2014 -ம் ஆண்டிற்கான
“அமைதிக்கான நோபல் பரிசு”
வென்றவர்கள்!
பாகிஸ்தான் மலாலா
- இந்தியாவின் கைலாஷ்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும்;
இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தியும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள்.
பரிசின் மொத்தத் தொகை 6,90,000
பவுண்டுகள்.
அதாவது
6 கோடியே என்பது
லட்சம். இதனை இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மலாலா தனது 17-வது வயதில் இந்த நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இவர்தான் மிகவும் இளையவர் என்ற வரலாறும் படைத்திருக்கிறார்.
சுட்டிப் பெண் மலாலா
மலாலா மிகவும் சுட்டி யான, துறுதுறுப்பான அழகுக் குழந்தை. தந்தை யூசுப்சாய் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலே படித்தாள். அவளது சுவாத் கிராமம் மலை சூழ்ந்த, நதி பாயும், இயற்கை எழில் கொஞ்சும் இடம்.
2008ன் தொடக்கத்தில் அந்த கிராமத்தை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சவுக்கடி உள்ளிட்ட கடுமையானத் தண்டனைகள் விதித்தார்கள்.
பள்ளி செல்லத் தடை
ஒருநாள் தலிபான் அரசு வானொலி நிலையத்தைக் கைப்பற்றினார். ஜனவரி 15 முதல் சவாத் கிராமப் பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது. பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்லக்கூடாது என உத்திரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பல சிறுமிகள், பெண்கள் ஆட்டு மந்தைகளாக நடத்தப் பட்டனர்.
ஊடகத்தில் மலாலா
இத்தனையையும் பார்த்த 11 வயது பள்ளிச் சிறுமியான மலாலா தன் உள்ளக் குமுறலை 2009ம் ஆண்டில், பி.பி.சி நிறுவனத்தின் உருது மொழி இணையதளத்தில்,
குல மகாய் என்ற பெயரில் வெளியிட்டாள்.
தன் ஊர் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப் படுகிறது என்று உருக்கமாக விவரித்தாள்.
தொடர்ந்து தன்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும் என வலைப்பதிவு எழுதத் தொடங்கினாள்.
தாலிபான்கள் மலாலாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.
ஆனால் சளைக்காமல், பெண்கல்வி, குழந்தைத் திருமணம், சுகாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றி எழுதினாள்.
மீண்டும் பள்ளிக்கு..
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுடன் சண்டையிட்டு அவர்கள் பிடியிலிருந்து சவாத் கிராமத்தை மீட்டது. மீண்டும் மலாலா தன்னுடைய பள்ளிக்கே செல்லத் தொடங்கினாள்.
ஒருநாள் தாலிபான் படையை சேர்ந்த ஒருவன் பள்ளிப் பேருந்தில் ஏறினான். யார் மலாலா? யார் மலாலா? எனக்கேட்டு பதில் சொல்வதற்குள், துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு நெற்றிக்குள் நுழைந்து கழுத்து வழியாக இடது தோளுக்குள் பாய்ந்தது.
அதுபற்றி மலாலா கண் விழித்துப் பார்த்தபோது “நான் இங்கிலாந்தின் மருத்துவமனையில் கிடந்தேன்.
ஏழ நாட்களாகக் கோமாவில் இருந்தேன் எனச் சொன்னார்கள். உயிரோடு இருக்கிறேன் எனச் சந்தோஷமாக இருந்தது. ஆனால் என்னால் பேச முடியவில்லை.
என் கழுத்தில் குழாய் செருகப்பட்டிருந்தது. நான் பேப்பர், பேனா கேட்டேன். அதில் என் அப்பா எங்கே? யார் பில் கட்டுவார்கள்? என எழுதினேன்”
என்றார்.
ஐ.நா.சபையில் மலாலா பேசும்போது எதற்காகப் படிக்க வேண்டும் என்பது சுடப்பட்ட பிறகுதான் நன்கு புரிந்தது.
என்னைச் சுட்டவன், என்னுள் இருந்த பயத்தை முழுமையாகக் கொன்றுவிட்டான்.
இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
அனைத்துக் குழந்தைகளும், ஆனோ, பெண்ணோ கறுப்போ, வெள்ளையோ, கிருத்துவரோ, இஸ்லாமியரோ, பள்ளிக்குச் செல்லும் நாள் நிச்சயம் வரும் என்றார்.
“நான் மலாலா” என்ற தலைப்பில்,
ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறார் மலாலா. பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதி விருது மலாலாவுக்கு வழங்கப்பட்டது.
இன்று அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.
சிறுவர்களைக் காத்த கைலாஷ்
“நான் காலை 8 மணி முதல் அடுத்த நாள் காலை 1 மணி வரை நாள் முழுவதும் என் கால்களை ஒரு அங்குலம் அளவும் நகர்த்தாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வைத்துக் கொண்டி ருப்பேன். ஒரு காலைச் சற்றே அசைத்தால் கூட அடிப்பார்கள், வலியால் அழுது எங்களை விட்டு விடுங்கள் என்றால் முகத்தில் அறைவார்கள்”
என்கிறான் சிறுவன் ஆசிஃப்.
ஆசிஃப் குழந்தைத் தொழிலாளியாக வதைக்கப் பட்ட நிலையிலிருந்து கைலாஷ் சத்யார்த்தியின் அமைப்பால் மீட்டெடுக்கப்பட்டவர்களில் ஒருவன்.
நாம் ரசித்து அணியும் ஜரிகை வேலைப் பாடு கொண்ட துணிகளின் இழைகளுக்கு இடையில் சிக்குண்டுக் கிடக்கிறது இதுபோன்ற குழந்தைகளின் உழைப்பு.
மீட்புப்பணி
லட்சக்கணக்கான குழந்தைகள் தினம் தினம் கொத்தடிமைகளாகக் கடத்தப் படுகிறார்கள். விற்கப்படுகிறார்கள். குழந்தை அடிமைத்தனம் இப்படியாக நீடித்து வருவதைக் கண்டு கோபம் கொண்ட சத்யார்த்தி பச்சான் பச்சாவோ அந்தோலன் என்ற தனியார் சேவை நிறுவனத்தை
1990 தொடங்கினார்.
இந்த அமைப்பு தங்கள் குழந்தைகளை மீட்டுத் தருமாறு வேண்டுகிற பெற்றோர்களக்காகச் செயல்படுகிறது. சத்யார்த்தியோடு ஒத்த கருத்துக் கொண்ட இளைஞர் படை அவரோடு களத்தில் செயல்படுகிறது. முதலில் ரகசிய சோதனை மற்றும் மீட்புப்பணி
எனத் திட்டமிடுகிறார்கள். அடுத்து காவல்துறை மற்றும் சட்ட நிபுணர்களை உடன் அழைத்துச் செல்கின்றனர்.
அதிரடியாகக் குழந்தைகள் அடிமைப் படுத்தப்படும் தொழிற்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள். இந்தப் பணியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப் பட்டார். மற்றொருவர் அடித்துக் கொல்லப்பட்டார். ஆனால் இது போன்ற சவால்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு சத்யார்த்தியின் அங்கமாகவே மாற்றிக் கொண்டவர்தான் இந்த கைலாஷ் சத்தியார்த்தி.
“குழந்தை அடிமை நிலையை ஒழிக்கவே பச்சான் பச்சாவோ அந்தோலன் உருவாக்கப்பட்டது. அனைத்துக் குழந்தைகளும் தங்கள் குழந்தைப் பருவத்தை முழுமையாக கொண்டாட வேண்டும். இதுவே எங்கள் இலக்கு”
என்கிறார் சத்தியார்த்தி.
ரக்மார்க்
மலாலா தன் சாம்பலில் இருந்து மீண்டெழுந்து உயரப் பறக்கும் ஃபீனிக்ஸ் புராணப் பறவை போல் என்றால் சத்தியார்த்தியோ கூடுகளில் இருந்து தவறி விழுந்து சிறகொடிந்து போன குருவிகளை மீண்டும் பறக்கச் செய்பவர். சத்தியார்த்தி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர். தற்போது டில்லியில் வசிக்கிறார்.
தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க் என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார்.
நன்றி : தி இந்து நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக