ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பாமகவுக்கு ஒரு நியாயம்; அதிமுகவுக்கு ஒரு நியாயமா?

மரக்காணம் கலவரத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற டாக்டர் இராமதாசை கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. இதனைக் கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

18 ஆண்டு காலம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக தண்டனை பெற்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. இதனைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் செய்கிறார்கள்.

இரண்டும் ஒன்றல்ல.
 
முன்னது ஜனநாயகம் அனுமதித்துள்ள நடைமுறை.
பின்னது நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை.



இராமதாசின் கைது, ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது.
ஜெயலலிதா கைது சட்டப்படியான தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.

இராமதாஸ் கைது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை ஜெயலலிதா அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது ‡கலவரத்தில் ஏற்பட்ட இழப்பை பாமகவினரிடமிருந்து வசூலிக்க வேண்டுமெனக் கூறி பாதிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் வருவாய்த் துறை ஆணையரிடம் இழப்பீடு குறித்து விண்ணப்பிக்க வேண்டுமென ஜெயலலிதா அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஜனநாயக நடைமுறைப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததைக் கண்டித்து செய்யப்பட்ட போராட்டத்திற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது. இழப்பீடுகளை பாமகவினரிடமிருந்து வசூலிக்க வேண்டுமென அரசு உத்தரவு என்றால் ‡நீதிமன்றம் மூலம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக போராட்டம் நடத்தியவர்களை எத்தனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது?

அவர்கள் கலவரத்தால் எரிக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் தொடர்பாக ஏற்பட்ட இழப்பினை அதிமுகவினரிடமிருந்து வசூலிக்க ஜெயலலிதாவின் பினாமி அரசு எப்போது உத்தரவிடப் போகிறது?



ஜெயலலிதாவைவிட ஊழலில் திளைத்த கருணாநிதி குடும்பத்தினர் கைதாகவில்லையே ‡ சிறையில் அடைக்கப்பட வில்லையே என்ற ஆதங்கம் அதிமுகவினருக்கு இருப்பது நியாயமானதே. ஆனால் ‡கருணாநிதி மீதான குற்றங்கள் ஒன்று கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லையே?

காலம் வரும் அவரது ஊழலும் தண்டணைக்குள்ளாகும். இதைக் காரணமாக வைத்து ஜெயலலிதா புனிதமானவர் எனக்கலவரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக