செவ்வாய், 28 அக்டோபர், 2014

தெலங்கானா தனி மாநிலம் தமிழ்நாட்டுக்குப் பாடம்


தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை முன்னேற்றுவதற்குப் போதிய அளவு நிதியை அரசு ஒதுக்குகிறது. 

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக இருக்கிற -
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
பெரம்பலூர்
தருமபுரி
அரியலூர்
ஆகிய வடதமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கின்றன தமிழக அரசுகள்.

தெலங்கானா பிரிவினைக்கு பண்பாடு; மொழி ஆகியவற்றை விட தெலங்கானாவின் பின்தங்கிய நிலையும் முன்னேற்றம் என்பதே இல்லாத புறக்கணிப்புமே காரணம்.

தமிழ்நாட்டிலும் 

வடதமிழ்நாட்டில் உள்ள  6 மாவட்டங்களை தமிழ்நாட்டின் எல்லா அரசுகளும் புறக்கணித்தே வந்துள்ளன. தமிழ்நாட்டில் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை இல்லை என்றாலும் ‡ வடக்கு மாவட்டங்களுக்கும் தெற்கு மாவட்டங்களுக்கும்
இடையிலான ஏற்றத் தாழ்வுகள் தொடர்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் வல்லுநர்கள்.

திருவண்ணாமலை; கடலூர்; விழுப்புரம்; பெரம்பலூர்; அரியலூர்; தருமபுரி மாவட்டங்கள் நிலையை முன்னேறிய மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டால் இந்த மாவட்டங்கள் முன்னேறிய மாவட்டங்களின் பின்னால் நொண்டி அடித்துக்கொண்டுதான் கிடக்கின்றன.

தருமபுரியில் கல்வியறிவு  68.5 சதவீதமாக இருக்கின்றது. எல்லா மாவட்டங்களை விடவும் இதுதான் கடைசியில் இருக்கின்றது என்கிறது புள்ளி விபரம்.

அரசு தென் மாவட்டங்கள் முன்னேற்றத்திற்கு மிக நன்றாகவே உதவுகிறது ‡ ஆனால் வடமாவட்டங்களை ஏறத்தாழ புறக்கணித்து ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக உள்ள இந்த பின்தங்கிய மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கோ இந்த மாவட்டங்களின் தனி மாநில நிலைக்கோ பாட்டாளி மக்கள் கட்சி அரசின் கவனத்தை ஈர்க்கும் கோரிக்கை
எதுவுமற்று இருக்கிறது.


மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டங்கள் கல்வி அறிவிலும் இதர முன்னேற்றங்களிலும் பின்தங்கி இருந்தாலும் ‡ மது விற்பனையில் மட்டும் முன்னிலை வகிக்கின்றன.

இந்த மாவட்டங்கள் ‡சுய முன்னேற்றத்திற்கு வழி ஏதுமில்லை.

 அதிக அளவில் பள்ளிகள்; கல்லூரிகள்; ஆரம்ப சுகாதார நிலையங்கள்; அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசே ஏற்படுத்தி இப்பகுதி மக்கள் முன்னேற்றத்திற்கு உதவி புரிய வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்கிறார் சென்னைப் பல்லைக் கழக பொருளாதார வல்லுநரான ஆர்.சீனிவாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக