சனி, 13 ஏப்ரல், 2013

வைகோபால்சாமி நாயுடுவின் கூலி மேளமாகி கொட்டி முழக்கும் தமிழருவி மணியன்


ஜூனியர் விகடன் விளம்பரம் தருகிறது என்பதற்காக

வைகோபால்சாமி நாயுடுவின்
கூலி மேளமாகி
கொட்டி முழக்கும்
தமிழருவி மணியன்





"காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்'' என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேச்சு பற்றிய செய்திக் கட்டுரை ஒனறு 27.2.2013 நாளிட்ட ஜூனியர் விகடனிலும்,

""காதல் அறியாக் காதலர்கள்'' என்ற தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரை ஒன்று 10.3.2013 நாளிட்ட ஜூனியர் விகடனிலும் வெளிவந்துள்ளன.

இரண்டு கட்டுரைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.

*
காந்திய மக்கள் இயக்கம் நடத்தி வரும் தமிழருவி மணியன் இப்போது சாதி மத நல்லிணக்க மாநாடுகளை அதிகமாக நடத்தி வருகிறார் என்று கூறும் ஜூனியர் விகடன்;


""சாதிகள் இல்லையடா தமிழா'' என்ற தலைப்பில் பேசியதாகவும் சாதிகள் சாகாதவரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது. அதனால் முதலில் சாதியைச் சாகடிக்க வேண்டும் என்றும் பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சாதியைச் சாகடிக்க வேண்டும் என்று பேசுகிற ஒரு ஆள்; சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று மாநாடு நடத்துவது முட்டாள்தனமில்லையா?


சாதிகள் இருக்கட்டும் என்பவன்தான் சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் எனப் பாடுபடுவான். சாதிகளை சாகடிக்க வேண்டும் என்கிற ஒருவனுக்கு சாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தைப் பற்றிய கவலை எதற்கு?

சாதிகள் சாகாதவரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது என்கிற ஆள்... இது தமிழனுக்கு மட்டுமா? தெலுங்கன்; மலையாளி; கன்னடன் என்சிற அண்டை மாநிலத்தவருக்கும் சேர்த்து சொல்கிறாரா?
சாதி பேசியதால் தமிழன், மற்ற மொழிபேசும் தெலுங்கன்; மலையாளி; கன்னடனைப் போன்றவர்களைவிட எந்தெந்த வகையில் தாழ்ந்து கிடக்கிறான்?


சாதிமத நல்லிணக்க மாநாடு நடத்துகிற ஆள் - சாதி மட்டும் ஒழியவேண்டும் என்று பேசிவிட்டு; மதங்களும் ஒழியவேண்டும் என பேசாமல் ஒதுங்கிக் கொள்வது ஏன்?
சாதியைச் சாகடிக்க வேண்டும் என்பது போல - மதங்களை சாகடிக்க வேண்டும் என்று பேச தமிழருவி மணியன் துப்புக்கெட்டுப் போனது ஏன்?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல எவன் வேண்டுமானாலும் சாதி ஒழிய வேண்டும்; சாதியை சாகடிக்க வேண்டும் என பேசலாம் -


முஸ்லீம்களிடம் சென்று முஸ்லீம் மதத்தை முதலில் சாகடிக்க வேண்டும் என்று பேசுவாரா தமிழருவி மணியன்? பேசினால் அடுத்த நிமிடம் தமிழருவி மணியன் சாகடிக்கப்படுவாரா மாட்டாரா?
இந்தியாவில் சாதிக்கலவரங்களால் செத்தவர்களை விட, செத்துகக் கொண்டிருப்பவர்களை விட, மதக்கலவரங்களால் செத்தவர்களும் செத்துக் கொண்டிருப்பவர்களுமே அதிகம் என்பது தமிழருவி மணியனுக்கு தெரியாது என்றால்அவரைப்போல் படித்த முட்டாள் யாருமில்லை என்றே அர்த்தம்.
*
சாதியைச் சாகடிக்க இவர் சொல்லும் வழி என்ன? துருப்பிடித்து இற்று விழுந்து கொண்டிருக்கிற கலப்புத் திருமணம் என்கிற பெரியார் காலத்து துருப்பிடித்த பழைய இரும்பு.
கலப்புத் திருமணம் செய்து கொள்வதால் சாதிகள் ஒழிந்திருக்கிறதா? மணமகன் மணமகள் தேவை விளம்பரங்களை பாருங்கள் தலித் பார்ப்பன தம்பதிக்கு பிறந்த, நாயுடு - முதலி தம்பதிக்கு பிறந்த, வன்னியர் - பிள்ளைக்கு பிறந்த மணமகனுக்கு - மணமகளுக்கு வரன் வேண்டும் என்றுதானே விளம்பரங்கள் வருகின்றன. இது கலப்புத் திருமணத்தால் சாதிகள் செத்துவிட்டது என்பதற்கான அடையாளமா? யாரை ஏமாற்ற இப்படி புருடா விட்டு பிழைப்பு நடத்துகிறீர்கள்?
-
ராமதாசு நாடகக் காதல், அந்தக் காதல், இந்தக் காதல் என்று ஆய்வறிக்கை வாசிக்கிறார். யாராக இருந்தாலும் காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள் என்கிறார் மணியன்.


நாடகக் காதல் என்று ராமதாசு எப்போது பேச ஆரம்பித்தார்? தருமபுரி சம்பவத்திற்கு பிறகுதானே? படித்துக் கொண்டிருக்கும் மாணவியைக் கடத்தி சீரழித்துவிட்ட பிறகு... உங்கள் மகளை திருப்பி அனுப்பி விடுகிறோம். மூன்று லட்சம் கொடு நான்கு லட்சம் கொடு என்று பேரம் பேசிய சண்டாளக் கும்பலை எதிர்த்து சொன்ன சொல்தான் நாடகக் காதல் என்ற சொல்.

பெண்களைக் கடத்தி சீரழித்து - பணம் கேட்டு தூது அனுப்பி பிளாக் மெயில் செய்கிற கடத்தல் கும்பல் காம வெறியன்கள் செயலோடு காதலை சேர்த்து நாடகக் காதல் என்பதே கூட தவறான வார்த்தைப் பிரயோகம் தான்.

இந்த கடத்தல் கும்பலின் பிளாக் மெயில் நடவடிக்கைகளை எதிர்ப்பது காதலை எதிர்ப்பதா?

இந்த சந்தடி சாக்கில் தன் மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்திருப்பது குறித்த பீத்தல் வேறு? யார் வீட்டில் உன் மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்தாய்? ஒரு முதலியார் வீட்டில்தானே? ஒரு தலித் வீட்டில் திருமணம் செய்யவில்லையே? வாய் கிழிய பேசாதே.
இன்னும் ஒரு படி மேலே போய் என் மகளுக்கு மதம் மறுப்பு திருமணம் செய்திருக்கிறேன் என்கிறாயே; எந்த மதத்தில் மத மறுப்பு திருமணம் செய்திருக்கிறாய்? முஸ்லீம் மதத்திலா? இல்லையே. கிறிஸ்துவ மதத்தில் திருமணம் செய்வது நாடார் சாதிக்கு புதிதா என்ன? மத மறுப்பு திருமணம் என்கிறாயே.. மதம் மாறிய ஒரு தலித்துக்கா உன் பெண்ணைக் கொடுத்திருக்கிறாய்? இல்லையே. பிறகு எதற்கு இந்த பீத்தல்?
சும்மா சாதிகள் ஒழிய வேண்டும்; சாதிகள் சாக வேண்டும்; கலப்புத் திருமணம் செய்யுங்கள் அது இது என -


அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என வாரி வாரி நக்காதே - உடம்புக்கு ஆகாது.
*
10.3.2013 ஜூவியில் -

காரைக்கால் வினோதினி; ஆதம்பாக்கம் வித்யா; சீர்காழி மதியழகி இவர்கள் மீது அமிலத்தையும் பெட்ரோலையும் ஊற்றி அவர்களுடைய உயிரைப் பறித்த இளைஞர்கள் காதலாகிக் கசிந்துருகியவர்களா? விலங்கினும் கீழான இழிமக்கள் இல்லையா? இந்த அழிவை உருவாக்கும் சாத்தான்களுக்குத்தான் இன்று ஊரெங்கும் உற்சவம். என்று காதலறியா காதலர்கள் என்று கட்டுரை எழுதும் கபோதியே..

