழரா தெலுங்கரா? என்று  கேட்பது தவிர்க்க முடியாததாகிறது? இந்த ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முதலில் . உங்கள் நூலில் இருந்தே சில கேள்விகள்-

 தொண்டமான் இளந்திரையன் என்பவன்தான் பல்லவகுல அரசர்களில் முதலாம் அரசன் என இலங்கையின் சிறந்த வரலாற்று
ஆய்வாளரான இராசநாயகம் என்பவர் கூறியுள்ளதாக உங்கள் நூலில் கூறி இருக்கிறீர்கள் .

அந்த தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தமிழ் அரசன் என சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை சிறப்பிக்கின்றது.

ஆற்றுப்படை நூல்கள் என்பது . ஒரு மன்னனிடம் பரிசு பெற்று வந்து கொண்டிருக்கும் பாணன் எதிரிலே வரும் வேற்று பாணர்களை இன்ன மன்னனிடம் செல்லுங்கள் உங்கள் வறுமை நீங்கப் பரிசளிப்பான் எனக்கூறி ஆற்றுப்படுத்துவது தொடர்பான நூல்கள் என்பதே பொருள்.

எனவே ஆற்றுப்படை என்ற நூல்களை  எழுதுபவர்கள் பெரும்பாலும் அந்த ஆற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களாகவே இருப்பர்.

அந்த வகையில் -

பெரும்பாணாற்றுப்படை நூலின் தலைவனான தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். தொண்டைமான் இளந்திரையனை தமிழ் அரசன் என்று உருத்திரங் கண்ணனார்
கூறியதை ஏற்காமல்-

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வெளிநாட்டு நூலாசிரியரான வின்செண்ட் ஸ்மித் கூறிய பல்லவர் தென்னிந்தியர் என்ற கருத்தே ஏற்புடையதாக இருக்கிறது என- ராசமாணிக்கனார் கூறுவதற்கு என்ன காரணம்?

பல்லவர்களைத் தென் இந்தியர் என்று  ஆக்கினால்தான் அவர்கள் தமிழர்கள் இல்லை - என்று கூறவும்; பின்னர் அவர்களை ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர் என சாயம் பூசவும் வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான்- வின்செண்ட் ஸ்மித்தின் பல்லவர் தென்னிந்தியர் என்ற கருத்தே பெரிதும் ஏற்புடையது என்று கூறினீர்களோ ராசமாணிக்கம்?

அதிலும் உங்களுக்கு ஒரு சறுக்கல் இருக்கிறதே ராசமாணிக்கம்?

இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்செண்ட் ஸ்மித் என்பவர் தான் எழுதிய ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்  பதிப்பில் -

பல்லவர் என்பவர் பஹ்லவர் என்னும் பாரசீக மரபினர் என்று கூறுகிறார்.

இந்த நூலின் இரண்டாம் பதிப்பில் அதே ஸ்மித்; பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே  உரியவர் அவர்கள் கோதாவரிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராக  இருக்கலாம் என்று கூறுகிறார்.

அதே ஸ்மித் தன் நூலின் மூன்றாம் பதிப்பில் பஹ்லவர் என்ற சொல்லை பல்லவர் என்ற  சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ ஒப்புமையை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீக மரபினர் எனக் கூறியது தவறு; பல்லவர் என்பவர் தென்னிந்தியரே ஆவர் என்று கூறுகிறார்.

ஒரே நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் பல்லவர்க்கு வேறு வேறு இன அடையாளத்தை மாற்றி மாற்றி எழுதுகிற - வின்செண்ட் ஸ்மித்  எப்படி ஒரு நம்பகமான வரலாற்று ஆசிரியராக இருக்க முடியும்?

இது மட்டுமல்ல-

முதல் பதிப்பில் பல்லவர் பாரசீக மரபினர் என்று எழுதியதை மாற்றி-

இரண்டாம் பதிப்பில் வேங்கி நாட்டவராக இருக்கலாம் என்று எழுதிய பின்-

வேங்கி நாட்டவராக இருக்கலாம் என இரண்டாம் பதிப்பில் எழுதியதையும் மாற்றி;  மூன்றாம் பதிப்பில் வெறும் தென்னிந்தியர் என மாற்றி எழுதியதைப் போல-

வின்செண்ட் ஸ்மித் தன் நான்காம் பதிப்பின் போது உயிரோடு இருந்திருந்து; அவருக்குப் பெரும்பாணாற்றுப்படை நூலறிவு எட்டியிருந்தால்;

மூன்றாம் பதிப்பில் பல்லவர் தென்னிந்தியர் என எழுதியதை மாற்றி

நான்காம் பதிப்பில் பல்லவர் தமிழரே என்று எழுதியிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?
நல்ல வேளை-

நான்காம் பதிப்பு வரை அவர் உயிரோடு இல்லாமல் போனது-

பல்லவர்கள் தமிழரில்லை என்று கூறுவதற்கும்; பல்லவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனக்கூறி பல்லவர்களை தெலுங்கர்களாக்கி வரலாற்று மோசடி செய்வதற்கும் உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
·          
தொண்டைமான் இளந்திரையனை முதல் பல்லவ அரசனாகக் கொண்டு கி.பி.250 வாக்கில் தோன்றிய பல்லவர் பேரரசு கி.பி.900 வரை சுமார் 700 ஆண்டுகள் தமிழ்நாட்டில் நீடித்து நிலைத்த புகழோடு இருந்துள்ளது.

-கி.பி. 250 முதல் கி.பி 340 வரை ஆண்ட பல்லவர்கள் முற்காலப் பல்லவர்கள் எனவும்;

-கி.பி.340 முதல் கி.பி. 575 வரை ஆண்ட பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்கள் எனவும்.

-கி.பி.575 முதல் கி.பி.900 வரை ஆண்ட பல்லவர்கள் பிற்காலப் பல்லவர்கள் எனவும்-

உங்கள் நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட காலங்களில் மன்னர் மன்னர்களாக, பேரரசர்களாக இருந்த பல்லவர் ஆட்சிக்காலம்  கி.பி.900 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது.

இதற்குப் பின்னரும் -

பழைய தென்னாற்காடு மாவட்டப் பகுதிகளில் காடவர்கோன் என்ற பெயரில் ஆண்ட சிற்றரசர்களும்-

பழைய வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் சம்புவரையர்கள் என்ற பெயரில் ஆண்ட
சிற்றரசர்களும்-

பல்லவர் குல வழியினரே என்பதற்கு ஏராளமான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

காடவர்கோன் பட்டப் பெயரில் ஆண்ட சிற்றரசர்களில் ஐயடிகள் காடவர்கோன்
என்பவர்தான் முதல் சிற்றரசர்.

“வையம் திகழ் பல்லவர் குலத்துவந்த
மாமணி மாநிலம் முழுதும் மகிழ்ந்துகாக்கும்
ஐயடிகள் காடவர்கோன் அருளால்...”

என்கிற உமாபதி சிவவாக்கியர் பாடல் மூலம் காடவர்கள் என்ற பட்டப் பெயரில் ஆண்ட சிற்றரசர்களும் பல்லவர் குலத்தவரே என்பதுமேலும் உறுதிப்படுகின்றது. 

இந்த சிற்றரசர்கள் ஆட்சி ஏறத்தாழ கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றிருக்கிறது.

பேரரசர்களாகவும்; சிற்றரசர்களாகவும் இருந்து பல்லவர்கள் ஏறத்தாழ 12 நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு நீண்டகாலம் ஒரு வம்சத்தினர் ஒரு நாட்டை ஆண்டதற்கு பல்லவர் ஆட்சியைத் தவிர இந்திய வரலாற்றில் வேறு ஒரு உதாரணம் இல்லை.

மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு நாட்டிலிருந்து வந்த ஒரு வம்சத்தினரால்
தொடர்ந்து  12 நூற்றாண்டுகள் மற்றொரு நாட்டை ஆண்டதற்கு இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் சான்றுகள் ஏதுமில்லை.

வரலாறு இப்படி இருக்கையில்-

பல்லவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனக்கூறி தமிழர்களின்  12 நூற்றாண்டு கால பெருமை மிக்க வரலாற்றை தெலுங்கர்களுக்கு உரியதாக்க  ராசமாணிக்கம் போன்றோர்  முயல்வது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி?

இந்த மோசடியை ராசமாணிக்கனார் செய்யத் துணிந்ததற்கு இரண்டு காரணங்களை மட்டுமே நம்மால் யூகிக்க முடிகிறது.

ராசமாணிக்கம் தமிழரல்லாத தெலுங்கராக இருக்க வேண்டும். அதன் காரணமாகவே தமிழர்களின் 1200 ஆண்டுக்காலம் நீடித்த புகழ் கொண்ட பல்லவ தமிழராட்சியை தெலுங்கர் ஆட்சி எனக்கூறி தெலுங்கர்களுக்குப் புகழ் சேர்க்கும் வரலாற்று மோசடிக்கு ராசமாணிக்கம் முயன்றிருக்க வேண்டும் என்பது முதல் காரணம்.


இல்லை... இல்லை.. அவர் தமிழர்தான் என்றால் அவர் வன்னியர் விரோதியாக இருக்க வேண்டும். ஏன்?


பல்லவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.

கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்துப்பரணி 535ஆவது பாடலில் பல்லவர்  தோன்றலைப் பாடீரோ என்கிறார் ஜெயங்கொண்டார்.


இதே கருணாகரத் தொண்டைமானை சிலை எழுபது நூலின் 68ஆவது பாடலில்-

" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
 எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்


கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.

அதே தொண்டைமான் வன்னியர் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார். ஒரு கவிச்சக்கரவர்த்திக்கு இரு கவிச்சக்கரவர்த்திகள் பல்லவர் வன்னியரே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

காடவர்கள் என்ற பெயரில் ஆண்டவர்களும்

சம்புவரையர்கள் என்ற பெயரில் ஆண்டவர்களும்

பல்லவர்கள் என்ற பெயரில் ஆண்டவர்களும்

வன்னியர்கள் என்றால் தமிழகத்தை நீண்ட காலம் ஆண்ட பரம்பரை என்ற புகழ் வன்னியருக்குப் போய்விடுகிறதே.. இதை என்ன மோசடி செய்தேனும் மாற்றியாக வேண்டும் என நிறையபேர் தமிழ்நாட்டில் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

அவர்கள் எல்லோரும் எந்த பொய்யை சொல்லியேனும்; எந்த வரலாற்றுப் புரட்டை
செய்தேனும் வன்னியர்கள் தமிழர்கள் அல்லர் என்ற பொய்யை நிலை நாட்டிவிட வேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மன அழுக்காறு பிடித்த இந்த வன்னியர் விரோத கும்பலோடு சேர்ந்து . தானும் ஒரு
வன்னிய விரோதியே என்று காட்டிக் கொள்ளும் முயற்சியே . ராசமாணிக்கனாரின் பல்லவர்கள் தெலுங்கர்கள் என்ற வரலாற்று ஆய்வு மோசடி!

பல்லவத் தமிழர் வரலாற்றை தெலுங்கர் வரலாறாக்கியேனும் வன்னியர் பெருமையைக் குலைத்து விட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலே ராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு என்ற நூல்.

மகன் செத்தாலும் பரவாயில்லை. மருமகள் தாலியறுத்தே ஆக வேண்டும் என்ற வக்கிரம் வரலாற்று ஆய்வாளரான மா.ராசமாணிக்கனார் போன்றோருக்கு வருவது மிகப்பெரிய அவலம் மட்டுமல்ல இது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

- ந.இறைவன்