இதைத்தானேடா தர்மபுரி கலவரத்துக்கு காரணம் என்று சொன்னோம் நாங்கள்?

இதில் ஆசிட் ஊற்றியவன்; பெட்ரோல் ஊற்றியவன் என்பதில் ஒருவனும் தலித் இல்லை. இழிமக்கள்; சாத்தான்கள் என வார்த்தையைப் பொறுக்கிப் போட்டு கண்டிக்கும் தைரியம் அதனால் வந்ததோ உனக்கு?
இதில் திருமாவளவன் கும்பலைச் சேர்ந்த தலித் ஒருவன் இருந்திருந்தால் - கோழையே நீ இப்படி எழுதி இருப்பாயா?


போகட்டும் -

காதலித்த பெண்கள் மீது ஆசிட்; பெட்ரோல் ஊற்றி தீ மூட்டுபவன் மட்டும்தான் இழிமகன்கள் சாத்தான்களா?
காதலிக்கிறேன் எனக் கடத்திப்போய் கற்பழித்து சிதைத்து - தூது அனுப்பி பணப்பேரம் பேசுபவன் எல்லாம் உன் பார்வையில் இழிமகன் இல்லை? சாத்தான்கள் இல்லை? அவர்களை எதிர்த்து நீயும் பேச மாட்டாய்? அதை எதிர்ப்பவர்களை தூக்கி எரியசொல்லி கட்டளை இடுவாயோ?
நீயயல்லாம் ஒரு படித்தவன்? எழுத்தாளன்; தமிழ்அருவி என்ற வார்த்தையை சேர்த்து உனக்கு ஒரு பெயர் த்தூ... மானங்கெட்ட மனிதனே?

காரல் மார்க்ஸ் ஜென்னி காதல் குறித்தும்; ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிரபாவதி காதல் குறித்தெல்லாம் பேசும் தகுதி உனக்கில்லை என்பதை நீ முதலில் உணர்ந்து கொள்.

சாதிகள் சாகாதவரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது என்கிற நீ தமிழன் மேன்மையுற 2016இல் யாரை முதல்வராக்க பரிந்துரைக்கிறாய்? ஒரு தமிழனையா?

*
எதற்கெடுத்தாலும் பாரதி இதைச் சொன்னார்; பாரதிதாசன் அதைச்சொன்னார் என வாந்தி எடுக்கும் நீ..


""எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே'' 


என்று பாரதிதாசன் பாடியது உன் குருட்டுப் பார்வையில் படவில்லையோ? தமிழன் மேன்மையுற ஒரு தெலுங்கனைத்தான் பரிந்துரைப்பாயோ? நீயா தமிழ்ச்சாதி மேன்மையுறுவது பற்றிப் பேசுவது?
வைகோ எப்படிப்பட்ட தலைவன் என்பதை அவர் பின்னால் நம்பிப் போய் அவரது நாயுடு சாதி வெறியைப் பார்த்து சுவற்றில் அடித்த பந்துபோல் அந்த கட்சியை விட்டு திரும்பி வந்தவர்கள் யாரையாவது தெரியுமா? தெரியாது என்றால் கேள். முகவரிகளைத் தருகிறோம். அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்


ஜூனியர் விகடன் பக்கங்களை உனக்காக ஒதுக்கி வீணாக்குகிறது என்பதற்காக-

சும்மா
வை.கோபாலசாமி நாயுடுவின்
கூலி மேளமாகி கொட்டி முழக்காதே.
-ஆசிரியர் குழு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக